வாழைப் பழம்

வேர் துளைப்பான்

Cosmopolites sordidus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முதிர்ந்த இலை உறைகள் அல்லது தண்டுகளின் அடிப்பகுதியில் உணவருந்திய துளைகள் அல்லது கழிவுகள் காணப்படும்.
  • கடுமையாகப் பாதிக்கப்பட்டத் திசுக்களில், பூஞ்சைகளின் சிதைவுகள் மூலம் அழுகல் ஏற்படுகிறது.
  • உண்ணும் சேதங்களானது இலைகளை வாடச்செய்து மற்றும் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே அவற்றை இறக்கச் செய்துவிடுகிறது.
  • தாவரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படும், மேலும் மோசமான வானிலைகளில் கீழே சாய்ந்து விடக்கூடும்.
  • கொத்துக்களின் அளவு மற்றும் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

வெளிர் பச்சை நிறத்தில், உலர்ந்த மற்றும் தளர்வான இலைத்திரள்கள் பாதிக்கப்பட்ட வாழை மரங்களின் முதல் அறிகுறிகளாக இருக்கக்கூடும். முதிர்ந்த இலை உறைகள் அல்லது தண்டுகளின் அடிப்பகுதியில் உணவருந்திய துளைகள் அல்லது கழிவுகள் காணப்படும். முட்டைப்புழுக்கள் தண்டுகள் மற்றும் வேர்களில் துளையிடும், சில நேரங்களில் அவற்றில் நீளவாக்கில் முழுவதுமாகத் துளையிடும். கடுமையாகப் பாதிப்படைந்த திசுக்களில், பூஞ்சைச் சிதைவு மூலம் அழுகல் நோய் ஏற்படுகிறது, இது கருப்பு நிறமாற்றமாகக் காணப்படும். சந்தர்ப்பவாத நோய்க் கிருமிகளால் உண்டாகும் உண்ணும் சேதங்களும் மற்றும் குடியேற்றமும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்துகளைத் தடை செய்து மற்றும் இலைகளை உலரச் செய்து மற்றும் அவை முதிர்ச்சியடைவதற்கு முன் உதிரச் செய்துவிடுகிறது. இளம் தாவரங்களில் வளர்ச்சி தடையாகிறது மற்றும் முதிர்ந்தவைகள் குன்றிய வளர்ச்சியைக் காட்டுகின்றன. கடுமையான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட தாவரங்கள் பாதகமான காலநிலையில் வீசியெறியப்படுகின்றன. கொத்துக்களின் அளவு மற்றும் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கடந்த காலத்தில், பிறவற்றுக்கு மத்தியில், சில வகையான எறும்புகள் மற்றும் வண்டுகள் போன்ற எண்ணற்ற இரைப்பிடித்துண்ணிகள் நோய்ப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஓரளவு வெற்றிகளுடன் பயன்படுத்தப்பட்டன. இந்த இரைப்பிடித்துண்ணிகளுள் மிகவும் வெற்றிகரமானவை பிளேஸியஸ் ஜவானஸ் மற்றும் டாக்டிலோஸ்டெர்னஸ் ஹைட்ரோபிலாயிட்ஸ் என்னும் வண்டுகள் ஆகும். நடவு செய்வதற்கு முன்னர் தண்டுவழிச் சந்ததிகளுக்கு உகந்த சுடுநீர் சிகிச்சைகள் அளித்தல் (43 டிகிரி செல்சியஸ் 3 மணிநேரத்திற்கு அல்லது 54 டிகிரி செல்சியஸ் 20 நிமிடங்களுக்கு) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்னர் தண்டுவழிச் சந்ததிகளை புதிய தோட்டத்தில் முடிந்த வரை விரைவாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் போது தண்டுவழிச் சந்ததிகளை 20 சதவிகிதம் வேப்பிலை விதை நீரில் (ஆசாடிராச்த இண்டிகா) தோய்த்தல், இளம் தாவரங்களை நோய்க்கு எதிராகப் பாதுகாக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தாவரத்தின் அடிவாரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வேர் துளைப்பானின் எண்ணிக்கையைச் சிறந்த கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். கரிமபாஸ்பேட்டுகள் (குளோரிபாஸ், மாலத்தியான்) குழுவின் பூச்சிக்கொல்லிகள் கூட கிடைக்கின்றன, ஆனால் இவை விலை உயர்ந்தவை, மற்றும் கையாளுபவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நச்சுத்தன்மை ஏற்படுத்தக்கூடியவை.

இது எதனால் ஏற்படுகிறது

பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களானது காஸ்மோபாலிட்ஸ் சார்டிடஸ் என்னும் பூச்சியினால் மற்றும் அவற்றின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் கரும் பழுப்பு முதல் சாம்பல் கருப்பு நிறத்தில், பளபளப்பான கொம்புகளைக் கொண்டிருக்கும். இவை பெரும்பாலும் பயிர்க் கழிவுகள் அல்லது இலை உறைகள் தொடர்புடைய தாவரங்களின் அடிப்பாகத்தில் காணப்படும். இவை இரவு நேரத்தில் செயல்படக்கூடியவை மற்றும் பல மாதங்களுக்கு உணவு இல்லாமல் வாழக்கூடியவை. பெண் பூச்சிகள் வெள்ளை நிற, நீள்வட்ட வடிவ முட்டைகளை மண்ணில் பயிர் கழிவுகளில் உள்ள துளைகளில் அல்லது இலை உறைகளின் அடிப்பகுதியில் இடும். 12° செல்சியஸிற்கு கீழே முட்டைகளின் வளர்ச்சி நடைபெறாது. முட்டையிலிருந்து குஞ்சு வெளியான பிறகு, இளம் முட்டைப்புழுக்கள் வேர்கள் அல்லது தண்டுகளின் திசுக்களில் துளையிட்டு, தாவரங்களைத் தளர்ச்சியடையச் செய்கிறது மற்றும் சில நேரங்களில் தாவரங்கள் சாய்வதற்கும் காரணமாகிறது. சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகள் தாவரங்களைப் பாதிக்க வேர் துளைப்பானால் ஏற்பட்ட துளைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களின் மூலம் பெரும்பாலும் ஒரு தோட்டத்திலிருந்து மற்றொன்றுக்கு நோய்ப்பூச்சி பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே வாழை மரத்தின் தாவரப் பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள்.
  • சான்றளிக்கப்பட்ட மூலங்களின் தாவரப் பொருட்களை பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • எறும்புகள் மற்றும் வண்டுகள் போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளை ஊக்குவிக்கவும்.
  • தண்டுகள் சிலவற்றை அல்லது வேர்களை இரண்டு பாகங்களாக வெட்டி, மற்றும் பெண் பூச்சிகளை ஈர்ப்பதற்காக அவற்றை மண் பரப்பிற்குக் கீழே புதைக்கவும் (அங்கு இடப்படும் முட்டைகளும் கண்டிப்பாக இறந்துவிடும்).
  • அதிகமான நோய்த் தொற்றின்போது, அந்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய அனைத்து தாவர பாகங்கள், குப்பைகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களைத் தோண்டி அகற்றிவிடவும்.
  • மீண்டும் பயிரிடுவதற்கு முன்னர், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தரிசு நிலங்களில் நிலவளங்காப்புப் பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • நோய்பூச்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் பயிர்ச் சுழற்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க