Phthorimaea operculella
பூச்சி
பிற கிழங்குவகை பயிர்களிலும் இப்பூச்சிகள் ஊட்டம் பெறுகின்றன, ஆனால் அவற்றிற்கு உருளைக் கிழங்குகளின் மீது ஆர்வம் அதிகம். இளம் உயிரிகள் உருளைக் கிழங்கின் இலைகள், தண்டுகள், காம்புகள் மற்றும் முக்கியமாக கிழங்குகளைத் (வயலிலும் அல்லது சேமிப்பகத்திலும் ) தாக்குகின்றன. அவற்றிற்கு உட்புற திசுக்கள் உண்ணத் தகுந்தவை ஆனால் மேலடுக்கு தேவையில்லை, மேலும் இவை தெளிவாகத் தெரிகின்ற கொப்புளங்களை உருவாக்கும். தண்டுகள் வலுவிழக்கும் அல்லது உடைந்துவிடும், இதனால் தாவரம் அழிந்துவிடும். கிழங்குகளின் கண் பகுதிகளின் வழியே உள்ளே செல்லும் பூச்சிகள் மெல்லிய சுரங்கங்கள் போன்று கிழங்குகளின் மேற்பரப்பில் அல்லது கிழங்குகளின் சதைப் பகுதியில் ஒழுங்கற்ற அடுக்குகள் போன்று ஏற்படுத்துகின்றன. நுழைவுப் பகுதிகளில் இளம் உயிரிகளின் கழிவுகளை எளிதில் காண முடியும், இவை பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா நோய்களுக்கு ஏதுவாக அமையும்.
ஆரஞ்சு தோலில் இருந்து கிடைக்கும் சாரங்கள் மற்றும் பிதுரந்தோஸ் டார்டோசஸ் அல்லது இபியோனா ஸ்காப்ரா போன்றவை பூச்சிகளின் இனவிருத்தியினை குறைக்கக் கூடியவை. ப்ரகோன் ஜெலிச்சியா, கோபிடோசோமா கொயிலேரி அல்லது டிரைகோக்ராம்மா போன்றவற்றின் குளவிகள், பூச்சிகளின் எண்ணிக்கையினை குறைக்க வல்லவை. எறும்புகள், பெண் பறவைகள் போன்றவை கூட இவற்றின் எதிரிகளாகும். கிரானுலோவைரஸ் அல்லது பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றினை பயன்படுத்துவதன் மூலம் இருவாரங்களில் 80% பூச்சிகளை அழிக்கலாம். சில நாடுகளில், சேமிப்பு காலத்தில் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க சாக்குகளை யூகலிப்டஸ் இலைகள் அல்லது லன்டானாவினைக் கொண்டு மூடிவிடுகின்றனர்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கரிம பாஸ்பேட் கொண்ட பூச்சிக் கொல்லிகளை இலைகளில் தெளிக்கலாம். பைரேத்ராய்டுகளை தடுப்பான்களாக இலைகளில் பயன்படுத்துவதன் மூலம் இளம் உயிரிகளை எதிர்க்க முடியும்.
முதிர்ந்த பூச்சிகள், சாம்பல் நிற நீளமான உடலுடன் நீளமான உணர்ச்சிக் கொம்புகளைக் கொண்டுள்ளன. சிதறிய கரும்புள்ளிகளுடன் குறுகிய பழுப்பு நிற முன் இறக்கைகள், வெளிர் சாம்பல் நிற பின் இறக்கைகள் நீளமான எல்லைப் புறங்களுடன் இருக்கும். பெரும்பாலும், இவை இரவில் வெளிவரக்கூடியவை எனவே வெளிச்சத்தினால் கவரப்படுபவை. உலர்ந்த மண்ணில், தனியாக அல்லது கொத்துக்களாக, இலைகள் அல்லது வெளியில் வந்த கிழங்குகளின் மொட்டுக்களில் முட்டைகளை இடுபடுகின்றன. 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குறைவான வெப்பநிலை நிலவும் வரை முட்டைகளில் இருந்து இளம் உயிர்கள் வெளிவராது. இளம் உயிர்கள் அடர் பழுப்பு தலை மற்றும் வெளிர் பழுப்பு முதல் இளஞ்சிவப்பு வரையிலான வண்ணத்தில் உடல் பகுதியினையும் கொண்டிருக்கும். இவை காம்புகள், இளம் தளிர்கள் அல்லது இலைகளின் நரம்புகள், பின்னர் கிழங்குகளின் உள்பகுதி என தாவரத்தின் பல்வேறு பகுதிகளில் துளையிட்டு ஒழுங்கற்ற சுரங்கங்கள் போன்ற பகுதிகளை உருவாக்குகின்றன. 25 டிகிரி செல்சியஸ் என்பது அவற்றிற்கு ஏதுவான வெப்பநிலையாகும், இருப்பினும் 15 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் அவை உயிர்வாழும். உலர்ந்த மண்ணில் வெடிப்புகள் ஏற்படுவது இவை வாழ்வதற்கு ஏதுவானது ஆகும்.

This page is powered by millions of live Plantix diagnoses. Build plant-disease detection like this into your own products with the API Toolkit, part of Plantix Intelligence.