மற்றவை

தண்டு ஈக்கள்

Atherigona sp.

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மாமிசப்புழுக்கள் வளர்ந்து வரும் இளம் நாற்றுகள் தண்டுகளை உண்டு "இறந்த இதயங்களுக்கு" வழிவகுக்கிறது.
  • புதியத் தளிர்களின் நுழைவு வாயிலில் சிறிய வட்ட வெட்டுக்கள் காணப்படுகின்றன.
  • இலைகள் மஞ்சள்-பச்சை நிறமாகி மற்றும் தொங்கும், நாற்றுகள் குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

6 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

மாமிசப்புழுக்கள் வளரும் இளம் நாற்றுகளின் தண்டுகளை உண்டு, கோதுமை மற்றும் மக்காசோளத்தில் "இறந்த இதயங்களை" ஏற்படுத்தக்கூடும். சிறிய வட்ட வெட்டுக்கள் புதிய தளிர்களின் நுழைவு வாயிலில் தெரியும், இவை பொதுவாக முதல் இலை உறைகளுக்கு மேலே காணப்படும். சேதங்கள் அறிகுறிகளானது நோய்தொற்று ஏற்பட்ட 6-7 நாட்களுக்கு பிறகு, வெளிவந்த இலைகளில் வெளிப்படையாகத் தோன்றும். வெட்டப்பட்ட இலைகள் வெளிர் பச்சை அல்லது மஞ்சள்-பச்சை நிறமாகி, ஓரங்களில் இருந்து உட்புறம் சுருண்டு கொள்ளும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாற்றுகள் வாடி, முனையின் வளர்ச்சி நிறுத்தப்பட்டு மற்றும் தாவரங்களின் வளர்ச்சி குன்றிவிடும். வழக்கமாக, பெண்பூச்சிகள் பல முட்டைகளை இட்டாலும், ஒரு நாற்றுகளில் ஒரு முட்டைப்புழுக்கள் மட்டுமே காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இது நாள் வரை இந்த நோய்ப் பூச்சிக்கு எதிரான உயிரியல் கட்டுப்பாடு எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தற்போது பயிர்களில் உள்ள தொற்றுநோய்களை குறைப்பதற்கான பரிந்துரைகளானது, இந்த பூச்சிகளின் உச்ச கட்ட படையெடுப்பைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே விதைக்க வேண்டும். பைரித்ராய்டு பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும், இந்த பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான சேதங்களானது அதேரிகோணா இன ஈக்களின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இந்த சிறிய சாம்பல் நிற ஈக்கள் பல தீனிகளை உண்ணக்கூடியவை மற்றும் இவை கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்களை தாக்குகின்றன.மிளகு, பீன்ஸ் அல்லது பருப்பு போன்ற மற்ற தாவரங்களும் பாதிக்கப்படலாம். பெண் ஈக்கள் தண்டுகளிலோ அல்லது நாற்றுகள் அடிப்பகுதியின் அருகே உள்ள மணலிலோ, முட்டைகளை தனியாகவோ அல்லது மிக அரிதாக ஜோடியாகவோ இடும் (3-4-இலைகளின் நிலைகள் விரும்பப்படுகிறது). மணலில் பண்ணை உரங்களைப் பயன்படுத்துதலானது பெண் ஈக்களை கவர்ந்து, முட்டைகள் இடுவது அதிகரிப்பதாகத் தெரிகிறது. புதிதாக வெளிவந்த முட்டைப்புழுக்கள் உருளை வடிவில் மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இவை தாவரங்களின் மேல்புறத்திற்கு சென்று மற்றும் புதிய தளிர்களின் மென்மையான பாகங்களை மெல்லுவதற்கு தனது வாய் கொக்கிகளை பயன்படுத்துகிறது மற்றும் இவை வழக்கமாக முதல் இலை உறைக்கு மேல்புறமாக இருக்கும்.பொதுவாக தண்டுகளின் அடிவாரத்தில் முட்டைப்புழுக்களாக மாறும்நிலை நிகழ்கிறது. இந்த ஈக்கள் மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய விவசாயத்தில் மிகவும் சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சிகளாகும்.


தடுப்பு முறைகள்

  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆரோக்கியமான பகுதிக்கு மண்ணை கொண்டு செல்லாதீர்கள்.
  • நெகிழ்வுத்தன்மை கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • சில சந்தர்ப்பங்களில், ஈக்களின் உச்சக்கட்டப் படையெடுப்பிற்கு முன் ஆரம்பகாலத்திலேயே விதைத்தல் பயிர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையைக் (இளம் நாற்றுகள்) கடக்க உதவும்.
  • தாமதமாக விதைத்தலும் மக்காசோளத்தில் இறந்த இதயம் ஏற்படுவதைக் குறைப்பதாக கூறப்படுகிறது.
  • நிலத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளை அகற்றவும்.
  • சமநிலையிலான சிறந்த உரமளித்தலைத் திட்டமிடவும்.
  • செடிகள் வெளிவந்தபிறகு, பண்ணை உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • பயன் தரும் பூச்சிகளை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க பூச்சிக்கொல்லிகளை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின்னர், புரவலன் அல்லாத பிற பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க