தக்காளி

தக்காளியின் பாக்டீரியா புள்ளி நோய்

Xanthomonas spp. & Pseudomonas syringae pv. tomato

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய, மஞ்சள்-பச்சை நிறப் புண்கள் இளம் இலைகளில் தோன்றும்.
  • இலைகள் சிதைந்து, முறுக்கிகொள்ளும்.
  • முதிர்ச்சி அடைந்த இலைகள் மற்றும் பழங்களில் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் அடர் நிறத்தில், நீர் தோய்த்த காயங்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

இந்த பாக்டீரியா தக்காளி செடியின் தாவரம், தண்டுகள் மற்றும் பழங்களை பாதிக்கிறது. பாக்டீரியா புள்ளிகளின் முதல் அறிகுறிகளானது இளம் இலைகளில் காணப்படும் சிறிய, மஞ்சள் கலந்த பச்சை நிற சிதைவுகளாகும், அதே நேரம் பாக்டீரியா திட்டுக்கள் குறுகிய மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் கருப்பு நிற புள்ளிகளை ஏற்படுத்தும். இவை பொதுவாக இலை ஓரங்கள் அல்லது நுனிகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும், இவை சிதைந்து, முறுக்கிய நிலையில் தோன்றக்கூடும். கடுமையான நோய்த்தொற்றுகளின்போது, பாக்டீரியா திட்டுகளில் உள்ள புள்ளிகள் ஒன்றிணையக்கூடும் அல்லது ஒன்றுடன் ஒன்று சேரக்கூடும், இதன் விளைவாக பெரிய மற்றும் ஒழுங்கற்ற சிதைவுகள் ஏற்படும். பாக்டீரியா புள்ளி நோயினால் ஏற்படும் சிதைவுகளானது 0.25 முதல் 0.5 செ.மீ வரை பெரிதாகி, தோல் நிறம் முதல் பழுப்பு-சிவப்பு நிறம் வரை மாறும், இது இறுதியில் மையப்பகுதி காய்ந்தவுடன் குண்டடி பட்ட துளைகள் போல தோற்றமளிக்கும். பாக்டீரியா புள்ளி நோய் இலைகளில் எற்படுத்தியதை போலவே பழங்களிலும் சிதைவுகளை ஏற்படுத்தும், மேலும் இது இறுதியில் கரடுமுரடானதாகி, பழுப்பு நிறமாகி, தேமல் போன்றாகிவிடும். அதே நேரம் பாக்டீரியா திட்டுக்கள் சிறிய, சற்று உப்பிய, கருப்பு புள்ளிகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் இந்த இரண்டு நோய்களையும் வேறுபடுத்திக் காண்பது கடினம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாக்டீரியா புள்ளி நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கும் மிகவும் செலவாகும். பருவத்தின் ஆரம்பத்திலேயே இந்த நோய் ஏற்பட்டால், முழுப் பயிர்களையும் அழித்து விடுவது குறித்து கருத்தில் கொள்ளுங்கள். செம்பினைக் கொண்ட பாக்டீரியக் கொல்லிகள் இரண்டு பாக்டீரியாவுக்கு எதிராகவும் இலைத்திரள்கள் மற்றும் பழங்களுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றன. குறிப்பாக பாக்டீரியாவைக் கொல்லும் பாக்டீரியா வைரஸ்கள் (பாக்டீரிய உண்ணிகள்) பாக்டீரியா இலைப்புள்ளி நோய்க்கு கிடைக்கின்றன. 1.3% சோடியம் ஹைபோகுளோரைட்டில் ஓர் நிமிடம் அல்லது சூடான நீரில் (50 டிகிரி செல்ஸியஸ்) 25 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்தல் இரண்டு நோய்களுக்குமான தாக்கத்தைக் குறைக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செம்பைக் கொண்ட பாக்டீரியா கொல்லிகளைப் பாதுகாப்பானாகப் பயன்படுத்தலாம், இது இந்த நோயை ஓரளவு கட்டுப்படுத்தும். இந்த நோயின் முதல் அறிகுறி தென்பட்டவுடன் இதனைப் பயன்படுத்தலாம், பின்னர் வெதுவெதுப்பான (புள்ளி) / குளிர்ச்சியான (திட்டு), ஈரப்பதமான சூழல் நிலவும் போது 10 முதல் 14 நாள் இடைவெளியிலும் பயன்படுத்தலாம். செம்புக்கு எதிரான எதிர்ப்புத் திறன் அடிக்கடி உருவாகுவதால், மான்கோசெப் உடன் செம்பினைக் கொண்ட பாக்டீரியக் கொல்லி கலவைகளும் பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

பாக்டீரியா இலைப் புள்ளி நோய் சாந்தோமோனாஸ் பேரினத்தின் பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் வளர்க்கப்படும் தக்காளிச் செடிகளுக்கு மிகவும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும். நோய்க் கிருமிகள் விதைகளின் உள்ளே அல்லது வெளியே, தாவரக் கழிவுகள் மற்றும் சில குறிப்பிட்ட களைகளில் வாழும். இது மண்ணில் சில நாட்கள் முதல் வாரங்கள் வரையிலான குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ளது. நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது, இது மழை அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் மூலம் ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவுகிறது. இது இலைத்துளைகள் மற்றும் காயங்கள் மூலம் தாவரத் திசுக்களினுள் நுழைகிறது. இதற்கு உகந்த அதிகபட்ச வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையாகும். பயிர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால், இதனைக் கட்டுப்படுத்துவது கடினம், மற்றும் மொத்தப் பயிர் இழப்புகளுக்கும் வழிவகுக்கும்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற, நோய் பாதிப்பில்லாத விதைகளை நடவு செய்யவும்.
  • உங்கள் உள்ளூரில் கிடைத்தால், நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • குறிப்பாக மேகமூட்டமான வானிலையின் போது வயலை தவறாமல் கண்காணிக்கவும்.
  • இலைப் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட நாற்றங்காலைக் கண்காணித்து, அகற்றி, அழித்துவிடவும்.
  • வயல்களில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளை அகற்றவும்.
  • மண்ணின் மூலம் தாவர மாசுபாட்டினைத் தவிர்க்க மண்ணில் தழைக்கூளங்களைக் கொண்டு மூடவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்யவும்.
  • இலைத் திரள்கள் ஈரமாக இருக்கும் போது, மேல்நிலை நீர்ப்பாசனம் செய்வதையும், வயல்களில் வேலை செய்வதையும் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் தாவரக் குப்பைகளை உழுது புதைத்து விடவும்.
  • மாற்றாக, தாவர குப்பைகளை அகற்றிவிட்டு, சில வாரங்கள் அல்லது மாதத்திற்குபின் மண்ணை வெயிலில் காய விடவும் (சூரியஒளியாக்கம்).
  • நோய் எளிதில் பாதிக்காத பயிர் மூலம் 2-3 ஆண்டுக்கு பயிர் சுழற்சி மேற்கொள்வதற்கு திட்டமிடுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க