மாங்கனி

வெள்ளை மாம்பழ செதில் நோய்

Aulacaspis tubercularis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பச்சைய சோகை, இலை உதிர்வு, கிளைகள் காய்ந்து போகுதல், மோசமாக பூ பூப்பது, பழங்கள் வளர்ச்சி குன்றி காணப்படுதல் மற்றும் சிதைந்து போகுதல்.
  • முதிர்ச்சி அடைவதற்கு முன்பே பழம் உதிர்ந்து விழுந்துவிடுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


மாங்கனி

அறிகுறிகள்

இலைகள், கிளைகள் மற்றும் பழங்களில் உள்ள தாவரச் சாறுகளை உறிஞ்சுவதன் மூலம் தாவரங்கள் காயமடைகின்றன. கடுமையான தாக்குதலின் கீழ், மா செடிகள் பச்சைய சோகை, இலை உதிர்வு, கிளைகள் காய்ந்து விடுவது மற்றும் மோசமாக பூ பூப்பது, அதன் விளைவாக குன்றிய வளர்ச்சி போன்றவை ஏற்படும். பழுத்த பழங்களின் மேல்தோலில் இளஞ்சிவப்பு நிறக் கறைகளைக் கண்டறியலாம், அவை விரும்பத்தகாதவை (காஸ்மெட்டிக் சேதம்), சந்தை மதிப்பு இழப்பதற்கு வழிவகுக்கும், குறிப்பாக சர்வதேச ஏற்றுமதி சந்தைகளில் இவ்வகையான பழங்கள் அதன் மதிப்பை இழந்துவிடும். பூச்சியின் அடர்த்தி பழங்களின் மகசூல் இழப்பை சாதகமாக பாதிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வெள்ளை மாம்பழ செதில்கள் பல இயற்கை எதிரிகளைக் கொண்டிருந்தது. விளைநிலங்களில் வெள்ளை மாம்பழ செதில் பூச்சிகளை வேட்டையாடும் இனங்களை அதிகரிக்க விவசாயிகள் கவர்ந்திழுக்கும் மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்தலாம். சாத்தியமானால் அதிகமான இயற்கை எதிரிகளை அறிமுகப்படுத்துவதும் நன்மை பயக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் ஒழுங்குப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள், செயல்படும் பொருட்களை சுழற்சி முறையில் பயன்படுத்துங்கள், இதன்மூலம் பூச்சிகள் மத்தியில் எதிர்ப்புத் தன்மை உருவாவதைத் தவிர்க்கலாம். வெள்ளை மாம்பழ செதில் நோய்களுக்கு எதிராக இலைத்திரள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது நடைமுறைக்குக் குறைவான சாத்தியமே என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் பெரும்பாலான வகைகள் 20 மீ உயரம் வரை வளரக்கூடியவை மற்றும் சாதாரண தெளிப்புக் கருவிகள் மூலம் எல்லாப் பகுதியையும் அடைவது கடினமாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்நோயின் சேதம் வெள்ளை மாம்பழ செதில் பூச்சிகளால் ஏற்படுகிறது, இது ஹெமிப்டெரா, டயஸ்பிடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அடியற்ற, கொம்புடைய, சிறிய, கூடு உடைய பூச்சியாகும். நாற்று முதல் முதிர்ச்சி அடையும் வரை அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் மா செடியை இந்தப் பூச்சி தாக்குகிறது. இப்பூச்சி உண்ணும்போது தாவர சாற்றை உறிஞ்சி, தாவரத்துக்குள் நச்சுக்களை செலுத்துகின்றன. மழைக் காலத்தை விட வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும், குறிப்பாக இளம் நாற்றுகள் மற்றும் மா மரங்களில் இப்பாதிப்பை அதிகமாக காணலாம்.


தடுப்பு முறைகள்

  • பொருத்தமான வயலையும் விரும்பத்தக்க வகையையும் தேர்ந்தெடுக்கவும்.
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா, அடால்ஃபோ, ஆப்பிள், ஹேடன் மற்றும் கீட் மாம்பழ வகைகள் ஆகியவற்றின் ஆராய்ச்சியின் அடிப்படையில், அல்பான்ஸோ, கென்ட், டாமி அட்கின்ஸ் மற்றும் டாட் போன்ற பிற வகைகளுடன் ஒப்பிடும் போது வெள்ளை மாம்பழ செதில் பூச்சிகள் மிகவும் பொறுத்துக்கொள்ளும் தன்மைக்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெள்ளை நிற செதில் பூச்சிகள் தென்படுகின்றனவா என வயலைக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட மாம்பழக் கிளைகளை கத்தரித்து சீர்திருத்தம் செய்யவும்.
  • தாவரங்கள் வளர்ச்சிக் காரணிகளுக்கு போட்டியிடாதபடி உகந்த இடைவெளியை உறுதி செய்யவும்.
  • அறுவடைக்கு முன்பு பழங்களை பைகளைப் பயன்படுத்தி கட்டி வைப்பதால் அவற்றுக்கு சேதங்கள் ஏற்படாது பாதுகாக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க