கத்திரிக்காய்

இலை உண்ணும் வண்டு

Epilachna vigintioctopunctata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலை நரம்புகளுக்கு இடையே உண்ணும் சேதங்கள்.
  • இலைகள் எலும்புகூடு போல் ஆகுதல்.
  • பழங்களின் மீது ஆழமில்லாத துளைகள்.
  • குன்றிய வளர்ச்சி.
  • இலை உதிர்வு.
  • முதிர்ந்த வண்டு நீள்வட்ட வடிவில், மந்தமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், மேலும் அதன் முதுகில் 28 கரும்புள்ளிகள் மற்றும் கட்டையான மென்மையான முடிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

முதிர்ந்த வண்டுகள் மற்றும் முட்டைப்புழுக்கள் இரண்டுமே இலைகளை உண்டு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இலை நரம்புகளுக்கு இடையேயான பச்சை திசுக்களின் உண்ணும் சேதங்கள் இவற்றின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர், எலும்புக்கூடு என்று அழைக்கப்படும் குணாதிசய சேதம் ஏற்படும். இதன் விளைவாக இலைகளின் (முக்கிய நரம்புகள் மற்றும் இலைக்காம்புகள்) கடினமான பகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும். பழங்களின் மேற்பரப்புகளில் ஆழமற்ற துளைகளும் காணப்படும். பாதிக்கப்பட்ட நாற்றங்கால் அழிக்கப்பட்டு, முதிர்ச்சியடைந்த தாவரங்களின் வளர்ச்சி குன்றிவிடக்கூடும். இந்த வண்டு கடுமையான இலை உதிர்வு மற்றும் அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இது கத்திரிக்காயை தாக்கும் மிகவும் ஆபத்தான பூச்சிகளில் ஒன்றாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பீடியோபியஸ் குடும்பத்தின் ஒட்டுண்ணி குளவிகளை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இந்தக் குளவிகள் நன்மை பயக்கும் கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டு வகைகளையும் தாக்கும், எனவே அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு கவனமாக பூச்சிகளை அடையாளம் காண்பது அவசியம்.நோயாக்க நுண்ணியிரிகளும் இலை உண்ணும் வண்டுகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். பாக்டீரியம் பாசில்லஸ் துரிங்ஜின்சிஸ் அல்லது பூஞ்சை ஆஸ்பெர்ஜில்லஸ் எஸ்பிபி ஆகியவற்றை கொண்ட உயிரியல் பூச்சிக்கொல்லிகளை இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். ரிசினஸ் கம்யூனிஸ் (ஆமணக்கு எண்ணெய்), கலோடிராபிஸ் ப்ராசெரா மற்றும் டாட்டூரா இந்நாக்சியா ஆகியவற்றின் இலை சாறுகளை இலை தொகுதிகளில் தெளிக்கலாம். சாம்பலைப் பயன்படுத்துவது ஆரம்ப காலங்களில் தொற்றுநோயை திறம்பட குறைக்க உதவுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் முதலில் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், டைமீதோயேட், ஃபென்வெலாரெட், குளோரோபைரிபோஸ் மற்றும் மாலத்தியான், ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளை இலைத்தொகுதிகளுக்கு பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த வண்டுகள் நீள்வட்ட வடிவத்தில், மங்கலான ஆரஞ்சு நிறத்தில், 28 கருப்பு புள்ளிகளுடன், சிறிய மென்மையான முடிகளை தனது முதுகில் கொண்டிருக்கும். பெண் வண்டுகள் நீள்வட்ட, மஞ்சள் முட்டைகளை (0.4-1 மிமீ) சிறிய கொத்துகளாக இலைகளின் கீழ்புறத்தில் இடும். சுமார் 4 நாட்களுக்குப் பிறகு, நீண்ட, கருத்த-கூர்மையான பிளவுபட்ட முள் போன்றவற்றை தனது முதுகில் கொண்ட வெளிர் மஞ்சள்-வெண்ணிற முட்டைப்புழுக்கள் வெளியே வரும். முட்டைப்புழுக்கள் வெப்பநிலையை பொறுத்து, சுமார் 18 நாட்களுக்குள் சுமார் 6 மிமீ வரை வளரும். பின்னர் அவை இலைகளுக்கு கீழ்புறம் சென்று கூட்டுப்புழுவாக மாறும். மேலும் 4 நாட்களுக்கு பிறகு, புதிய தலைமுறை வண்டுகள் புழுக்கூட்டிலிருந்து வெளிப்படுகின்றன. இனப்பெருக்க காலத்தில் (மார்ச்-அக்டோபர்), குளிரான வெப்பநிலை அவற்றின் வாழ்க்கை சுழற்சி மற்றும் எண்ணிக்கை வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். வண்டுகள் தனது செயலற்று இருக்கும் காலங்களை மண்ணிலும், உலர்ந்த இலைகளின் குவியல்களிலும் கழிக்கும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதிகளில் கிடைக்கக்கூடிய நோய்எதிர்ப்பு திறன் கொண்ட, சகிப்புத்தன்மை கொண்ட, தாக்குபிடிக்கக்கூடிய தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் அல்லது அவற்றுக்கு அருகில் கத்திரிக்காய் நடவு செய்வதை தவிர்க்கவும்.
  • உங்கள் வயல்களுக்கு அருகில் உள்ள மாற்று புரவலன்களை அகற்றி விடவும் அல்லது நடவு செய்வதை தவிர்க்கவும்.
  • நோய்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க முழுமையான நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளவும்.
  • ஏதேனும் நோய்பூச்சிகள் தென்படுகிறதா என்று வயல்களை கண்காணிக்கவும்.
  • நாற்றங்கால் அல்லது வயல்களில் காணப்படும் முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை எடுத்து, அழித்துவிடவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் உங்கள் கழிவுகளை அகற்றி, அவற்றை எரித்து அழித்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க