அரிசி

நெல் படைப்புழு

Spodoptera mauritia

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைப் பரப்புகளில் துளைகள் , இலைகள் எலும்புக்கூடு போன்றாக்குதல் மற்றும் தண்டுகளை கருகச் செய்தல் போன்றவை காணப்படும்.
  • கடுமையான நோய்த் தொற்றுகளில், ஒரே இரவில் பயிர் அழிவு ஏற்படும்.
  • வயல்களுக்கு இடையே திரளாகக் கம்பளிப்புழுக்கள் இடம்பெயரும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

கம்பளிப்புழுக்கள் தாவரங்களை உண்டு மற்றும் இலை பரப்புகளைத் துளையிடுதல், இலைகளை எலும்புக்கூடு போன்றாக்குதல் மற்றும் தண்டுகளைக் கருகச் செய்தல் போன்றவற்றின் மூலம் சேதங்கள் ஏற்படுத்துகிறது. கடுமையான நோய்த்தொற்றுகளில், நடவு செய்யப்பட்ட வயல்களில் பெருமளவில் மொத்தமாகப் படையெடுத்து, கால்நடைகள் செய்வது போன்று, ஒரே இரவில் பயிர்களை அழித்து விடும். படைப்புழுக்கள் இலை நுனிகள், இலை ஓரங்கள் மற்றும் தாவரங்களின் அடிப்பகுதியை வெட்டுவதன் மூலம் நெல் பயிர்களுக்குச் சேதங்கள் விளைவிக்கிறது. நாற்றங்காலில் இருக்கும் நாற்றுகள், நேரடியாக விதைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பக்கக்கன்று முளைக்கும் ஆரம்ப நிலையில் இருக்கும் அரிசி ஆகியவற்றில் இந்தச் சேதங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். பயிர்களை அழித்த பிறகு, படைப்புழுவின் முட்டைப்புழுக்கள் பக்கத்து வயலுக்கு இடம் பெயரும், இதனைப் பார்ப்பதற்கு இராணுவ படை உருவாக்கம் போன்று காட்சியளிக்கும். கடந்த காலத்தில், 10 முதல் 20 சதவிகிதம் வரை இழப்பை ஏற்படுத்தும் நெல் நாற்றுக்களின் கடுமையான பூச்சியாக இது வெளிப்பட்டுள்ளது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிறிய பகுதிகளில், முட்டைப்புழுக்களை உண்ணுவதற்கு வயல்களில் வாத்துகளை விடலாம். போலாஸ் சிலந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதிர்ந்த பூச்சிகளை அழிக்கலாம், இது பெண் அந்துப்பூச்சியை போன்ற பெரோமோன்களை உற்பத்தி செய்கிறது. இது ஆண் அந்துப்பூச்சிகளை ஈர்த்து மற்றும் குறைந்த அளவிலான இன சேர்க்கைக்கு வழிவகுக்கிறது. ஸ்டீனர்னேமா கார்போகாப்சே என்னும் நூற்புழுக்கள் மற்றும் நூக்லியோபாலிஹெட்ரோவைரஸ் ஆகியவற்றைக் கொண்ட தெளிப்பான் கரைசல்களின் பயன்பாடும் நெல் படைப்புழுக்களுக்கு எதிராக நன்றாகச் செயல்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்த்தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில், கம்பளிப்புழுக்கள் இடம்பெயர்வதைத் தவிர்க்க பூச்சிக்கொல்லிகளை வயல்களின் ஓரங்களில் தூவவும். குளோபிரைரிபொஸை அடிப்படையாகக் கொண்ட தொடர்பு பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் கம்பளிப்பூச்சிகளைத் திறம்பட கட்டுப்படுத்துகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான சேதங்கள் ஸ்போடொப்டெரா மாரிசியா என்னும் நெல் படைப்புழுக்களால் ஏற்படுகிறது. இந்த பலதீனிகளை உண்ணும் இனங்கள் எப்போதாவது நெல் பயிர்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தும். அந்துப்பூச்சிகள் சாம்பல் நிறத்தில், சுமார் 40 மி.மீ. இறக்கைப் பரப்புகளைக் கொண்டிருக்கும். பெண் பூச்சிகள் இரவில் செயல்படக்கூடியவை மற்றும் அவை வெளியான 24 மணி நேரத்தில் இனச்சேர்க்கை செய்யும். இனச்சேர்க்கை செய்த ஒரு நாளைக்குப்பிறகு, இவை சுமார் 200-300 முட்டைகளைக் கொத்துக்களாக பல்வேறு வகையான புல், களைகள் மற்றும் அரிசி இலைகளில் இடத்தொடங்கும். முட்டைப்புழுக்கள் இலைத் திசுக்களை உண்டு, ஆறு முட்டைப்புழு நிலைகளை அடைந்து, இறுதியாக 3.8 செ.மீ நீளத்தினைக் கொண்டிருக்கும். முழு வளர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் மென்மையாகவும், உருளை வடிவத்தையும், மற்றும் அடிப்புறக் கோடுகளுடன் வெளிர் நிறமுடைய உடலையும் கொண்டுள்ளன. இவற்றின் அடிப்புறத்தில் சி-வடிவத்தினைக் கொண்ட இரண்டு வரிசை கருப்பு புள்ளிகளும் காணப்படும். இவை இரவு நேரத்தில் உண்டு, பகல் நேரத்தில் மண்ணில் ஒழிந்து கொள்ளும். மண்ணில் தோண்டப்பட்ட கூட்டில் கூட்டுப்புழுக்களாகும் வளர்ச்சி நிலை நடைபெறும்.


தடுப்பு முறைகள்

  • நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • கை வலை அல்லது துடைக்கும் கூடையைக் கொண்டு கம்பளிப்புழுக்களைப் பிடித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவும்.
  • கூட்டுப்புழுக்களை அழிக்க கோடை காலத்தில் வயல்களை ஆழமாக உழுதல் வேண்டும்.
  • வயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அதிகப்படியான நாற்றங்கால் மற்றும் களைகளை அகற்றவும்.
  • பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை உடைக்க, வயல்களில் வெள்ளநீர் பாய்ச்சல் மற்றும் உலர்த்துதல் போன்றவை மாறி மாறி நிகழ்வதை உறுதி செய்யவும்.
  • நைட்ரஜனின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்தல் நோயைத் தடுக்க உதவுகிறது.
  • முதிர்ந்த பூச்சிகளைப் பிடிக்க அந்துப்பூச்சிப் பொறிகளைப் பயன்படுத்தலாம்.
  • கடுமையான பூச்சி தாக்குதலின் போது, அகழி தோண்டுவதன் மூலம் வயல்களைத் தனிமைப்படுத்தவும் மற்றும் உழுதல் செய்து பயிர்களை அழித்துவிடவும்.
  • பின்னர் கம்பளிப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை வேட்டையாடும் பறவைகள் மூலம் பிடிக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க