குடைமிளகாய் & மிளகாய்

இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகள்

Gastropoda

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள், பூக்கள், கிழங்குகள் மற்றும் குமிழ் தண்டுகள் ஆகியவற்றில் உண்ணும் சேதங்கள்.
  • தாவர இலைத் தொகுதிகள் மற்றும் மண் மேற்பரப்பில் வெள்ளி போன்ற சகதிச் சுவடுகள்.
  • இளம் நாற்றுகள் இறந்து போகலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

30 பயிர்கள்
பார்லிகோதுமை
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
மேலும்

குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகள் பரவலாக காணப்படும் பூச்சிகள் ஆகும், அவை பெருமளவில் வளர்ந்தால் பயிர்களுக்கு கடுமையான அழிவை ஏற்படுத்தும். அவை பெரும்பாலும் இலைகளில் உள்ள ஒழுங்கற்ற, பெரிய துளைகளை உண்ணும் ஆனால் தண்டுகள், மலர்கள், கிழங்குகள் மற்றும் குமிழ் தண்டுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும். உருளைக் கிழங்குகளில், வட்டவடிவில் பெரிய துளைகளை தோல்பகுதியில் இடக்கூடியவை அல்லது அதிகளவில் பெரிய துளைகளாக உள்நோக்கி செல்லக்கூடியவை. தாவர இலைத் தொகுதிகள் மற்றும் மண் மேற்பரப்பில் வெள்ளி போன்ற சகதிச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. இவை முக்கியமாக இளம் இலகுவான செடிகள் மீது குறிப்பாக ஏற்படுகின்றன மற்றும் இளம் நாற்றுகளை உண்டு அவற்றை முழுமையாக அழித்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஃபெர்ரிக் பாஸ்பேட்டை அடிப்படையாகக் கொண்ட துகள்களை இயற்கை முறையில் பயிர் செய்யும் விவசாயிகள் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முள்ளெலிகள், பறவைகள், தவளைகள், தேரைகள், குருட்டு வண்டுகள் மற்றும் நிலத்தடி வண்டுகள் போன்ற இரைப்பிடித்துண்ணிகள் வயல்வெளிகளில் இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகளைக் கட்டுப்படுத்த உதவக்கூடியவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அவர்களின் பன்முகத்தன்மை மற்றும் வாழ்க்கை சுழற்சி காரணமாக, இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகள் பொதுவாக இரசாயனக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மெட்டல்டிஹைட் அடிப்படையிலான துகள்கள், அவற்றைத் துளைகளிலிருந்து வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மழைக்குப் பிறகு, இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகள் அதிகம் காணப்படும் நேரங்களில் இவற்றை பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகள் அழுகிய கரிமப் பொருட்கள் , மற்றும் பல்வேறு பயிர்களின் இலைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளை சிதைவுகளை ஏற்படுத்தும். அட்டைகளானது தண்டுகள் அல்லது புழுக்கள் ஏற்படுத்திய பிளவுகள் அல்லது துளைகளைப் பயன்படுத்தி நிலத்திற்கு அடியில் வாழக்கூடியது மற்றும் அவை இனப்பெருக்கம் செய்ய மட்டுமே நிலத்தின் மேல்பகுதிக்கு வரும். அவை உருளைக்கிழங்கில், அதன் தோலில் மேலோட்டமான வட்டத்துளைகளை உருவாக்கும் அல்லது கிழங்குகளுக்குள் விரிவான குழியைத் தோண்டி, குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்தும். ஈரப்பதமான சூழல்களில் இந்த விலங்குகள் செழித்து வளருகின்றன, எனவே தொற்று நோயானது முக்கியமாக ஈரப்பதமான இரவுகள் அல்லது மழைப்பொழிவுகளுக்குப் பிறகு ஏற்படுகிறது. பெரும்பாலான இனங்கள் இலேசான குளிர்காலங்களில் வாழ்ந்து, வசந்த காலத்தில் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.


தடுப்பு முறைகள்

  • உயர் மற்றும் நடுத்தர எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவும்.
  • சீக்கிரம் நடவு செய்யும் அல்லது சீக்கிரம் அறுவடை செய்யும் வகைகளைத் தேர்வுசெய்யவும்.
  • கனமான மண்ணில் நடவு செய்வதைத் தவிர்க்கவும், அவை இலை அட்டைகளுக்கு உதவுகின்றன.
  • நத்தைகளை வேட்டையாடும் பிராணிகளுக்கு வெளிப்படுத்த நடவு செய்வதற்கு முன் ஒரு முறை அல்லது இரண்டு முறை மண்ணை உழுதல் வேண்டும்.
  • இந்தப் பூச்சிகளைத் தடுக்க நீங்கள் தேர்வு செய்யும் பயிர் வகைகளைச் சுற்றி காபி நிலத்தளத்தை அமைக்கவும்.
  • உங்கள் பயிர்களைச் சுற்றி வேலி அல்லது வலை அமைக்கவும்.
  • பழைய ஈரமான சாக்குகள் மற்றும் அழுகிய மரப்பலகைகள் போன்ற இறப்பு ஏற்படாத பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • தொற்றுநோயைத் தடுக்க இலை அட்டை அல்லது ஓடில்லா நத்தைகளை கைமுறையாக அகற்றவும்.
  • காலையில் அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • வயலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள களைகளை நீக்கவும்.
  • வேட்டையாடும் பிராணிகளை ஊக்குவிக்கவும்.
  • முடிந்தவரை விரைவாகப் பயிரை அறுவடை செய்யவும்.
  • வயலில் இருந்து தழைக்கூளங்களை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க