Anguina tritici
மற்றவை
சில சந்தர்ப்பங்களில், ஏ. டிரிடிசியால் பாதிக்கப்பட்ட தாவரங்கள் எந்த வெளிப்படையான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. அறிகுறிகள் தென்படும் தாவரங்களில், மேல்புறத்தில் உப்பிய திட்டுக்கள் மற்றும் கீழ்ப்புறங்களில் விளிம்பு உள்தள்ளல் போன்றவற்றுடன் லேசாக உருக்குலைந்த இலைகள் காணப்படும். சுருக்கங்கள், முறுக்கங்கள் மற்றும் ஓரங்களில் இருந்து மையநரம்பை நோக்கி சுருண்டு கொள்ளுதல் அல்லது பிற வகையான சிதைவுகள் போன்றவை பிற அறிகுறிகளுள் அடங்கும். தாவரங்கள் வெளிர் பச்சை அல்லது வெளிறிய நிறமாகி, வளர்ச்சி குன்றி அல்லது குட்டையாக காணப்படும், தண்டுகள் வளைந்து காணப்படும். ஒழுங்கற்ற கோணத்தில் உமிகளைக் கொண்டிருக்கும் கதிர்கள் வெளிவந்து சிறியதாக காணப்படும். இந்த அறிகுறிகள் புல்லரிசி வகை தானியங்களில் தென்படாது. சில விதைகள் கட்டிகளாக/கற்களாக மாறி, அவற்றுள் உலர்ந்த நூற்புழு கூட்டங்கள் காணப்படும். இந்த கட்டிகள் சிறியதாகவும், தடிமனாகவும், ஆரோக்கியமானதை விட இலகுவாகவும் இருக்கும் மற்றும் அவற்றின் நிறம் இவை வளருகையில் வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து கரு நிறமாகும் (மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திற்கு பதிலாக).
விதைகளை சாதாரண உப்புக் கரைசலில் போட்டு (5 லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிலோ விதை) நன்கு கிளறலாம். இந்த கரைசலில், நோயுற்ற விதைகள் மற்றும் கழிவுகள் மேற்பரப்பில் மிதக்கும், பின்னர் இவற்றை சேகரித்து, வேகவைத்து, கொதிக்கவைத்து அல்லது இரசாயன சிகிச்சை அளித்து நூற்புழுக்களை கொன்றுவிடலாம். கொள்கலனில் அடியில் தங்கியிருக்கும் ஆரோக்கியமான விதைகளை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் பல முறை கழுவி, விதைப்பதற்கு அவற்றை உலர்த்தலாம். விதைகளை 54-56° செல்சியஸ் சூடான நீரில் 10-12 நிமிடங்களுக்கு ஊறவைத்தும் நூற்புழுக்களைக் கொள்ளலாம். இறுதியாக, விதைகளை விட கற்கள்/கட்டிகள் லேசாக இருப்பதால் சலித்தல் போன்ற இயந்திர முறைப்படியும் இந்த கற்களை அகற்றலாம். விதைகளை சுத்திகரிப்பதைப் போன்று நூற்புழுக்கொல்லி தாவரங்கள் ஏ.டிரிடிசியை திறம்பட கட்டுப்படுத்துவதில்லை.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்த நோய் பூச்சிக்கு பரிந்துரைக்கப்படும் இரசாயன சிகிச்சைகள் எதுவும் இல்லை. விதை சுத்திகரிப்பு மற்றும் விதை சான்றிதழ் திட்டங்கள் மூலம் இந்த நோயை ஒழிக்கலாம். இந்த கற்கள் அல்லது கட்டிகளை (விதையை விட லேசான மற்றும் குறைவான அடர்த்தியை கொண்டது) மிதத்தல், சூடான நீர் சிகிச்சைகள் அல்லது ஈர்ப்பு அட்டவணை விதை செயலாக்கம் போன்றவற்றின் மூலமும் ஒழிக்கலாம்.
இந்த நோய்க்கான அறிகுறிகளானது அங்குய்னா டிரிடிசி என்னும் நூற்புழுக்களால் ஏற்படுகிறது. இளம் புழுக்கள் தண்ணீர் படலங்கள் மூலம் தாவரங்களில் குடியேறி, வளர்த்திசுக்களை தாக்கி, மஞ்சரிகளில் ஊடுருவும். கோதுமை, புல்லரிசி வகை மற்றும் பார்லி அரிசி போன்றவை இவற்றின் முக்கிய புரவலனாகும், ஆனால் ஓட்ஸ், சோளம் மற்றும் மக்காசோளம் இவற்றின் புரவலன்கள் அல்ல. முதிர்ச்சியடைந்த விதைக்குள் இவை சென்றுவிட்டால், இவை கற்களாக/கட்டிகளாக மாறுவதைத் தூண்டி, அதனுள் தங்கி, முதிர்ந்த புழுக்களாக உருவாகுகின்றன. இனச்சேர்க்கைக்குப்பிறகு, பெண் புழுக்கள் அந்த விதை கற்களினுள்ளேயே முட்டைகளை இடும். இந்த முட்டைகள் பின்னர் உலர்ந்து, அடுத்த வசந்த காலம் வரை செயலற்றதாக மாறும். நடவு செய்யும் போது மற்றும் அறுவடையின் போது விதைகளுடன் இந்த விதை கற்களும் சிதறும். ஈரமான மணல் மற்றும் தண்ணீரை அடையும்போது இந்த நூற்புழுக்கள் தனது வாழ்க்கைச் சுழற்சியை மீண்டும் தொடங்கும். குறிப்பாக, குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான வானிலை இதன் வளர்ச்சிக்கு சாதகமானதாகும்.

This page is powered by millions of live Plantix diagnoses. Explore the live agronomic intelligence behind this page with Plantix Intelligence.