சோளம்

Sorghum bicolor


நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
100 - 105 நாட்கள்

தொழிலாளர்
இடைப்பட்ட அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 8.5

வெப்பநிலை
15°C - 40°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு


சோளம்

முன்னுரை

இரட்டை நிற சோளம் என்ற புல் இனம் முதலில் ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது, இப்போது உலகெங்கிலும் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. உணவு, கால்நடை தீவனம் மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தி ஆகியவை தானியத்தின் முக்கிய பயன்பாடுகள் ஆகும். சோளம் பிரதான உணவு பயிராக முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சில வற்றாத சாகுபடிகள் நடைபெற்றாலும், பொதுவாக வருடாந்திர பயிராக வளர்க்கப்படுகிறது.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

களை மற்றும் பூச்சியின் தீவிரத்தை குறைக்க விதைப்பதற்கு முன் வயலில் உழவினை மேற்கொள்ள வேண்டும். மண்ணை உழுதல் விதை முளைப்பு விகிதத்தையும் அதிகரிக்கிறது, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் அரிப்பைத் தடுக்கிறது. சோளம் உறைபனிக்கு உணர்திறன் கொண்டது, எனவே உறைபனி முடிந்த பிறகு விதைப்பினை மேற்கொள்ள வேண்டும். மேலும், விதைகள் முளைப்பதற்கு அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் தேவை. நடவு செய்யும் போது நிலவும் வறட்சி முளைப்பு வீதத்தை குறைக்கும்.

மண்

வலுவான பிரதான உணவு பயிரான சோளம் முக்கியமாக அதிக களிமண் உள்ளடக்கம் கொண்ட ஆழமற்ற மண்ணில் வளர்க்கப்படுகிறது, ஆனால் அதிக மணற்பாங்கான இடங்களிலும் அவற்றால் உயிர்வாழ முடியும். இது பரந்த அளவிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவு அளவை பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் கார மண்ணிலும் வளரக்கூடியது. இந்த தாவரம் நீர் தேக்கம் மற்றும் வறட்சியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தாங்கக்கூடியது, ஆனால் நன்கு வடிந்த மண்ணில் சிறப்பாக வளரும்.

தட்பவெட்பநிலை

27 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான பகல்நேர வெப்பநிலையுடன் சூடான பகுதிகளில் சோளம் சிறப்பாக வளரும். பயிரின் வேர்கள் போதுமான அளவு வளர்ச்சி அடைந்துவிட்டால், செயலற்ற நிலையில் அதனால் வறட்சியை தாங்கிக்கொள்ள முடியும், மேலும் சாதகமான சூழல் ஏற்படும்போது அதன் வளர்ச்சி மீண்டும் தொடங்கும். வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் சோளத்தினை 2300 மீட்டர் வரையான உயரத்தில் வளர்க்கலாம். சாகுபடியைப் பொறுத்து நீர் தேவைகள் வேறுபடுகின்றன, ஆனால் பொதுவாக மக்காச்சோளத்தை விட குறைவாக இருக்கும்.

வரக்கூடிய நோய்கள்

சோளம்

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!


சோளம்

Sorghum bicolor

சோளம்

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

இரட்டை நிற சோளம் என்ற புல் இனம் முதலில் ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது, இப்போது உலகெங்கிலும் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. உணவு, கால்நடை தீவனம் மற்றும் உயிரி எரிபொருள் உற்பத்தி ஆகியவை தானியத்தின் முக்கிய பயன்பாடுகள் ஆகும். சோளம் பிரதான உணவு பயிராக முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சில வற்றாத சாகுபடிகள் நடைபெற்றாலும், பொதுவாக வருடாந்திர பயிராக வளர்க்கப்படுகிறது.

முக்கிய தகவல்கள்

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
100 - 105 நாட்கள்

தொழிலாளர்
இடைப்பட்ட அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 8.5

வெப்பநிலை
15°C - 40°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு

சோளம்

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

களை மற்றும் பூச்சியின் தீவிரத்தை குறைக்க விதைப்பதற்கு முன் வயலில் உழவினை மேற்கொள்ள வேண்டும். மண்ணை உழுதல் விதை முளைப்பு விகிதத்தையும் அதிகரிக்கிறது, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் அரிப்பைத் தடுக்கிறது. சோளம் உறைபனிக்கு உணர்திறன் கொண்டது, எனவே உறைபனி முடிந்த பிறகு விதைப்பினை மேற்கொள்ள வேண்டும். மேலும், விதைகள் முளைப்பதற்கு அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் தேவை. நடவு செய்யும் போது நிலவும் வறட்சி முளைப்பு வீதத்தை குறைக்கும்.

மண்

வலுவான பிரதான உணவு பயிரான சோளம் முக்கியமாக அதிக களிமண் உள்ளடக்கம் கொண்ட ஆழமற்ற மண்ணில் வளர்க்கப்படுகிறது, ஆனால் அதிக மணற்பாங்கான இடங்களிலும் அவற்றால் உயிர்வாழ முடியும். இது பரந்த அளவிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவு அளவை பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் கார மண்ணிலும் வளரக்கூடியது. இந்த தாவரம் நீர் தேக்கம் மற்றும் வறட்சியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தாங்கக்கூடியது, ஆனால் நன்கு வடிந்த மண்ணில் சிறப்பாக வளரும்.

தட்பவெட்பநிலை

27 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான பகல்நேர வெப்பநிலையுடன் சூடான பகுதிகளில் சோளம் சிறப்பாக வளரும். பயிரின் வேர்கள் போதுமான அளவு வளர்ச்சி அடைந்துவிட்டால், செயலற்ற நிலையில் அதனால் வறட்சியை தாங்கிக்கொள்ள முடியும், மேலும் சாதகமான சூழல் ஏற்படும்போது அதன் வளர்ச்சி மீண்டும் தொடங்கும். வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் சோளத்தினை 2300 மீட்டர் வரையான உயரத்தில் வளர்க்கலாம். சாகுபடியைப் பொறுத்து நீர் தேவைகள் வேறுபடுகின்றன, ஆனால் பொதுவாக மக்காச்சோளத்தை விட குறைவாக இருக்கும்.

வரக்கூடிய நோய்கள்