தக்காளி

தக்காளியின் பூனைமுக/வெடிப்பு நோய்

Physiological Disorder

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • பூப்பூக்கும் பருவக்காலத்தின் இறுதியில், பழங்களில் கடுமையான உருச்சிதைவு, வடுக்கள் மற்றும் வெடிப்புகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

பூனை முக நோய் என்பது ஒரு உடலியல் கோளாறு ஆகும், இது பூப்பூக்கும் காலத்தின் இறுதியில், பழங்களில் உருச்சிதைவு மற்றும் வடுக்களை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டப் பழங்கள் சற்று சிறுவட்டப்பிரிவுகளாக காணப்படும். சதைகளுக்குள் ஆழமாக விரிவடைந்த தக்கை போன்ற பழுப்பு நிற வடுக்கள் பல்வேறு சிறுவட்டப்பிரிவுகளுக்கு இடையே தோன்றும். இந்த நோயை தக்காளி பழங்களில் ஏற்படக்கூடிய பொது மையங்களை உடைய அல்லது சுற்றளவு உடைய வெடிப்புக்களுடன் குழப்பிக்கொள்ள கூடாது. பூனை முக நோயால் பாதிக்கப்பட்டப் பழங்களை விற்க முடியாதபோதிலும், அருவருப்பான முறையில் வடிவம் கொண்ட பழங்கள் இன்னும் அதன் சுவையை கொண்டிருக்கும், மற்றும் இவற்றை பாதுகாப்பாக உண்ண முடியும். இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்களாவது, பூக்கும் காலங்களில், இரவு நேரத்தில் 12 ° செல்சியசிற்கும் குறைவான வெப்ப நிலை கொண்ட குளிர்ச்சியான வானிலை, அதிக தழைச்சத்து அளவுகள் மற்றும் களைக்கொல்லிகள் ஏற்படுத்தும் காயங்களாகும். மிகப்பெரிய பழங்களை கொண்ட தக்காளி செடி வகைகள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்த நோய்க்கு செயல்படுத்த எளிதாக இருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கமுடியும். இருப்பினும், இந்த நோயை தூண்டிவிடும், களைக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குறிப்பாக, எளிதில் பாதிக்கக்கூடிய வகைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

தக்காளிகளில் பூனைமுக நோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், பொதுவாக பெரிய பழங்களை கொண்ட தக்காளி செடி வகைகளில் இது அடிக்கடி ஏற்படுகிறது. பூ மொட்டு வளர்ச்சியின் போது தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நிலவும் குறைவான இரவு வெப்பநிலை (12 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதற்கு குறைவாக) இந்த உடலியல் கோளாறுதான் தொடர்புடையது, இது ஒரு வேளை பூக்களின் மகரந்த சேர்க்கை நிறைவு செய்யப்படாமல் இருக்கும்போது ஏற்படலாம். இந்த வெப்பநிலை மாற்றங்களுக்கு சில வகைகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடும். பூ மொட்டு வளர்ச்சிக்கான மற்ற தடைகளும் பூனைமுக நோய்க்கு வழிவகுக்கும். மலர்க்காதுகளுக்கு ஏற்படும் காயம், கடுமையான சீர்திருத்தம் அல்லது சில களைகொல்லிகளை (2, 4-டி) பயன்படுத்துதல் ஆகியவற்றினாலும் பழங்களின் உருச்சிதைவு ஏற்படலாம். சமசீரற்ற தழைச்சத்து வழங்கியதனால் ஏற்படும் அதிகப்படியான பழங்களின் வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். இறுதியாக, இலைப்பேன்கள் ஏற்படுத்தும் சேதங்கள் அல்லது தக்காளி சிறிய இலை என அழைக்கப்படும் நிலை போன்றவற்றின் விளைவாகவும் பூனைமுக நோய் ஏற்படலாம்.


தடுப்பு முறைகள்

  • வெப்பநிலை மாற்றங்களுக்கு மிகவும் சகிப்புத்தன்மையுள்ள தாவர வகைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • இந்த நிலைக்கு வழிவகுக்கும் களைக்கொல்லிகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும்.
  • பூ மொட்டுகளின் வளர்ச்சியின் போது தொடர்ந்து வெப்பநிலையை கண்காணிக்கவும்.
  • வயலில் பணி செய்யும் போது, தாவரங்களுக்கு காயங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • உரமிடுவதற்கு முன் மண்ணில் உள்ள நைட்ரஜன் அளவுகளை கண்காணியுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க