வாழைப் பழம்

வாழைப்பழ பூக்காம்பிலை தேமல் வைரஸ்

BBrMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • மலர் கொத்துக்களை மூடிக்கொள்ளும் இளம் இலைகளில் சிவந்த-பழுப்பு நிற தேமல் அமைப்புகள் காணப்படும்.
  • இலைக் காம்புகள் மற்றும் பழ குலைகளின் மையநரம்புகள் அல்லது காம்புகளில் பச்சை அல்லது சிவந்த-பழுப்பு நிற சுழல்-வடிவ புண்கள் மற்றும் கோடுகள் காணப்படும்.
  • தண்டுகளின் உட்புற திசுக்களில் நிறமாற்றம் காணப்படும்.
  • குலைகள் மற்றும் பழங்கள் சிதைந்து போகக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

மிக வெளிப்படையான அறிகுறிகளானது சிவந்த-பழுப்பு நிற தேமல் போன்ற அமைப்புகளாக மஞ்சரிகளின் பூக்காம்பு இலைகளில் தோன்றும். பூக்காம்பிலை என்பது மலர்களின் காம்புகளில் உள்ள மலர் கொத்துக்களை மூடும் சிறிய இலைகள் ஆகும். இளம் தாவரங்களில், வெளிறிய அல்லது சிவந்த-பழுப்பு நிற சுழல் வடிவ புண்கள் மற்றும் கோடுகள் இலை காம்புகள் அல்லது மையநரம்புகளில் தோன்றும். சில நேரங்களில், அவை நரம்புகளுக்கு இணையாக அல்லது பழ குலைகளின் தண்டுகள் மீதான இலை பரப்புகளிலும் தோன்றும். இறந்த இலைகள் கொட்டிய பிறகு, கரும்பழுப்பு நிற கறைகள் அல்லது கோடுகள் உட்புற திசுக்களில் காணப்படும். குலைகளின் வளர்ச்சி கோளாறு மற்றும் சிதைந்த பழங்கள் இந்த நோய்க்கான சிறப்பியல்புகளாகும். வைரஸ் விரைவாக பரவி, கடுமையான நோய்தொற்று, பழங்களின் விளைச்சல் மற்றும் தரத்திற்கு இழப்புகள் ஏற்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியல் கட்டுப்பாட்டு பூஞ்சை காரணி வெர்டிசிலியம் லிகானி என்பவற்றை இலைப்பேன்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பயன்படுத்தலாம். இலைப்பேன்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாத போது, பூச்சிக்கொல்லி சோப்பை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான நேரடியான ரசாயன சிகிச்சைகள் இல்லை. இருப்பினும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இலைப்பேன்களை கட்டுப்படுத்தும் (அதாவது சைபர்மெத்ரின், அசிட்டமிட், குளோர்பைரிஃபோஸ்). பாதிக்கப்பட்ட தாவரங்கள் அல்லது வேறாகப் பிரிக்கப்பட்ட மரங்களிலிருந்து வளரும் இளம் தளிர்களை மூலிகைக் கொல்லிகளாக பயன்படுத்தி அழிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது வைரசால் ஏற்படுகிறது. இது வாழை மரங்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பாதிக்கிறது. இது பல்வேறு வகையான இலைப்பேன்கள் மூலம் தொடர்ந்து பரவுகிறது. பாதிக்கப்பட்ட தாவரங்களை உண்ணும் போது வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இது அந்த நோய்க்காரணியில் குறுகிய காலம் மட்டுமே வாழ்கிறது. வயல்களுக்கு இடையேயான தாவரப் பொருட்களின் பரிமாற்றம் அல்லது போக்குவரத்து இந்த நோய் பரவுவதற்கான மற்றொரு வழியாகும். இதன் பொதுவான பெயர், மலர்களின் பூக்காம்புஇலைகளின் மீதான தேமல் போன்ற அறிகுறிகளால் இந்நோய் இப்பெயர் பெற்றது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து நோய்கள் இல்லாத விதைகள் அல்லது நாற்றங்காலை பயன்படுத்தவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பயிர்களைக் கண்காணிக்கவும்.
  • பல்வேறு வயல்களில் வேலை செய்யும் போது கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தப்படுத்தவும்.
  • சந்தேகமான அறிகுறிகளுடன் தென்படும் தாவரங்களை எடுத்து அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க