சீமை சுரைக்காய்

வெள்ளரிக்காய் பச்சை தேமல் வைரஸ்

CGMMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் இலைகளில் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும் மற்றும் நரம்புகள் மறைந்துப்போகும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகும், சுருண்டு கொள்ளும் மற்றும் உருக்குலைந்து போகும்.
  • தாவரங்கள் குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.
  • பழங்கள் புள்ளிகளுடன், கோடுகளுடன் காணப்படும் அல்லது உருக்குலைந்து போகும்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்
பாகற்காய்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
மேலும்

சீமை சுரைக்காய்

அறிகுறிகள்

நோயின் ஆரம்ப கட்டங்களில், இளம் இலைகளில் வெளிறிய மஞ்சள் பச்சை நிற புள்ளிகள் காணப்படும் மற்றும் நரம்புகள் மறைந்துப்போகும். கடுமையான நோய்த்தொற்றின் போது, வெளிறிய தேமல், சுருக்கம் மற்றும் உருக்குலைவு ஆகியவற்றை இலைகளில் காணலாம், அதே போல நோய்த்தொற்றின் பிந்தைய நிலைகளில் தாவரங்களின் குன்றிய வளர்ச்சி மற்றும் சிதைவுகள் முதலியவை ஏற்படும். முதிர்ச்சியடைந்த இலைகள் வெளிறிய அல்லது மஞ்சள்-வெள்ளை நிறமாக மாறும், முதிர்ச்சியடைவதற்கு முன்னரே கீழே விழுந்து விடும். பழங்கள் மீதான அறிகுறிகள் முற்றிலும் அடையாளம் காணப்படாத (குறைந்தபட்சம் வெளிப்புறத்தில்) வகையிலிருந்து கடுமையான புள்ளிகள் அல்லது கோடுகள், உருக்குலைவு அல்லது வீழ்ச்சி முதலிய அறிகுறிகள் வரை காணப்படும். பிந்தைய அறிகுறிகள் குறிப்பாக உயர்ந்த வெப்பநிலையில் மட்டுமே காணப்படும். சில சந்தர்ப்பங்களில், வெளிப்புற அறிகுறிகளைக் காட்டாத பழங்கள் உள்பக்கத்தில் நிறமாற்றம் அல்லது சிதைவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். பழங்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்னரே கீழே விழுவது போன்றவையும் பொதுவாக காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நீங்கள் விதைகளுக்கு 70 டிகிரி செல்சியஸ் வறண்ட வெப்பநிலையில் மூன்று நாட்கள் வரை சிகிச்சை அளித்தால், அவை செயல்பாட்டு வைரஸ் துகள்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். ஆனால் அவற்றால் மீண்டும் முளைக்கக்கூடும். கிடைக்கும்பட்சத்தில் சி.ஜி.எம்.எம்.வி சோதனைக் கருவியைப் பயன்படுத்துங்கள். மெல்லும் பூச்சிகளை அழிக்கும் கரிம பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மெல்லும் பூச்சிகளைக் கொல்லும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு வைரஸ் பரவுவதைத் தடுக்கும். வெள்ளரிக்காய் தேமல் வைரஸ் நோய் போன்ற வைரஸ் நோய்களுக்கு நேரடி சிகிச்சை எதுவும் சாத்தியம் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் வெள்ளரிக்காய் பச்சை தேமல் வைரஸால்(சி.ஜி.எம்.எம்.வி) ஏற்படுகிறது. இது வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் பூசணி போன்ற சுரைக்காய் வகைகளை பாதிக்கிறது. இந்த வைரஸால் மண்ணில் உள்ள இறந்த தாவர பொருட்களில் நீண்ட காலத்திற்கு தீவிரமாக செயல்பட முடியும். பாதிக்கப்பட்ட விதைகள், வெட்டும் கருவிகள், விவசாய உபகரணங்கள் முதலியவற்றால் ஏற்படும் இயந்திர சேதங்கள் மற்றும் வண்டுகள் போன்ற மெல்லும் பூச்சிகளால் இந்த நோய்த்தொற்று பரவுகிறது. பதியன் முறை அல்லது பயிர்களை சேதப்படுத்தும் பிற பணிகள் மூலம் இந்த நோய் பிற தாவரங்களுக்கு பரவுகிறது. உறிஞ்சும் பூச்சிகள் (எ.கா. அசுவினிகள், பேன்கள், வெள்ளை ஈக்கள்) இந்த வைரஸை பரப்பாது. இது தாவரங்களை பாதித்துவிட்டால், இந்த வைரஸிற்கு எதிராக எந்த சிகிச்சையும் இல்லை. குறிப்பாக கண்ணாடி கூடிகளில் வளர்க்கும் தாவரங்களுக்கு, இந்த வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற ஆதரங்களில் இருந்து பெற்ற விதைகள் அல்லது நாற்றுகளை மட்டுமே பயன்படுத்தவும்.நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • பல்வேறு புரவலன்களை, நோய் ஏற்படும் வகையில் ஒன்றுக்கொன்று அருகே நடவு செய்ய வேண்டாம்.
  • ஏதேனும் தாவர பாகங்கள் மற்றும் விதைகளை கையாளும்போது, நோய் நுண்மங்கள் அழிக்கப்பெற்ற கருவிகளை கொண்டு பணி செய்யவும்.
  • வயலில் வேலை செய்யும்போது, தாவரங்களுக்கு காயங்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும்.
  • வெள்ளரிக்காய் பச்சை தேமல் வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என நோய் பாதிக்க கூடிய பயிர்களை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் தாவரக் கழிவுகளை உடனடியாக அகற்றவும்.
  • அகற்றப்பட்ட பயிர் பொருட்களை எரிக்க அல்லது புதைக்க வேண்டும்.
  • நோய் பாதிப்பு ஏற்படும் பயிர்களை ஒன்றோடொன்று பயிர் செய்வதை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க