Cochliobolus sativus
பூஞ்சைக்காளான்
அறிகுறிகளானது சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் தாவர வளர்ச்சி நிலை ஆகியவற்றை சார்ந்து இருக்கும். சில சந்தர்ப்பங்களில், நோயால் பாதிக்கப்பட்ட விதைகள் அழுகிய நாற்றுகளுக்கு வழிவகுக்கும், மேலும் இவை இளம் தாவரங்களில் கரும் பழுப்பு நிறப் பகுதிகளாக காணப்படும். முதிர்ந்த தாவரங்களில் ஆரம்ப கால நோய் தொற்றுகளானது, இலைப் பரப்பு மற்றும் பக்கக்கன்றுகளின் எண்ணிக்கை குறைவு போன்றவற்றை தவிர வேறு எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், கரும் பழுப்பு நிறப் பகுதிகள் தண்டுகள் அடிப்பகுதியில் (அடி அழுகல்) அல்லது நிலத்திற்கு அடியில், மற்றும் கணுவிடைப்பகுதிகளில் மற்றும் வேர்களில் (வேர் அழுகல்) காணப்படும். பின்னர், நோய் கிருமி தண்டுகளுக்குப் பரவும் போது, இலைகளின் அடிப்புறத்தில் பழுப்பு - கரும் புள்ளிகள் காணப்படும். இது குறிப்பாக நீண்ட கால மழைக் காலங்களில் தெளிவாக காணப்படும். நோய் பாதிக்கப்பட்ட தாவரங்கள் வயல்களில் ஆங்காங்கே அல்லது திட்டுக்களாக காணப்படும், மேலும் அவை வளர்ச்சி குன்றியும், வெளிறிய தோற்றதுடன் காணப்படும். பிந்தைய நோய் தொற்றுகள் பொதுவான அறிகுறிகளானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதிர்க்கிளைகள் அல்லது முழு கதிர்க்கிளைகளும் முன்கூட்டியே வெளிறிய நிறமாகுதல் ஆகும்.
காக்லியோபோலஸ் சட்டிவஸ் என்னும் பூஞ்சையின் இயற்கை எதிரி ஸ்போரோபோலோமைசஸ் ரோஷியஸ் என்னும் பூஞ்சையாகும். இது தாவரங்களில் நோய் ஏற்படுவதையும், மற்றும் அதன் தீவிரத்தை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோய்க்கிருமியின் பிற எதிர்ப்பாளர்கள் கூட உள்ளன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பொருத்தமான பூஞ்சைக் கொல்லிகளுடனான விதை சிகிச்சையானது மற்றப் பருவத்தில் விதைக்கும் விதைகளின் மீது பரவும் திறனை குறைக்கும்.
இந்த நோய்க்கான அறிகுறிகளானது காக்லியோபோலஸ் சட்டிவஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது சூடான மற்றும் ஈரப்பதமான தானியங்கள்-வளரும் பகுதிகளில் பொதுவாக காணப்படும். இது பூஞ்சை இழை அல்லது வித்துக்களாக மண் மற்றும் பயிர்க் கழிவுகளில் வாழும். மேலும் இவை காற்று, மழை துளிகள் அல்லது பாசன நீர் மூலம் ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவும். பார்லி, கோதுமை மற்றும் கம்பு தவிர, இது பல வகையான களைகள் மற்றும் புல்களை பாதிக்கிறது. புல்லரிசி இந்த நோய்க்கு எதிர்ப்பு திறனை கொண்டிருந்தாலும், இந்த நோய்க்காரணிகள் பரவுவதற்கு உதவுகிறது. நோய்ப்பாதிப்பு ஏற்படக்கூடிய புரவலன்கள் இருந்து, நிலைமைகள் சாதகமானதாக இருக்கும்போது, இந்த வித்துக்கள் முளைத்து, இளம் தாவரங்கள் அல்லது அதன் வேர்களில் முக்கிய தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. இது மேல்தோல் மூலமாக அல்லது இயற்கை துளைகள் அல்லது காயங்கள் வழியாக தாவர திசுக்களினுள் செல்கிறது. பாதிக்கப்பட்ட விதைகள் அல்லது விவசாயக் கருவிகளும் நீண்ட தொலைவிற்கு நோய்கிருமியை பரவச் செய்து, பின்னர் அந்த இடத்தில் விளைவிக்கும் பயிர்களுக்கு மூலமாக இருக்கிறது. இந்த பூஞ்சையின் வாழ்க்கை சுழற்சிக்கு வெதுவெதுப்பான வானிலை உகந்ததாகும் (உகந்த வெப்பநிலை 28-32 டிகிரி செல்ஸியஸ் ஆகும்)

Put your product in front of farmers the moment they diagnose வேர் மற்றும் அடி அழுகல் நோய் — right when they need a solution.
Explore
Explore the live agronomic data that powers Plantix disease pages.
Discover