Chiloloba acuta
பூச்சி
தென் இந்தியாவில், வடகிழக்குப் பருவமழைக்குப் பின்னர், பசுமையான உலோக வண்டு சிலோலோபா அகூடா பொதுவாக புல்வெளிகளில் காணப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் கம்பு, மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றில், முக்கியமாக மகரந்தத்தைத் தேடி உண்ணுகிறது (எனவே இது மகரந்த வண்டு என்றும் அழைக்கப்படுகிறது). உண்ணும்போது, இது பூக்களைச் சேதப்படுத்தி, தானியங்கள் உருவாவதையும் தடுக்கிறது. இவை உற்பத்தி செய்யும் கழிவுகள் பூக்களை நிறமிழக்கச் செய்யும். இவை பூக்கள் மற்றும் மகரந்தங்களை உண்ணும் வண்டுகளாக கருதப்படுகையில், இவை தேவைப்பட்டால் மொட்டுகள் மற்றும் இலைகளையும் தாக்கக்கூடும். முட்டைப்புழுக்கள் தளர்வான சிதையும் கரிமப் பொருட்களில் காணப்படுகிறது, இருப்பினும் இவை நோய்ப்பூச்சியாக கருதப்படுவதில்லை.
செஃபர் வண்டின் முதிர்ந்த முட்டைப்புழுக்களானது ஹெட்டரோர்ஹப்டிடிஸ் பாக்டீரியோபொரா போன்ற நோய்ப்பூச்சி நூற்புழுக்கள் மற்றும் சில ஸ்டெய்னெர்நீமா இனங்கள் (எஸ். சியாம்கயை, எஸ். தெர்மோஃபிலம் மற்றும் எஸ். அப்பசி) போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாட்டிற்கு மிகவும் பாதிக்கப்படக் கூடியவை. சிலவகை பூஞ்சைகளும், உதாரணமாக மெட்டார்ஹீலியம் அனிசோப்லியே போன்றவையும் வண்டினப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் காரணியாக இருக்கக்கூடும். இந்த நூற்புழுக்களை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் உங்கள் பகுதியில் கிடைக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கவும். வேப்பம் பிண்ணாக்கு கொண்டு மண்ணுக்கு சிகிச்சை அளித்தலும் இந்த வண்டினப்புழுக்கள் உண்பதைத் தடுக்கக்கூடும் மற்றும் அவற்றின் அளவையும் குறைக்கக்கூடும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். முதிர்ந்த பூச்சிகளை அழிப்பதற்கு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
சேதங்களானது கிலோலோபா அக்குடா என்னும் செஃபர் வண்டுகளால் ஏற்படுகிறது, இந்த பூச்சியானது இந்திய துணைக்கண்டத்தில் பரவலாக காணப்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் பொதுவாக பளப்பான உலோகப் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. ஆனால் சில பூச்சிகள் சிவப்பு அல்லது கரு நீல வேறுபாடுகளுடனும் காணப்படுகிறது. இவை குஞ்சம் போன்ற முடிகளால் ஒழுங்கற்ற முறையில் மூடப்பட்டிருக்கின்றன. இந்தக் குஞ்சங்களானது பக்கவாட்டிலும், உடலின் அடிப்பக்கத்திலும் மிகவும் தெளிவாக காணப்படுகின்றன. பெண் பூச்சிகளானது கிரீம் போன்ற வெள்ளை நிற முட்டைகளை ஒற்றையாக, அடிமண், இலைகள் அல்லது அழுகிய மரங்களில் இடுகின்றன. முட்டைப்புழுக்கள் 'C ' வடிவில், மண்ணில் உள்ள கரிம பொருட்களை உண்ணுகின்றன (மரப்பட்டைகள், கிளைகள் அல்லது சிறுகிளைகள்). தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு முதிர்ந்த பூச்சிகள் புற்களின் மீது பொதுவாக காணப்படுகின்றன. இவை அவ்வப்போது கம்பு, மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றை உண்டு, பூக்களையும் தானியங்களையும் சேதப்படுத்துகின்றன.