அரிசி

பையோம்பலேரியா நத்தைகள்

Biomphalaria spp.

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • அரிசிப் பயிர்களின் மீதான சேதங்கள் பொதுவாகக் குறைவாகவே உள்ளது.
  • இவற்றின் சில நத்தைகள் ஒட்டுண்ணிகளுக்கு இடைநிலை புரவலனாக இருக்கின்றன, இது மனிதர்களையும் பாதித்து, ஸ்கிஸ்டோசோமியாசிஸ் என்றழைக்கப்படும் நோயையும் ஏற்படுத்துகிறது.
  • உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தவிர்ப்பதற்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அவசியம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

அரிசி பயிர்களின் மீதான சேதங்கள் பொதுவாகக் குறைவாகவே உள்ளது. இவற்றில் சில நத்தைகள், எ.கா.பி கிளாப்ரேட்டா ஒட்டுண்ணிகளுக்கு இடைநிலைப் புரவலனாக இருக்கின்றன, இது மனிதர்களையும் பாதிக்கிறது, இந்த நத்தை மனிதர்களுக்கு மருத்துவ ரீதியாக முக்கியமான பூச்சியாக இருக்ககூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஒட்டுண்ணி ஸ்கிஸ்டோசோமியாசிஸ் என்றழைக்கப்படும் நோயை ஏற்படுத்துகிறது, இந்த நோய் ஒட்டுண்ணிகளை (ஏரிகள், குளங்கள், ஆறுகள், அணைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் அரிசி வயல்கள்) சுமந்து இருக்கும் நத்தைகள் வசித்திருக்கும் அசுத்தமான குடிநீருடன் மனிதத் தொடர்பு மூலம் பரவுகிறது. இதன் பரவலானது பாசனக் கால்வாய்கள், நீரோடைகள், வடிகால்கள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் மூலம் முக்கியமாகப் பரவுகிறது. எனினும், நீரூற்றுகள் மற்றும் கிணறுகளில் உள்ள நீரின் சிறப்பு வேதியியல் காரணமாக, இவை பொதுவாக நத்தைகள் மூலம் காலனித்துவப்படுத்தப்படுவது இல்லை. உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தவிர்ப்பதற்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அவசியம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குளங்களில் மீன் இருப்பது, உதாரணமாக திலேபியா அல்லது குபீஸின் இனங்கள், பயோம்பலேரியாவின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். குளங்களின் மீன் மேலாண்மையானது அவற்றை ஸ்கிஸ்டோசோமியாஸ் இடைநிலைப் புரவலன்களில் இருந்து விடுவிப்பதில் மிகவும் முக்கியமாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மனிதர்களுக்கு ஸ்கிஸ்டோசோமியாசிஸ் என்பவற்றுக்கு எதிரான சிகிச்சையின் பிரதான முதன்மை வடிவமாக பிராசிகுவாண்டெல் என்றழைக்கப்படும் கலவை உள்ளது. ஒரு வேளை மருந்தானது நோய்த்தொற்றின் சுமை மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தன்மை ஆகியவற்றைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மீண்டும் ஏற்படக்கூடும் என்பதால் , அசுத்தமான தண்ணீரில் மீண்டும் வேலை செய்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை. பரவும் சுழற்சியை உடைக்க நத்தைகளின் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.

இது எதனால் ஏற்படுகிறது

அரிசி தாவரங்களுக்கு ஏற்படும் சேதங்களானது, பையோம்பலேரியா இனத்தின் காற்றைச் சுவாசிக்கும் நன்னீர் நத்தைகளால் ஏற்படுகிறது. பையோம்பலேரியாவின் அனைத்து இனங்களும் இருபால் உயிரினங்களாகும், இவை ஆண் மற்றும் பெண் உறுப்புகள் இரண்டையும் கொண்டு மற்றும் சுய அல்லது குறுக்கு கருத்தரித்தல் திறனைக் கொண்டுள்ளது. முட்டைகள் 5-40 என்ற எண்ணிக்கையில் இடைவெளி விட்டு கொத்துக்களாக இடப்படுகின்றன, ஒவ்வொரு தொகுதியும் ஜெல்லி போன்ற பொருட்களால் மூடப்பட்டுள்ளது. இளம் நத்தைகள் அவற்றின் இனங்கள் மற்றும் சுற்றுசூழல் நிலைமைகளைப் பொறுத்து, 6-8 நாட்கள் கழித்து முட்டைகள் இடுகின்றன, மேலும் இவை 4-7 வாரங்களில் முதிர்ச்சி அடைகின்றன. வெப்பநிலை மற்றும் கிடைக்கும் உணவு ஆகியவை மிகவும் முக்கியமான கட்டுப்படுத்தும் காரணிகளாக உள்ளன. ஒரு நத்தையானது அதன் வாழ்நாள் முழுவதும் 1000 முட்டைகள் வரை இடுகின்றன, இது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும்.


தடுப்பு முறைகள்

  • இந்த நத்தைகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • இந்தப் பருவத்துடன் இணைத்து சிறந்த களப்பயிற்சிகளையும் பின்பற்றுதல் வேண்டும்.
  • இந்த நத்தை மனிதர்களுக்கு மருத்துவ ரீதியாக முக்கியமான பூச்சியாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க