தக்காளி

தக்காளியின் பாக்டீரியா சொறி நோய்

Clavibacter michiganensis subs. michiganensis

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் அதன் ஓரங்களில் இருந்து தொடங்கி, மஞ்சள் நிறமாகுதல், சுருண்டுக்கொள்ளுதல் மற்றும் வாடிப்போகுதல்.
  • பழங்களின் மீது ஒளிவட்டங்களுடன் பழுப்பு நிற புள்ளிகள்.
  • செங்குத்தான கோடுகளுடன் தண்டு அழுகுதல்.
  • தண்டில் பிளவுகள் ஏற்படுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நாற்றுக்கள், காம்புகள் மற்றும் இலை நரம்புகளில் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட பலமற்ற, வளர்ச்சி குன்றிய பயிர்களை உருவாக்கும். முதன்மை நோய்த் தொற்றுக்கள் புதிய திசுக்களைப் பாதித்ததால் (அமைப்பு ரீதியாக) அல்லது இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளினால், முதிர்ந்த பயிர்களில் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். முதிர்ந்த இலைகளில் நரம்புகளுக்கு இடையேயான பச்சையச் சோகை, சுருண்டு கொள்ளுதல் மற்றும் வாடிப்போகுதல் போன்றவை இந்த நோய் அமைப்பு ரீதியாக பரவியதற்கான அறிகுறிகளாகும் (சில சமயங்களில் இவை ஒரு புறம் மட்டும் கூட காணப்படும்). பின்னர், இலைகள் பழுப்பு நிறமாகும் மற்றும் அழிந்துபோகும். காம்புகள் பச்சையாகவே தொடர்ந்து இருக்கும் மற்றும் தண்டுகளுடன் உறுதியாக இணைந்திருக்கும். புதிய நோய்த் தொற்றுகள் இருப்பதை, அடர் பழுப்பு நிறச் சிதைவுகள் இலையின் ஓரங்களில் இருப்பது மற்றும் பிரகாசமான ஒளிவட்டத்துடன் இலையின் கூர்முனைப் பகுதியில் இருப்பது ஆகியவற்றின் மூலம் வகைப்படுத்தலாம். தண்டின் அடிப்பகுதி அழுகியிருக்கும் மற்றும் அடர் பழுப்பு மற்றும் பழுப்பு நிற செங்குத்தான கோடுகள் மேற்புறப் பகுதியில் காணப்படும். பின்னர் தண்டுகள் பிரிந்து நீண்ட சொறி போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தும். பழங்களில் பிரகாசமான ஒளிவட்டங்களுடன் கூடிய பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். நோய் வளரும்போது, மொத்த பயிரும் வறட்சியுறும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

8% அசிட்டிக் அமிலத்தில் அல்லது 5% ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் விதைகளை மூழ்க வைக்கவும். மெத்தைல் ப்ரோமைடு அல்லது நீர் சிகிச்சைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அடிக்கடி பொழியும் மழை மற்றும் நீண்ட கால ஈரமான காலநிலை போன்ற காலகட்டங்களில் பேக்டீரியாக்கொல்லிகளை தெளித்தல் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் இலைக் கருகல் மற்றும் பழத்தில் புள்ளிகள் ஏற்படுதல் போன்றவற்றினைத் தவிர்க்கலாம். பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டால், தாமிரம் அடிப்படையிலான தயாரிப்புகளின் பயன்பாடு கூடுதல் பலனை அளிக்கும், ஏனெனில் ஒரு பகுதியில் ஏற்படும் நோய்த்தாக்கம் சிறிய பொருளாதார அச்சுறுத்தலை மட்டுமே ஏற்படுத்தும்.

இது எதனால் ஏற்படுகிறது

விதைகள், பயிர்களின் எஞ்சிய பகுதிகள் அல்லது மண்ணில் இந்த பாக்டீரியாக்கள் உயிர்வாழும். பாதிக்கப்பட்ட விதைகள், மண்ணில் உள்ள நோய்க்காரணிகள் அல்லது கிள்ளுவதன் மூலமும் இவை பரவும். இலையின் நரம்புகளில் இவை பெருகி மற்றும் சத்துக்கள் மற்றும் நீர் போன்றவை பயிருக்குள் செல்வதை நிறுத்தும். இதனால் பயிர்கள் வாடிப்போகும் மற்றும் தளர்வுறும். அதிகப்படியான மண் ஈரப்பதம் அல்லது ஒப்பு ஈரப்பதம் மற்றும் சூடான வெப்பநிலை (24 – 32 டிகிரி செல்சியஸ்) போன்றவை நோயின் வளர்ச்சிக்குச் சாதகமாக உதவக் கூடியவை.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட நோய் தொற்றில்லாத விதைகள் அல்லது நாற்றுகளைத் தேர்வு செய்து பயிரிடவும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் இருப்பின் அவற்றினைப் பயன்படுத்தவும்.
  • நிலத்தினைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மண்ணற்ற ஊடகமான பிளாஸ்டிக் தட்டுக்களை பயன்படுத்தி நாற்றுக்களை உருவாக்கலாம்.
  • முடிந்தால், நீராவியினால் தூய்மை செய்யப்பட்ட விதைப்படுகைகள் அல்லது மண்ணினைப் பயன்படுத்தி பாக்டீரியாக்களை அழிக்கலாம்.
  • உங்களின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைச் சுத்தமாக வைத்திருக்கவும்.
  • சோலனசியே இனத்தைச் சார்ந்த களைகளை நீக்கவும்.
  • களத்தினைக் கண்காணித்து மற்றும் நோய் பாதிப்பு கொண்ட பயிர்களைத் தரையிலேயே நீக்கிவிடவும்.
  • சோலனசியஸ் குடும்ப வகை அல்லாத தாவரங்களுடன் தக்காளியைக் கொண்டு பயிர்சுழற்சியினை குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு செய்யவும்.
  • அறுவடைக்குப் பின்னர் ஆழமாக நிலத்தை உழுது மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களின் எஞ்சிய பாகங்களைப் புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க