அரிசி

ஆசிய அரிசி துளைப்பான்

Chilo suppressalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • நாற்றுகள் இறந்து போகுதல், பெரும்பாலும் நாற்றங்காலிலேயே ஏற்கனவே இறந்து விடக்கூடும்.
  • இலை உறைகள், இலைகள் மற்றும் தண்டுகளில் உண்ணும் சேதங்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நாற்றுகளில் (பெரும்பாலும் ஏற்கனவே நாற்று செடிகளில்), இந்த தாக்குதலானது இளம் இலைகளை வாடச் செய்தல் மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளை இறந்து போகச் செய்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, இந்த அறிகுறிகளானது "இறந்த இதயம்" என்று அழைக்கப்படுகிறது. முதிர்ந்த தாவரங்களில், இளம் முட்டைப்புழுக்கள் இலைகளில், குறிப்பாக இலை உறைகளில் சிறிய துளைகளை உருவாக்குகின்றன. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் கணுவிடைப்பகுதியின் அடிப்பகுதியில் துளையிட்டு, தாவரத்தின் உள்பக்கம் நுழைந்து மற்றும் மென்மையான வாஸ்குலார் திசுக்களை உண்டு, சில நேரங்களில் அவற்றை முழுவதுமாக குழியாக்கிவிடும். இந்தத் தாவரங்களில் வளர்ச்சி குன்றி மற்றும் வெளிறிய இலைகள் காணப்படும், பின்னர் இவை உலர்ந்து மற்றும் சுருண்டு , இறுதியில் கீழே விழுந்து விடும். கதிர்களில் உள்ள தானியங்கள் நிரம்பப்படாது, இந்த நிலை பொதுவாக "வெள்ளைத் தலை" என்று அழைக்கப்படுகிறது. ஒரு முட்டைப்புழுவால் பலத் தாவரங்களை அழிக்க முடியும் மற்றும் கனமான தொற்றுநோயானது 100% பயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணிக் குழவிகளான பேராதெரேசியா கிலாரிபால்பிஸ் மற்றும் எரிபோரஸ் சினிகஸ் போன்றவற்றை விடுவித்தல் சில நாடுகளில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துதல் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்கு சிறப்பான வழிமுறையாகும். இந்த இரைப்பிடித்துண்ணிகளில் சில சிலந்திகளின் இனங்களும் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், குளோரன்டிரானிலைப்ரோல் தெளிப்பான் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். நடவு மற்றும் பூச்சிக்கொல்லியில் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு துளைப்பானின் பாதிப்புகளைக் குறைக்கிறது. பூச்சிகளின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும், இல்லையெனில் வேளாண்மையைப் பாதுகாத்தும் பலன் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது, சிலோ சப்ரஷலிஸ் என்னும் ஆசியத் தண்டு துளைப்பானால் ஏற்படுகிறது. இது முக்கியமாக தெற்காசியாவில் காணப்படுவதோடு மற்றும் பொதுவாக ஒரு ஆண்டுக்கு இரண்டு தலைமுறைகளைக் கொண்டுள்ளது. அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் உள் திசுக்களை சாப்பிடுகின்றன, அதேசமயத்தில் முதிர்ந்தப் பூச்சிகள் வெளிப்புறச் சாறுகளை உண்ணுகின்றன. அரிசியைத் தவிர, இது சோளம் மற்றும் சில காட்டுப் புல் வகைகளையும் தாக்குகிறது. முட்டைப்புழுக்கள் பயிர்தாள் மற்றும் வைக்கோலில் குளிர்காலத்தைச் செயலற்ற முறையில் வாழ்கிறது மற்றும் லேசான உறைபனியிலும் வாழும். பெண் பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதிகள், பொதுவாக பழுப்பு நிறச் சுரப்பிகளால் மூடப்பட்டு மைய நரம்புகள் நெடுகிலும் பலக் கொத்துக்களாக 300 முட்டைகள் வரை இடும். முட்டையிலிருந்து குஞ்சு வெளியான பிறகு, முட்டைப்புழுக்கள் இலை மேற்பரப்பை உண்ணும் மற்றும் பின்னர் இவை இலை உறைகளில் துளையிட்டு, இலைகளை மஞ்சள் நிறமாக்கி, மற்றும் பின்னர் கீழே விழுந்து விடும். இவை தண்டுகளை அடையும்போது, ஒரு நேரத்தில் ஒரு கணுவிடைப்பகுதியை வெறுமையாக்கி, பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக ஊடுருவி துளையிட்டு வெறுமையாக்கிவிடும். தாவரங்களில் உள்ள அதிக சிலிகா உள்ளடக்கங்கள் முட்டைப்புழுக்களின் உண்ணும் மற்றும் துளையிடும் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத் திறன் அல்லது தாங்கும் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • முட்டைப்புழுக்கள் உண்ணுவதை மற்றும் துளையிடுவதை முடக்க அதிகமான சிலிக்கா உள்ளடக்கம் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நெல் வயலின் (சோளப்பயிர் வகை) அருகே மாற்றுப் புரவலன் தாவரங்களை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வயலைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூச்சிகளை மூழ்கடிக்க வயலில் இடைவெளி விட்டு வெள்ளம் போல் நீர் பாய்ச்சவும்.
  • அறுவடைக்குப்பிறகு பயிர்தாள் மற்றும் வைக்கோலைப் புதைக்க நிலத்தை உழுதல் வேண்டும், இது அடுத்து வளரும் பருவ காலத்தில் பூச்சிகளைத் தடுக்கும்.
  • பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை உடைக்க இப்பகுதியில் உள்ள அண்டை வயல்களுடன் ஒத்திசைத்து நடுதல் வேண்டும்.
  • இயற்கையான எதிரிகளைப் பராமரிக்க பூச்சிக்கொல்லிகளை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க