வாழைப் பழம்

வாழைப்பழ தேமல் நோய் வைரஸ்

CMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மீதான மஞ்சள் மற்றும் பச்சை நிற தேமல் அமைப்புகள் பட்டைவரிகள் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.
  • வளரும் இலைகளின் மீது சிதைவுகளும், அவற்றின் விளிம்புகளில் கருப்பு நிறத்தில் சிதைந்த திசுக்களும் காணப்படும்.
  • இலை உறைகளில் மற்றும் போலிதண்டுகளின் உள்புற திசுக்களில் அழுகிய பகுதிகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களால் முதிர்ச்சியடையவோ, வாழை குலைகளையோ உற்பத்தி செய்ய முடியாது.
  • பழங்கள் சிறியதாக இருக்கும் மற்றும் அவற்றில் வெளிறிய கோடுகள் அல்லது சிதைவுகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

மரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படும். மேலும் இவை முக்கியமாக இலைகளில் காணப்படும். ஆரம்ப அறிகுறிகளானது, நரம்புகளுக்கு இணையாக தேமல் போன்ற தோற்றத்தோடு தொடர்ச்சியான அல்லது குறுக்கீடான வரிகள் காணப்படும். இலைகள் உரிக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும். காலப்போக்கில், இலைபரப்பு முற்றிலும் வளராமல், அவற்றின் விளிம்புகள் ஒழுங்கற்ற முறையில் வளைந்து, சிதைந்த புள்ளிகள் காணப்படும். இளம் இலைகளின் அளவும் குன்றிப்போகும். இலை உறைகளில் அழுகிய பகுதிகள் தோன்றி, அவை மேலும் போலிதண்டுகள் மற்றும் குமிழ்களுக்கும் பரவக்கூடும். முதிர்ந்த இலைகள் கருப்பு அல்லது ஊதா நிற வரிகளுடன் சிதைவுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தி, இறுதியில் கீழே விழுந்துவிடும். பாதிக்கப்பட்ட தாவரங்களால் முதிர்ச்சியடையவோ, வாழை குலைகளையோ உற்பத்தி செய்ய முடியாது. பழங்களில் எப்போதும் அறிகுறிகள் வெளியே தென்படுவதில்லை, ஆனால் அவை அளவில் சிறியதாகவும், அவற்றில் வெளிறிய கோடுகள் அல்லது சிதைவுகளுடனும் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை, ஆனால் இலைப்பேன்கள் மூலம் தொற்றுநோயின் அபாயத்தை குறைக்க சாத்தியம் உள்ளது. ஒட்டுண்ணிகள், கொள்ளை பூச்சிகள் மற்றும் பூஞ்சை இனங்கள் போன்ற பல்வேறு இயற்கை எதிரிகளை இலைப்பேன் இனங்களுக்கு எதிராக திறம்பட செயல்படுத்த முடியும். வேர்வழிச் சந்ததிகளை 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு நாளைக்கு உலர் வெப்ப சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை, ஆனால் மாற்று புரவலன்கள் மற்றும் நோய்க்காரணிகளை குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், டிமேட்டோன்-மெத்தில், டைமீதோயேட் மற்றும் மாலத்தியான் போன்ற தயாரிப்புகளை இலைத்தொகுதி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். பட்டியலிடப்பட்ட இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கும், விலங்குகளுக்கும் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை கொண்டவை என்பதை நினைவில் கொள்க.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் வைரஸால் ஏற்படுகிறது. இதன் முதன்மை நோய்த்தாக்கம் பொதுவாக வேர் வழிச்சந்ததிகள் போன்ற பாதிக்கப்பட்ட தாவர பொருட்களை நாற்றுகளாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகிறது. இலைப்பேன்கள் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளுக்கு காரணிகளாக உள்ளன, வைரஸ்களை பிற தாவரங்கள் அல்லது வயல்களுக்கு பரப்புகின்றன. வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை வைரஸிற்கு செயலற்ற புரவலன் தாவரங்களாக உள்ளன, அதாவது எத்தகைய அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் வைரஸ் துகள்களை இவை பரப்புகின்றன. அடிக்கடி ஏற்படும் மழைப்பொழிவு, உதாரணமாக பிற்பகுதியில் மற்றும் பிந்தைய பருவ காலங்களில் ஏற்படும் மழைப்பொழிவு போன்ற குறிப்பிட்ட காலநிலை இந்த நோய்த்தொற்றுக்கு சாதகமாக உள்ளது. இந்த நோய் வாழை மரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் இவை பெரும் விளைச்சல் இழப்பிற்கு வழிவகுக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நீங்கள் வசிக்கும் இடத்தில் கண்டிப்பான தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை இருந்தால் அவற்றை கடைபிடிக்கவும்.
  • தரமான மூலங்களில் இருந்து ஆரோக்கியமான நடவுப் பொருட்களை பயன்படுத்தவும்.
  • தோட்டத்தில் நோய்பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகம் சாத்தியம் கொண்ட வகைகளை நடவு செய்ய வேண்டாம்.
  • நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இலைப்பேன்கள் போன்ற நோய்க்காரணிகள் ஏதேனும் தென்படுகிறதா என தாவரங்களையும், வயல்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் இனங்கள், மக்காச்சோளம் மற்றும் பனிக்கம் மற்றும் டிஜீடாலியா இனங்கள் போன்ற மாற்று புரவலன்களை வாழை தோட்டத்திற்கு அருகே பயிர் செய்ய வேண்டாம்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து இலைப்பேன்கள் நுழைவதை கண்காணிக்க, மூன்று முதல் நான்கு வரிசைகளில் பழுப்பு சணல் பூக்கள் (குரோட்டோலாரியா ஜன்சியா) போன்ற தடை பயிர்களை பயன்படுத்தவும்.
  • வயலில் இருந்து பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி, அவற்றை புதைப்பதன் மூலம் அல்லது எரிப்பதன் மூலம் அழிக்கவும்.
  • பிற வயல்களுக்கிடையே தண்டுவழிச்சந்ததிகளைப் பரப்ப வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க