முலாம்பழம்

வளையப்புள்ளி வைரஸ் நோய்

PRSV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • பழங்களின் மீது கரும்பச்சை நிற வளையங்கள்.
  • இலைகளில் மஞ்சள் நிறத்திட்டு அமைப்பு.
  • அடிமரம் மற்றும் தண்டுகளில் நீர்தோய்த்த புள்ளிகள் மற்றும் கோடுகள்.

இதிலும் கூடக் காணப்படும்

6 பயிர்கள்

முலாம்பழம்

அறிகுறிகள்

நோய் தொற்று ஏற்படும் போது தாவரங்களின் வயது, தாவரங்களின் வீரியம் மற்றும் வைரஸின் வலிமையை பொறுத்து நோய்க்கான அறிகுறிகள் சற்று மாறுபடும். இலைகளில் கரும்பச்சை நிற கொப்புளம் போன்ற அமைப்புகள் முதலில் காணப்படும். பின்னர் அவை பச்சை நிறத்தின் பல்வேறு நிழல்தரத்தில் ஒழுங்கற்ற வடிவமாக உருவாகும். நோய்களின் பிந்தைய நிலைகளில், இலைகள் குறுகு நீள்படிவம் கொண்ட தோற்றத்துடன், மஞ்சள் மற்றும் பழுப்பு சிதைந்த புள்ளிகளுடன் நிறத்திட்டு போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இலைகளின் அளவு கணிசமாக குறைந்து, குன்றிய வளர்ச்சி மற்றும் சிறிய கவிகைகளை கொண்டிருக்கும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் நீர்தோய்த்த வெளிறிய புள்ளிகள் மற்றும் எண்ணெய் கோடுகள் காணப்படும். பாதிக்கப்பட்ட பழங்கள் அதிகமான கரும்பச்சை, பெரும்பாலும் நீர்தோய்த்த, எண்ணெய் வளையப் புள்ளிகளுடன், அளவு குன்றி, உருக்குலைந்த வடிவத்துடன் காணப்படும். ஆரம்ப காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டால், பழங்கள் விற்பனை ஆகாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அசுவினிகள் மூலம் வைரஸின் தாக்குதல் மற்றும் அவை பரவுவதைத் தடுக்கவும், 1% செறிவுள்ள வெள்ளை எண்ணெய் பால்மங்களை தெளிக்கவும். சில வகையான பாக்டீரியா, பூஞ்சைகள், ஆக்டினோமைசெட்டெஸ் மற்றும் ஒளிச்சேர்க்கை பாக்டீரியா உள்ளிட்ட நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் கலவைகள் நோய் ஏற்படுவதை குறைக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் தொற்றுகளுக்கு நேரடி இரசாயன சிகிச்சை எதுவும் இல்லை. எனினும், டை-மீதோயேட் அல்லது அசாதிராச்டின் இலைவழி தெளிப்பான்கள் அசுவினிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும். முதல் அறிகுறிகள் தென்பட்ட பிறகு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தெளிப்பான்கள் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸ் பல வகையான அசுவினிகள் மூலம் தொடர்ச்சியாக அல்லாமல் அங்கும் இங்குமாக பரவுகிறது. இந்த வைரஸ் அசுவினிகளில் இனப்பெருக்கம் செய்யாததால், ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு குறுகிய காலத்தில் (ஒரு நிமிடத்திற்கும் குறைவாக) பரவுகிறது. இந்த வைரஸிற்கு தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பல்வேறு மாற்று புரவலன்கள் உள்ளன, ஆனால் அவற்றுக்கு விருப்பமான இலக்கு பப்பாளியாகும். இந்த நோய்த்தொற்று, இறக்கைகள் கொண்ட அசுவினிகள் அதிகமாக இருக்கும் காலத்தோடு இணைந்தால், இது தோட்டத்தில் வெகு விரைவாக பரவக்கூடும். குளிர்ந்த வானிலை இலைகளின் அறிகுறிகளை மோசமடையச் செய்யும் (நிறத்திட்டு அமைப்பு மற்றும் உருக்குலைவு).


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட விதைகளை பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கிறதா என தேடிப்பார்க்கவும்.
  • நோய் தாக்கம் இல்லாத பகுதிகளில் நடவு செய்யவும்.
  • தோட்டத்தை சுற்றி மக்காச்சோளம் அல்லது ஹைபிஸ்கஸ் சப்டாரிபா போன்ற புரவலன் அல்லாத பயிர்களை நடவு செய்யவும்.
  • அதே பகுதியில் சுரைக்காய் மரத்தை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • பூச்சிகளின் உச்ச நிலை தாக்குதலை தவிர்க்க நடவு செய்யும் காலத்தை சரிசெய்யவும்.
  • வைரஸ் பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை நீக்கவும்.
  • வயல்வெளி மற்றும் அவற்றை சுற்றியுள்ள களைகளை அகற்றவும்.
  • வைரஸ் பரவுவதைத் தவிர்க்க வலைகளை பயன்படுத்தி பூச்சிகளை தடுக்கவும்.
  • மோசமான அறிகுறிகளைத் தவிர்க்க நல்ல உரமிடும் முறையை உறுதிப்படுத்துங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க