உளுந்து & பச்சை பயிறு

வேர்க்கடலையின் மொட்டு அழுகல் நோய்

GBNV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் இலைகள், சிறிய வெளிறிய பல்வேறு நிறங்கள் கொண்ட புள்ளிகளாக தோன்றி பின்னர் வெளிறிய மற்றும் சிதைந்த வட்டப்புள்ளிகளாகவும், கோடுகளாகவும் உருவாகும்.
  • இந்த பாதிப்பு பெரிதாக விரிவடைந்து இலைக்காம்பு, தண்டுகள் மற்றும் மொட்டுக்கள் வரைத் பரவும்.
  • பாதிக்கப்பட்ட செடியின் வளர்ச்சி சிறியதாகவும், உருக்குலைந்த இலைகள் கொண்டதாகவும், பொதுவான பச்சைய சோகையுடனும் காணப்படும்.
  • சிறிய சுருங்கிய விதைகள் சந்தைப்படுத்துதலுக்கு தகுதியற்றவை அத்துடன் விளைச்சலின் தரத்தினையும் அவை குறைக்கும்.


உளுந்து & பச்சை பயிறு

அறிகுறிகள்

இளம் இலைகளின் மீது சிறிய வெளிறிய பல்வேறு நிறங்களுடன் புள்ளிகள் காணப்படுவது இந்நோயின் ஆரம்ப அறிகுறியாகும், பின்னர் இவை வெளிறிய மற்றும் சிதைந்த வட்டப்புள்ளிகளாகவும், கோடுகளாகவும் மாற்றமடையும். இந்த பாதிப்பு பெரிதாக விரிவடைந்து இலைக்காம்பு, தண்டுகள் மற்றும் மொட்டுக்கள் வரை படரும். இதன் காரணமாக மலரின் மொட்டுக்கள் அழுக கூடும், அதனால்தான் இந்த நோய் மொட்டு அழுகல் நோய் எனும் பெயர் பெற்றது. மிதமான உயர் வெப்பநிலை இந்நோய்க்கு சாதகமான சூழ்நிலையாகும். பாதிக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சி குன்றுதல், பொதுவான பச்சைய சோகை, தண்டுப்பகுதிகளின் பெருக்கத்தில் பிரச்சினைகள் மற்றும் புதிய இலைகள் உருக்குலைதல் போன்றவை காணப்படும். முளைகள் பலவண்ண புள்ளிகளுடன், நிறமற்று, சிறிய, சுருங்கிய புள்ளிகளுடன் கூடிய விதையை கொண்டிருக்கும். ஆரம்ப நிலையிலேயே தாவரங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், விளைச்சல் இழப்புகள் ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சோளம் அல்லது தென்னை ஓலையில் இருந்து எடுக்கப்பட்ட சாறினை விதைத்தலுக்குப் பின்னர் 20 நாட்கள் வரை தெளிப்பதன் மூலம் நோய்பரப்பி பூச்சிகளின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்த இயலும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சாத்தியமான உயிரியல் சிகிச்சைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும்.வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு இரசாயன சிகிச்சைகள் சாத்தியம் இல்லை. இருப்பினும், நோய் பரப்பிகளான இலைப்பேன்களைத் தடுக்கும் சில சிகிச்சைகள் உள்ளன. டைமெத்தோனேட் அல்லது தியாமேதோக்ஸ்சாம் போன்ற பூச்சிக்கொல்லிகளை விதைத்தலுக்குப் பின்னர் 30 முதல் 35 நாட்கள் வரை தெளிப்பதன் மூலம் மொட்டு அழுகல்நோய் ஏற்படுவதை பெரும்பாலும் குறைக்க முடியும். இமிடாகுளோபிரிட் 2 மில்லி / கிலோ விதை கொண்டு விதை சிகிச்சை செய்வதும் இலைப்பேன்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மொட்டு அழுகல் நோய் ஒருவகை வைரஸினால் ஏற்படும் நோயாகும். இவை செடிகளுக்கிடையே பரவும் தன்மை கொண்டது. செடிகளின் நோய் தொற்றானது, செடிகளின் திசுக்கள் மற்றும் சாறினை உண்ணும் சில பூச்சிகளைச் (இலைப்பேன் பால்மி) சார்ந்து இருக்கும். வேர்க்கடலை செடிகள் இல்லாதபட்சத்தில் நிலத்தினை சுற்றியுள்ள மற்ற புரவலன் பயிர்களை இந்த பூச்சிகள் நாடுகின்றன. இதற்கு தென்னிந்திய மஞ்சள் வண்ண மலர்கள் கொண்ட செடிகள்(டகேட்ஸ் மினுட்டா) மற்றும் நிலத்தடி தீவனப்புல் (டிரைபோலியம் சப்டெர்ரனீன்) போன்றவை எடுத்துக்காட்டுக்களாகும். எனவே இது போன்ற செடிகளை அழிப்பது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நெருக்கமான பயிரிடல் மூலமும் இலைப்பேன் போன்ற பூச்சிகள் வேர்க்கடலை செடிகளில் பரவுவதைக் குறைக்க இயலும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் உங்கள் சந்தைகளில் கிடைத்தால் அவற்றினை வாங்கி வளர்க்கலாம்.
  • ஆரம்பகாலத்தில் விரைவாக விதைப்பது அதிகப்படியான நோய் பரப்பும் பூச்சிகளைக் குறைக்கும்.
  • நோய் பரப்பிகளின் வளர்ச்சியினைத் தடுக்க அதிக அடர்வுடன் பயிரிட்டிருப்பதை உறுதி செய்யவும்.
  • சோளம் மற்றும் தினை வகைகளை ஊடு பயிராக பயிரிட்டு நோய் பரப்பிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
  • பச்சைப் பயறு மற்றும் உளுந்து போன்ற எளிதில் பாதிக்கக்கூடிய பயிர் வகைகளை நிலக்கடலை பயிர்செய்யும் வயல்களுக்கு அருகே பயிரிடுவதை தவிர்க்கவும்.
  • நோய் பரப்பிகளுக்கு சாதகமாக இருக்கக் கூடிய புரவலன் பயிர்கள் மற்றும் களைகளை நீக்கவும்.
  • முதல் நோய் அறிகுறி தென்பட்ட அடுத்த ஆறு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர் கழிவுகளையும் நிலத்திலிருந்து நீக்கிவிட வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க