குடைமிளகாய் & மிளகாய்

நூற்புழுக்கள்

Nematoda

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • குன்றிய வளர்ச்சி.
  • இலைகள் மஞ்சள் நிறமாகுதல், வாடுதல், உருக்குலைந்து போகுதல்.
  • வேர் முடிச்சுகள் அல்லது கட்டி போன்ற அமைப்பு.
  • வேர் அமைப்பின் சீர்க்குலைவு.
  • தண்டுகளும் பாதிக்கப்படலாம்.
  • மிகச்சிறிய அளவிலான நூற்புழுக்கள்.

இதிலும் கூடக் காணப்படும்

40 பயிர்கள்
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
விதையவரை
மேலும்

குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

நூற்புழுக்களினால் ஏற்படும் நோய்த்தொற்றானது, குறிப்பிட்ட வகை இனங்கள், அவற்றின் எண்ணிக்கைகள் மற்றும் புரவலன் ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறு வகையான சேதங்களை காட்டும். சில நூற்புழுக்கள் தங்கள் புரவலன் செடிகளின் வேர் உற்பத்தியை அதிகரிப்பதோடு, வேர் முடிச்சுகள் அல்லது வேர் கட்டமைப்புகளையும் உருவாக்குகிறது. மற்றவை விரிவான வேர் காயங்கள் மற்றும் வேர்களின் உட்புற திசுக்களில் சீரழிவையும் ஏற்படுத்தும். பல சந்தர்ப்பங்களில், பூஞ்சை அல்லது மண் பாக்டீரியாக்களால் இரண்டாம் நிலை தாக்குதல்களும் இந்த காயங்களில் ஏற்படுகின்றன. தண்ணீர் மற்றும் சத்துக்கள் தாவரங்களின் காற்றில் அசையும் பாகங்களை அடையாது. பாதிக்கப்பட்ட தாவரங்களில் வளர்ச்சி குன்றும் மற்றும் அவற்றின் இலைகள் மஞ்சள் நிறமாகி வாடுதல் மற்றும் உருக்குலைவு போன்ற அறிகுறிகளும் இருக்கும். சில நேரங்களில் தண்டுகளும் பாதிக்கப்படுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் சில சந்தர்ப்பங்களில் வேலை செய்யலாம். உதாரணமாக, தானியங்களில் சில நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்/கட்டுப்படுத்தவும் பூஞ்சை நெமாட்டோபோரா கினோபிலா மற்றும் வெர்டிகில்லியம் க்ளமிடோஸ்போரியம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சூரியகாந்தி (டகெட்ஸ் படுலா) மற்றும் காலெண்டுலா (காலெண்டுலா ஆஃபீசினலிஸ்) ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இவற்றுக்கான சிகிச்சைகள் நூற்புழுக்களின் வகையைப் பொறுத்து அமையும். இந்தப் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க மண் புகையூட்டிகளாக நூற்புழுக் கொல்லிகளை (டாஜோமெட்) பயன்படுத்தலாம், ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் இது பயனுள்ளதாக இல்லை. இவற்றில் சில பொருட்களை இலைத்தொகுதி தெளிப்பான்களாகவும் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நூற்புழுக்கள் என்பது பெரும்பாலும் மண்ணில் வாழும் நுண்ணிய வட்டவடிவிலான புழுக்களாகும், அங்கு அவை புரவலன் தாவரங்களின் வேர்களில் தொற்றினை ஏற்படுத்தும். பொதுவாக, இவை பயனளிக்கும் உயிரினங்களாக இருக்கின்றன, இருப்பினும் அவற்றின் எண்ணிக்கை ஓரளவு அதிகரிக்கும்போது, அவை தாவரங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தும். அவற்றில் காணப்படும் கூர்மையான அலகினால் அவை வகைப்படுத்தப்படுகிறது. அவை அவற்றைப் பயன்படுத்தி வேர்கள் மற்றும் தாவரங்களின் அடிப்பாகங்களில் ஊடுருவும். சில நேரங்களில் இலைகள் மற்றும் பூக்களிலும் அவை ஊடுருவும். நூற்புழுக்கள் வெவ்வேறு உணவு உத்திகளைக் கொண்டுள்ளன மற்றும் அவை மண்ணில் பல ஆண்டுகளுக்கு உயிர் வாழக்கூடியது. அவை இடைநிலை புரவலன்களால் பெருகுகின்றன. அவை பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகின்ற நோய்களையும் பரப்பும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் தன்மை கொண்ட தாவர வகைகள் கிடைக்கும் என்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • சூரியகாந்தி அல்லது காலெண்டுலா ஆகியவற்றை கொண்டு ஊடுபயிர் செய்தல் அல்லது பயிர்களுக்கு இடையே மலர்த் தண்டுகளை வைத்தல் போன்றவற்றால் நோய்ப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
  • பல வாரங்களுக்கு பிளாஸ்டிக் தழைக்கூளங்கள் கொண்டு வயல்களை மூடவும்.
  • வயல்களை உழுது, மண்ணைச் சூரிய ஒளி படும்படி செய்யவும்.
  • கடுமையான நோய்த் தொற்று ஏற்பட்டால், பல மாதங்களுக்கு நிலத்தை தரிசாக வைத்திருக்க யோசியுங்கள்.
  • பல ஆண்டுகளுக்கு பலதரப்பட்ட பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க