கரும்பு

கரும்பின் தேமல் நோய்

SCMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • முறையான தேமல் தழும்புகள் இளம் இலைகளின் கூரிய பகுதிகளில் காணப்படும்.
  • நரம்புகளுக்கு இணையாக குறுகிய வெளிரிய கோடுகள் உருவாகும்.
  • முதிர்ந்த இலைகளில் சிதைவுகள் தோன்றும்.
  • முதிர்ந்த இலைகள் சிவப்பு நிற பகுதிகள் உருவாகும்.
  • தண்டுகள் தரிசாகும், வளர்ச்சி குன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்


கரும்பு

அறிகுறிகள்

இளம் பயிர்களில் அறிகுறிகள் நன்றாக காணப்படும். பாதிக்கப்பட்ட பயிர்கள், தனித்துவமான தேமல் தழும்புகளை, இளம் பச்சை முதல் மஞ்சள் நிற தழும்புகளாக சாதாரண பச்சை வண்ணத்தின் மீது தோற்றுவிக்கும். சிலவேளைகளில் தேமல் தழும்புகள் இளம் இலைகளின் கூரிய பகுதிகளில் காணப்படும். இவை நரம்புகளுக்கு இணையாக குறுகிய வெளிரிய கோடுகளாக அமைந்திருக்கும். சில சமயங்களில், இளம் தண்டுகளிலும் தேமல் கோடுகள் காணப்படும். பின்னர், இலைகள் பொதுவான வெளிரிய தோற்றத்தினை ஏற்படுத்தும் மற்றும் கோடுகள் தாகி, எண்ணிக்கையில் பெருகும். பயிர் முதிர்ச்சியடையும்போது, பாதியளவு சிவப்பு நிறமாதல் அல்லது இலைகளின் கூரிய பகுதிகளில் சிதைவுகள் போன்றவை தோன்றும். நோய் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தினைப் பொறுத்து, பயிர்களின் வளர்ச்சி மிகவும் மோசமாக குறையலாம் அல்லது முற்றிலும் வளர்ச்சி நின்றுவிடலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நிலத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ்க்கான களைகள் போன்ற ஆற்றல் மிக்க புரவலன்களை கட்டுப்படுத்தவும். வைரஸை பரவச் செய்து, ஆரோக்கியமான பயிர்களை பாதிக்கும் இந்தச் சிறிய பேன் போன்ற பூச்சிகள் இருப்பதை கண்காணித்து, அவற்றினைக் கட்டுப்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்தச் சிறிய பேன் போன்ற பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் தேவையில்லாத வேலை, பூச்சிக்கொல்லிகள் இவற்றுக்கு எதிராக திறன்பட செயல்படாது.

இது எதனால் ஏற்படுகிறது

சிறிய பேன் போன்ற பூச்சிகள் பயிர்களில் ஊட்டம் பெறுவதன் மூலம் வைரஸை பரப்புகின்றன. இவை ஆரோக்கியமான பயிர்களைக் கூட இரண்டு நாட்களில் பாதித்துவிடுகின்றன. இயந்திர பரிமாற்றம் மூலம் ஒரு பயிரிலிருந்து மறு பயிருக்கு பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளது. வைரஸ் பயிர்களில் ஏற்படும் காயங்கள் மூலமும் கூட பரவும். கத்தி அல்லது பிற கருவிகள் மூலம் இவை பரவுவது இல்லை ஏனெனில் பயிர் திசுக்களில் இருந்து வெளியேறிய உடனே வைரஸ் அழிந்துவிடும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்பு வகை பயிர்களை பயிரிடவும்.
  • நோயினால் பாதிக்கப்படாத பயிர்களை, சான்றிதழ் அளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெற்று அவற்றினை பயிரிடவும்.
  • சிறிய சிறிய பூச்சிகளை உண்ணும் பயன் தரும் பூச்சிகள் நிலத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும்.
  • களத்தில் வேலை செய்யும்போது பயிர்களுக்கு பாதிப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க