அரிசி

நெற்பயிரின் புல் போன்ற குட்டை வைரஸ் நோய்

RGSV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • குன்றிய தாவர வளர்ச்சி, இலைகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் மிகவும் செங்குத்தான வளர்ச்சி போன்றவை இவற்றின் வழக்கமான அறிகுறிகளாகும்.
  • இலைகளில் கரும்பழுப்பு அல்லது துரு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • நாற்றுகளாக இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டத் தாவரங்கள் அரிதாக முதிர்ச்சி அடைகின்றன.
  • பிந்தைய நிலைகளில் பாதிக்கப்பட்டத் தாவரங்கள் கதிர்களை உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நெற்பயிர்கள் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிக்கப்படுகின்றன, ஆனால் தாவரங்களின் வளர்ச்சிக் காலத்தில், நிலத்தை உழும்போது இவை அதிகம் பாதிக்கப்படுகிறது. மிகவும் பொதுவான அறிகுறிகளானது: வளர்ச்சி கடுமையாகக் குன்றிப்போகுதல், அதிகப்படியான பக்கக்கன்றினால் புல் போன்ற தோற்றம் மற்றும் மிகவும் செங்குத்தான தாவர வளர்ச்சி போன்றவை ஆகும். இலைகள் சிறியதாகவும், குறுகியதாகவும், புள்ளிகளுடன் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைப் பரப்பினை உற்று நோக்கினால் அவற்றுள் எண்ணற்ற கரும் பழுப்பு அல்லது துரு நிறத்திலான புள்ளிகள் அல்லது திட்டுக்கள் காணப்படும். இது பெரும்பாலும் முழு இலையையும் மூடிவிடும். நாற்றுகளாக இருக்கும்போது நோய்பாதிப்பு ஏற்பட்டால், தாவரங்கள் அரிதாக முதிர்ச்சியடையும். வளர்ச்சியின் பிந்தைய நிலையில் பாதிக்கப்பட்டத் தாவரங்கள் முதிர்ச்சியடையும் ஆனால் பொதுவாக கதிர்களை உற்பத்தி செய்யாது, இதனால் விளைச்சல் பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை. வேப்ப விதைச் சாறு பழுப்பு நிறத் தாவர தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதன் மூலம் நெற்பயிரில் புல் போன்ற குட்டை வைரஸ் நோய் பரவுவது குறைகிறது. தண்ணீர் சறுக்கு வண்டுகள், மைரிட் வண்டுகள், சிலந்திகள் மற்றும் பல்வேறு முட்டை ஒட்டுண்ணிகள் குளவிகள் மற்றும் ஈக்கள் உள்ளிட்டவை தாவர தத்துப்பூச்சிகளின் இயற்கை எதிரிகள். ஒரு நாள் முழுவதும் விதைப்படுகையில் நீர் தேங்கிநிற்க வைப்பதன் மூலம், பூச்சிகளை மூழ்கடித்து, பழுப்பு நிறத் தாவர தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை, ஆனால் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் அதிகப்படியான பூச்சிகளின் எண்ணிக்கைக் காணப்பட்டால் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படலாம். அபாமெக்டின், புப்ரோஃபெஜின் மற்றும் எடோஃபென்பிராக்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நோய்க்காரணியின் எண்ணிக்கையை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதில்லை, குறிப்பாக வருடம் முழுவதும் அரிசி பயிர்செய்யப்படும் பகுதிகளில் இவை வெற்றிகரமாக செயல்படுவதில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸானது நிலப்பர்வடா (என். லஞ்ஜென்ஸ், என்.பகேரி, என்.முய்ரி) இனங்களின் பழுப்பு நிறத் தாவர தத்துப்பூச்சியால் பரவுகிறது. இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இரண்டும் நீண்ட காலத்திற்கு வைரஸைப் பரப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது, ஆதலால் தொடர்ச்சியான முறையில், பரவி தாவரங்கள் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வைரஸைத் தொற்றிக்கொள்வதற்கு, குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்குத் தாவர தத்துப்பூச்சிகள் பாதிக்கப்பட்ட தாவரத்தை உண்ண வேண்டும். இந்த நோய் குறிப்பாக தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், குறிப்பாக அரிசி ஒற்றைப் பயிர்முறை நடைமுறையில் இருக்கும் பகுதிகளில் காணப்படுகிறது. சாதகமான சூழ்நிலையில், இந்த வைரஸானது நெற்பயிரில் கிழிந்த தோற்றத்தை ஏற்படுத்தும் குட்டை வைரஸோடு இணைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி, கடுமையான இழப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸும் என்.லூஜென்ஸ் என்னும் நோய்க்காரணியால் ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய் மற்றும்/அல்லது நோய்ப்பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • சூரியஒளி தாவரத்தின் அடிப்பகுதியை அடையும் அளவிற்கு, தாவரங்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கவும்.
  • பூச்சியின் உச்சக்கட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க, உங்கள் வயலுக்கு அருகில் பயிர் செய்பவர் நடவு செய்யும்போது நீங்களும் நடவு செய்யுங்கள்.
  • இந்த நோய்ப்பூச்சியின் தாக்குதலை அதிகம் எதிர்க்கும் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நியாயமான முறையில் உரங்களைப் பயன்படுத்துங்கள்.
  • வயல்களில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகளை அகற்றி, அழித்துவிடவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கும் வகையில் பூச்சிக்கொல்லிகளைப் பரந்த அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு பயிர்த்தாள்களை அகற்றி, வயலுக்கு அப்பால் சென்று அவற்றை அழித்துவிடவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்த்தாள்கள் சிதையும் வகையிலும், நோய்ப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி தடைபடும் வகையிலும், அவற்றை ஆழமாக புதைக்கவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க