உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு இலைச் சுருள் வைரஸ் நோய்

PLRV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • தலைகீழான ஓரங்கள்.
  • இளம் இலை நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் நிறம்.
  • முதிர்ந்த இலைகள் ஊதா நிற அடிப்புறத்துடன் கடினமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும்.
  • குன்றிய தாவர வளர்ச்சி.
  • கடினமான மற்றும் மேல்நோக்கிய தண்டுகள்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

தாவரத்தின் வகை, சுற்றுச்சூழல் நிலைகள் மற்றும் நோய் தொற்றின் வகையை பொறுத்து காண்பதற்குரிய நோய் அறிகுறிகள் மாறுபடும். முதன்மையான நோய் பரவுதல் செடிப்பேன் மூலம் ஏற்படுபவை, இவை இளம் இலைகளைக் காணும்போதே தெரியும் அறிகுறியாகும். ஓரங்கள் மேற்புறமாக சுருள் வடிவினைப் பெறத் தொடங்கும். பின்னர் இலைகள் உலர்ந்த நிலைக்கு மாறி மஞ்சள் மற்றும் பச்சைக்கு இடைப்பட்ட நிறத்தினை காட்டும். பாதிக்கப்பட்ட கிழங்குகளில் (இரண்டாம் நிலை பாதிப்பு) இருந்து வளரும் தாவரங்களில், முதிர்ந்த இலைகள் மேற்புறமாக சுருளும், கடினமாகும் மற்றும் உடையும் நிலைக்கு மாறும். அப்போது அதன் அடிப்புறம் ஊதா அல்லது சிவப்பு நிறமாக இருக்கும். அதே நேரத்தில் இளம் இலைகள் மேற்புறமாக சுருளத் தொடங்கும் மற்றும் வெளிறிய பச்சை அல்லது வெளிறிய தோற்றத்துடன் காணப்படும். தாவர வளர்ச்சி குன்றிவிடும் மற்றும் தண்டுகள் கடினமானதாக மாறும். கிழங்கு விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துதல் இவ்விரண்டுமே அதிகப்படியான நோய் தாக்குதலால் பாதிக்கப்படுபவை ஆகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸை அழிக்கும் நேரடி சிகிச்சை சாத்தியமில்லை. ஆனால், செடிப்பேன்களை குறைக்க இயற்கை எதிரிகள் அல்லது ஒட்டுண்ணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தலாம். கரும்பள்ளி வண்டு, சிப்பாய் வண்டுகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள் மற்றும் சில கொசுவினங்கள் பறந்து சென்று செடிப்பேன்களின் முதிர்ந்த மற்றும் இளம் உயிரிகளை உண்ணும் பண்புடையவை. ஒட்டுண்ணி குளவிகளைக் கூட பயன்படுத்திப் பார்க்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். வைரஸ் தொற்று மூலம் பரவும் நோய்களுக்கு இரசாயன சிகிச்சை சாத்தியமில்லை. இருப்பினும் செடிப்பேன்களை சிறிது கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும். நியோனிகோடினைல் பூச்சிக்கொல்லிகளை பயிர் வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

வளரும் பருவத்தில் செடிகள் பாதிக்கப்பட்டு, வைரஸை சுமந்து செல்லும் இலைப்பேன்களால் உண்ணப்படும் போது, ஆரம்ப பரப்புகளை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கிழங்குகள் நடவு செய்யப்பட்டு, அதிலிருந்து உருளைக்கிழங்கு விளையும் போது இரண்டாம் நோய் தொற்று ஏற்படுகிறது. செடிப்பேன் போன்றவை, பிற நோய்களற்ற தாவரத்திற்கும் நோயினை பரவச் செய்யும். செடிப்பேன் அழியாமல் இருக்கும் வரை இந்த நோய்க்குக் காரணமான வைரஸ் அழியாமல் இருக்கும், இதனால் இதன் நிலைப்பண்பு அதிகமாக இருக்கும். வைரஸை ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு பரப்புவதற்கு செடிப்பேன்கள் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது செடிகளை உண்ண வேண்டும். ஈரமான மண் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட விதைகள் அல்லது நோய்களற்ற தாவரங்களிடமிருந்து பெற்ற விதைக் கிழங்குகளை பயன்படுத்தவும்.
  • நன்கு தாக்குப் பிடிக்கும் வகையிலான தாவரங்கள் கிடைத்தால் அவற்றினை பயிரிடவும்.
  • களத்தினை கண்காணித்துக் கொண்டே இருக்கவும்.
  • நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்தினை தனியே எடுத்து அழிக்கவும்.
  • களைகள் மற்றும் தானாக வளர்ந்த தேவையற்ற பயிர்களை அழித்துவிடவும், இதன் மூலம் செடிப்பேன் போன்ற சிறுவகையிலான நோய் பரப்பும் இனத்தினை அழிக்க இயலும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க