கரும்பு

கரும்பு செதில் நோய்

Melanaspis glomerata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் கரும்புகள் உலர்ந்து போகுதல்.
  • வளர்ச்சி குன்றி போகுதல்.
  • வட்ட, அடர் வண்ண செதில்களால் மூடப்பட்ட தண்டுகள் மற்றும் இலை மைய நரம்புகள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

தண்டுகள் மற்றும் இலையின் மைய நரம்புகள் வட்ட வடிவிலான, பழுப்பு அல்லது சாம்பல் கலந்த கருப்பு செதில்களால் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கரும்புகளின் இலைகள் ஆரோக்கியமற்ற வெளிர் பச்சை நிறத்துடன், நுனியில் வறண்டு போகின்றன. தொடர்ச்சியான தொற்றுடன் இலைகள் பின்னர் மஞ்சள் நிறமாக மாறும். தாவரச் சாற்றின் இழப்பு இலைகள் திறக்காமல் போவதற்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் மஞ்சள் நிறமாகி வறண்டு போகும். இறுதியில், கரும்பு காய்ந்துபோகும், அதனை வெட்டி திறந்து பார்க்கும்போது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் தோன்றும். கடுமையான நோய்த்தொற்றில், பாதிக்கப்பட்ட கரும்புகள் சுருங்கிப்போகும் மற்றும் பூச்சி தண்டினை ஆக்கிரமித்து, முழு கரும்பையும் ஆக்கிரமித்துவிடும். பூச்சியின் அசையாத பழக்கம் மற்றும் சிறிய அளவு காரணமாக, பூச்சி கரும்பு வளர்ப்பவரின் கவனத்திலிருந்து தப்பித்து விடுகிறது. கடுமையான சேதம் ஏற்பட்ட பின்னரே அதன் இருப்பு வெளிப்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

1% மீன் எண்ணெய் ரோசின் சோப் குழம்பில் கரணைக் குச்சிகளை நனைக்கவும். வெள்ளை எண்ணெய்களை (இலைத்திரள்கள் மற்றும் தண்டுகள்) தெளிக்கவும், அவை இளம் செதில்களுக்கு எதிராக சில செயல்திறனைக் காட்டுகின்றன. சிலோகோரஸ் நிக்ரிடஸ் அல்லது ஃபராசிம்னஸ் ஹார்னி முட்டை அட்டை @ 5 சிசி / ஏ.சி ஆகியவற்றை வெளியிடவும். அனாபிரோடெபிஸ் மயூராய், சைலோனூரஸ் இனம் போன்ற ஹைமனோப்டிரான் ஒட்டுண்ணிகளை அறிமுகப்படுத்துங்கள் மற்றும் சானியோசுலஸ் நுடஸ் மற்றும் டைரோபாகஸ் புட்ரெசென்டீயா போன்ற கொள்ளையடிக்கும் பூச்சிகளை வயலில் அறிமுகப்படுத்துங்கள், இவை செதில் பூச்சியை உண்ணும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நடவு செய்வதற்கு முன் 0.1% மாலதியான் கரைசலில் கரணைக் குச்சிகளை ஊற வைக்கவும். டைமெத்தோயேட் @ 2 மிலி / லி அல்லது மோனோக்ரோடோபாஸ் @ 1.6 மி / லி என்பவற்றை கரும்பின் இலைகள் மற்றும் உச்சிப்பகுதியை அகற்றிய பிறகு தெளிக்கவும். பூச்சி தென்படுவதற்கு சற்று முன்னதாக, கரணைக்குச்சிகளை அசெபேட் 75 எஸ்.பி @ 1கி /லி உடன் இரண்டு முறை சிகிச்சையளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

செதில்களின் ஊர்ப்புழுவினால் சேதம் ஏற்படுகிறது. பெண் பூச்சிகள் உள்பொரி முட்டை தன்மை ஆகும் - அதாவது இளம் பூச்சிகள் பெண் பூச்சியின் உடலுக்குள் குஞ்சு பொரிக்கும் முட்டைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. குஞ்சு பொரித்தவுடன், ஊர்ப்புழுக்கள் (இளம் முதிர்ச்சியற்ற செதில்கள்) உண்ணும் தளத்தைத் தேடி அலையும். இவை ஊசி போன்ற வாய்ப்பகுதிகளை செருகி, தாவரச் சாறை உரியும், மீண்டும் நகராது. தொற்று கணுவிடைப்பகுதிகளின் உருவாக்கத்துடன் தொடங்கி, கரும்பு தாவரம் வளருகையில் தொடர்ந்து அதிகரிக்கிறது. தாவர சாறு ஊர்ப்புழுக்களால் உறிஞ்சப்படுகிறது. கடுமையான தொற்றுநோய்களில், இலை உறை, இலைப்பரப்பு மற்றும் மையநரம்பு ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • சி.ஓ.
  • 439, சி.ஓ.
  • 443, சி.ஓ.
  • 453, சி.ஓ.
  • 671, சி.ஓ.
  • 691 மற்றும் சி.ஓ.
  • 692 போன்ற எதிர்ப்பு வகைகளைப் பயன்படுத்துங்கள்.
  • செதில் பூச்சிகள் இல்லாத கரணைக் குச்சியை வளர்க்கவும்.
  • செதில் எண்ணிக்கை அதிகமாவதை தாமதப்படுத்த சுத்தமான நடவு பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
  • வயல்களையும் ஊடு செல் பாதைகளையும் களைகள் இல்லாமல் வைத்திருங்கள்.
  • வயல்களில் இருந்து தேங்கி நிற்கும் தண்ணீரை வடியச் செய்யுங்கள்.
  • தொற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் வயலை தவறாமல் கண்காணிக்கவும்.
  • பெரிதும் பாதிக்கப்பட்ட கரும்பு தாவரங்களை பிடுங்கி எரிக்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர் (எ.கா.
  • கோதுமை) உடன் பயிர்-சுழற்சியை செய்வது குறித்து கருத்தில் கொள்ளுங்கள்.
  • நடவு செய்த 150 மற்றும் 210 வது நாளில் கரும்பின் இலைகள் மற்றும் உச்சிப்பகுதியை அகற்றவும்.
  • மீண்டும் மீண்டும் மறுதாம்புகளைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க