கத்திரிக்காய்

தக்காளித் தேமல் நோய்

TMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • பாதிக்கப்பட்ட இலைகள் சிதைவுற்றிருக்கும், பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் பல்வண்ணப் புள்ளி அமைப்பு இலைகளில் காணப்படும்.
  • பயிர்களின் வளர்ச்சி குறைந்து மற்றும் அவற்றின் கனிகள் உருவாகும் தன்மை குறையும்.
  • முதிர்ந்த கனிகள் பழுப்பு வண்ணப் புள்ளிகளை அவற்றின் மேற்பரப்பில் உருவாக்கும் மற்றும் உட்புற சதைகளில் காயங்கள் உருவாக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்

கத்திரிக்காய்

அறிகுறிகள்

அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் மற்றும் அனைத்துத் தாவர பாகங்களையும் இந்த நோய் பாதிக்கக்கூடும். இந்த அறிகுறிகள் சுற்றுச்சூழல் நிலைகளைச் சார்ந்தது (வெளிச்சம், பகல் பொழுதின் நீளம், வெப்பநிலை). பாதிக்கப்பட்ட இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் பல்வண்ண புள்ளி அமைப்பு அல்லது தேமல் போன்று காணப்படும். இளம் இலைகள் சிறிது சிதைவுற்றிருக்கும். முதிர்ந்த இலைகள் வளர்ந்த அடர் பச்சை பகுதிகளைக் கொண்டிருக்கும். சிலவேளைகளில், அடர் சிதைவுற்ற கோடுகள் தண்டுகள் மற்றும் காம்புகளில் காணப்படும். பயிர்களின் வளர்ச்சி குறையும் மற்றும் அவற்றின் கனிகள் உருவாகும் தன்மை குறையும். ஒழுங்கற்ற முறையில் பழங்கள் பழுத்து, பழுப்பு வண்ணப் புள்ளிகள் தோன்றும் மற்றும் உட்புற சதைகள் மற்றும் சுவர்களில் காயங்கள் ஏற்படும். இதனால் பயிரின் மகசூல் குறிப்பிடும் அளவிற்கு குறைந்துவிடக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளை 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 நாட்களுக்கு அல்லது 82-85 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 24 மணி நேரத்திற்கு உலர் வெப்பமாக்குதல் மூலம் வைரஸ்களை அழிக்கலாம். மாறாக, 100 கி/லி டிரைசோடியம் பாஸ்பேட் கரைசலில் விதைகளை 15 நிமிடங்கள் மூழ்க வைத்துப் பின்னர் தண்ணீர் மூலம் கழுவி மற்றும் உலர வைத்துப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தக்காளித் தேமல் நோய்க்கு எதிராகச் சிறப்பான வேதியியல் சிகிச்சை முறைகள் எதுவுமில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

பயிரின் எஞ்சிய பகுதிகள் அல்லது வேரின் எஞ்சிய பகுதிகளில் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழக்கூடும் (பெரும்பாலாக மண்ணில் ஒரு மாதம்). வேர்களில் சிறிய காயங்கள் ஏற்படுவதன் மூலமாகப் பயிர்கள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட விதைகள், நாற்றுக்கள், களைகள் மற்றும் சுகாதாரமற்ற தாவர பகுதிகள் மூலம் வைரஸ் பரவும். காற்று, மழை, வெட்டுக்கிளி, சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகள் மூலம் வயல்களுக்கு இடையே வைரஸ்கள் பரவும். பயிரினைக் கையாள்வதில் மேற்கொள்ளப்படும் மோசமான விவசாய முறைகளினால் வைரஸ் பரிமாற்றம் விரைவாக நடைபெறும். பகல் பொழுதின் நீளம், வெப்பநிலை மற்றும் ஒளியின் செறிவு, பயிரின் வகை, வயது போன்ற பல காரணிகள் நோய்த் தாக்கத்தின் அளவினைத் தீர்மானிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
  • நீராவி மூலம் பதப்படுத்துதலை மேற்கொண்டு வைரஸ் மண்ணின் விதைப்படுக்கைகளை அகற்றவும்.
  • ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பயிரிடல் வேண்டாம்.
  • கைகளை கழுவிவிட்டு பயிர்களை அணுகவும், கையுறைகளைப் பயன்படுத்தவும் மற்றும் சுகாதாரமான கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தவும்.
  • புகையிலைப் பொருட்களை தக்காளி பயிர்களுக்கு அருகே (சிகரெட் போன்றவை) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • விதைப்படுகைகள் மற்றும் களத்தினைத் தொடர்ச்சியாக கண்காணித்து, நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்கவும் மற்றும் எரித்துவிடவும்.
  • நிலத்திற்குள் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளை நீக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பகுதிகளை ஆழமாக உழுது புதைத்து விடவும் அல்லது அவற்றை எரித்து விடவும்.
  • மாற்றுப் புரவலன் பயிர்களைத் தக்காளிக்கு அருகே பயிரிடுதலைத் தவிர்க்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சியினை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குச் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க