அரிசி

அரிசி பயிரின் கூண்டுப்புழு

Parapoynx stagnalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் செங்குத்தான வெட்டுக்கள் காணப்படும்.
  • ஏணி போன்ற கட்டமைப்புகள்.
  • மஞ்சள் நிற தலையுடன் முட்டைப்புழு பச்சை நிறத்தில் இருக்கும்.
  • முதிர்ந்த பூச்சிகள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இளம் ஸ்டாக்னலிஸ் உயிரிகள் நேரியலாக இலைகளை மேய்கின்றன. நெல் கூண்டுப் புழுக்கள் நெல்லின் இலைகளை செங்குத்தாக துண்டித்து இலை கூண்டுகளை உருவாக்குகிறது. கத்தரிக்கோல் கொண்டு வெட்டியது போல் இலைகளில் செங்குத்தான வெட்டுக்கள் காணப்படும், அத்துடன் இலை கூண்டு தண்ணீரில் மிதக்கும். இந்த பாதிப்பின் மூலம் நெல் கூண்டுப் புழு பாதிப்பினை அறியலாம். இளம் உயிரிகள், இலைத் திசுக்களை உரசி சுரண்டுவதன் மூலம் தனக்கான ஊட்டத்தினைப் பெறுகின்றன. அவை பயிரின் காகிதம் போன்ற மெல்லிய மேலடுக்குகளை மட்டுமே விட்டு வைக்கின்றன. இலைகளில் மீதமுள்ள பகுதிகளில் ஏணி போன்ற அமைப்பு ஏற்பட்டு கடின இழைகளாக உருவாகின்றன. இலை உதிர்தலை உண்டாக்கும் பிற பூச்சிகளுடன் இந்த அறிகுறிகள் ஒத்துப்போவதால் இதில் சில குழப்பங்கள் உண்டாகும். நெல் கூண்டுப் புழுவினை உறுதிசெய்ய, ஏணி போன்ற அமைப்பில் இலை திசுக்கள் இருப்பது, வெட்டப்பட்ட இலைகள் மற்றும் இலை உறைகள் பயிரில் வித்தியாசமாக இணைந்திருப்பது மற்றும் இலை கூண்டுகள் தண்ணீரில் மிதப்பது போன்றவற்றினை ஆய்வு செய்யலாம்..

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நத்தைகள் (முட்டைகளை உண்பவை), ஹைட்ரோபிலிட் மற்றும் டைடிஸ்சிட் நீர் வண்டுகள் (இளம் உயிரிகளை உண்பவை), சிலந்திகள், தட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் (முதிர்ந்த பூச்சிக்களை உண்பவை) போன்ற உயிரியல் வகையிலான கட்டுப்பாட்டு காரணிகளை ஊக்கப்படுத்தலாம். பூச்சிகள் கண்டறியப்பட்ட இடங்களில் சாம்பல் அல்லது வேப்பிலைச் சாற்றினை தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட கார்பமேட் பூச்சிக்கொல்லிகளை கொண்டு இலைத்தொகுதி சிகிச்சைகளை மேற்கொள்ளவும் மற்றும் பைரித்ராய்ட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும், இவற்றுக்கு எதிராக பூச்சிகள் எதிர்ப்புத்திறனை கொண்டிருக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நீர் தேங்கியிருக்கும் நெல் பயிர்க்களம், ஈரமான நிலம் மற்றும் நீர்ப்பாசனம் செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் இந்த பூச்சிகளைக் காணலாம். இது வயல் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள களைகள் மற்றும் களை நெற்பயிரில் உயிர் வாழும், மேலும் நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது, இது புதிய நெற்பயிர்களை பாதிக்கும். இளம் நாற்றுக்களை இடமாற்றுவதும் பூச்சிகளுக்கு ஏதுவான விஷயமாகும். மோசமான ஆயத்த சாகுபடி மற்றும் துத்தநாகம் குறைபாடுள்ள மண் ஆகியவை இந்த நோயை பயிருக்கு ஏற்படுத்தும். இருப்பினும், இவை அனைத்தையும் மீறி, பூச்சி பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே நெல் வயல்களில் காணப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • சீக்கிரம் நடவு செய்தல் நோய் ஏற்படுவதை குறைக்கும்.
  • நடவு செய்யும்போது, அகலமான இடைவெளியை (30 × 20 செமீ) பயன்படுத்தவும்.
  • பழைய நாற்றுக்களை இடமாற்றவும், மீதமுள்ள முட்டைகளை அழித்துவிடவும்.
  • நிலத்தினை வடிய செய்து, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நீர்ப்பாசனம் செய்யும்போது வடிகட்டிகள் கொண்டு புழுக்களை பிடிக்கவும்.
  • அதிகப்படியான பயன்பாடுகளை தவிர்த்து, பரிந்துரைக்கப்பட்ட உரங்களைப் பயன்படுத்தவும்.
  • புரவலன் தாவரங்களை அகற்ற வயலிலும், அருகிலிருக்கும் இடங்களிலும் உள்ள களைகள் மற்றும் களை நெற்பயிரை நீக்கவும்.
  • போதுமான அளவு பொட்டாசியம் பயன்படுத்துவதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க