அரிசி

சிவப்பு பட்டை நோய்

Gonatophragmium sp.

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • ஆரம்பத்தில், குண்டூசி அளவில், மஞ்சள் பச்சை முதல் பிரகாசமான ஆரஞ்சு வரையிலான புள்ளிகள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.
  • இலைகள் வளரும்போது, இந்தப் புள்ளிகளில் இருந்து இலையின் விளிம்பினை நோக்கி சிவப்பு பட்டைகள் அல்லது கோடுகள் உருவாகும், பொதுவாக ஒரு இலைக்கு ஒன்று அல்லது இரண்டு கோடுகள் இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

தாவரங்கள் இனப்பெருக்க நிலையை அடையும்போது, அதாவது கதிர்கள் உருவாக ஆரம்பித்ததிலிருந்து இந்த நோய் பொதுவாக ஏற்படுகிறது. ஆரம்பத்தில், குண்டூசி அளவில், மஞ்சள் போன்ற பச்சை நிறம் முதல் வெளிர் ஆரஞ்சு நிறம் வரையிலான புள்ளிகள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும். நோய் வளரும்போது, சிதைவுகள் இலை நுனிகளை நோக்கி இலை உறைகள் நெடுகிலும் நீட்டப்பட்டு, சிவப்பு பட்டைகள் அல்லது கோடுகளாக உருவாகும். சிதைவுகள் சிதைந்து, ஒன்றிணைந்து, இலைகளுக்கு கருகிய தோற்றத்தினை கொடுக்கும். இந்த அறிகுறிகள் ஆரஞ்சு இலை கருகல் நோயுடன் ஒத்துப்போவதால் குழப்பமடையலாம் மற்றும் நோயின் கடுமையான தாக்கத்தில், பாக்டீரியா இலை கருகல் நோயின் முற்றிய நிலைகளிலிருந்து இவற்றினை பெரும்பாலும் பிரித்தறிய முடியாது. இருப்பினும், சிவப்பு பட்டை நோயில் பொதுவாக, ஒரு இலைக்கு ஒன்று அல்லது இரண்டு சிதைவுகள்தான் இருக்கும் மற்றும் அவை இலை விளிம்புக்கு செல்லும் பட்டையில் ஆரஞ்சு நிற புள்ளிகளை கொண்டு காட்சியளிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு தற்போது எவ்வித சிகிச்சை முறைகளும் இல்லை. நீங்கள் ஏதேனும் அறிந்திருந்தால் அவற்றைத் தயவு செய்து எங்களுக்குத் தெரிவிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தியோபனேட் மெதைல் போன்றவற்றைக் கொண்ட தெளிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோயினைத் திறம்பட கட்டுப்படுத்த முடியும்.

இது எதனால் ஏற்படுகிறது

கோனடோப்ராக்மியம் எனும் பூஞ்சையின் பேரினத்தினால் இந்த நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. விதைத்தல் பருவத்தில் இருந்தே நோய்க்காரணிகள் அவற்றில் இருந்தாலும், தாவரங்கள் இனப்பெருக்க நிலையை அடையும்போது தான் அறிகுறிகள் உருவாக ஆரம்பிக்கும். அதாவது கதிர்கள் உருவாகும்போது இருந்து தொடங்குகிறது. அதிகப்படியான வெப்பநிலை, அதிகமான ஒப்பு ஈரப்பதம், அதிக இலை ஈரப்பதம் மற்றும் அதிகமான நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவது போன்றவை நோய் மேம்பாடு அடைய ஏதுவான சூழ்நிலைகளாகும். நோய்க்காரணிகள் பயிரின் திசுக்களில் நுழைகிறது மற்றும் நச்சுப்பொருட்களை உருவாக்குகிறது, இவை இலையின் விளிம்பு வரை இலையின் நரம்புகளின் வழியே செல்கிறது, இதன்மூலம் வழக்கமான கோடுகள் உருவாகின்றன. தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில், அரிசி உற்பத்திக்கு மிகவும் அச்சுறுத்தலாக சிவப்பு நிறப் பட்டைகள் அமைந்துள்ளது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகள் கிடைத்தால் வளர்க்கவும்.
  • பயிர்களுக்கு இடையே போதிய இடைவெளிவிட்டு பயிரிடுவது மற்றும் விதைப்பின் அளவு சரியான அளவில் உள்ளது போன்றவைகளை உறுதிசெய்து கொள்ளவும்.
  • நோய் அறிகுறிகளுக்கான அடையாளங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.
  • நைட்ரஜன் உரங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.
  • கதிர்கள் வளரத் தொடங்கும்போது, இடைவிடாத வடிகால் முறையினை சரியாகப் பயன்படுத்தினால் நோயின் வளர்ச்சி குறையும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க