கரும்பு

கரும்பின் இலை வெப்பக்காயம்

Stagonospora sacchari

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் அசாதாரண சிறிய அடர் நிற சிவப்பு புள்ளிகள் காணப்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகள் இலை பரப்புகளில் வெள்ளை முதல் மஞ்சள் நிற புள்ளிகளுடன் சிறியதாக இருக்கின்றன, இவை வழக்கமாக நோயை பரப்பும் பொருள் உட்சென்ற 3 முதல் 8 நாட்களுக்குள் ஏற்படும். சிவப்பு அல்லது செம்பழுப்பு நிற புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றி படிப்படியாக நீண்டு தெளிவான மஞ்சள் வளையத்துடன் சுழல் வடிவமாக மாறும். நோயின் தீவிரம் அதிகரிக்கையில், புள்ளிகள் ஒன்றிணைந்து, கடத்துத்திசு கற்றைகள் நெடுகிலும் இலை நுனி வரை நீண்டு சுழல் வடிவ கோடுகளை உருவாக்குகின்றன. காயம் முதலில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும், பின்னர் இவை சிவப்பு நிற ஓரங்களுடன் வைக்கோல் நிறமாக மாறும். இறந்த இலை திசுக்களில் சிறிய கருப்பு நிற கருவில்லா விதைக்குடுவையும் உற்பத்தி செய்யப்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் வறண்டு முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிரக்கூடும். நோய்த்தொற்றானது தண்டின் உயரம், விட்டம் மற்றும் கணுவிடைப்பகுதிகளின் எண்ணிக்கையையும், பச்சை இலைகளின் எண்ணிக்கையையும் குறைக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராக எந்தவொரு உயிரியல் கட்டுப்பாட்டு முறையும் இன்றுவரை நாங்கள் அறியவில்லை. அறிகுறிகளின் நிகழ்வு அல்லது அதன் ஈர்ப்பு சக்தியைக் குறைக்க உதவும் வகையில் ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். கார்பென்டாசிம் மற்றும் மான்கோசெப் போன்ற பூசண கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். போர்டியாக்ஸ் கலவை அல்லது குளோர்தலோனில், தியோபனேட்-மெத்தில் மற்றும் ஜினெப் ஆகியவற்றை தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் ஸ்டாகோனோஸ்போரா சக்காரியின் பூஞ்சை நோய்க்கிருமியால் ஏற்படுகின்றன, இது கடுமையான கருகலை ஏற்படுத்தி, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாட்டை வெகுவாகக் குறைக்கிறது. இந்த நோய் முக்கியமாக மழைக்குப் பிறகு அல்லது வயல்களுக்கு அதிகப்படியான நீர்ப்பாசனம் வழங்கப்பட்டபிறகு ஏற்படுகிறது. இதன் விளைவாக செயல்பாட்டு இலை பரப்பு குறைகிறது. மண், விதை கரும்பு மற்றும் விவசாய கருவிகள் மூலம் இந்த நோயை பரப்ப முடியாது. இது முக்கியமாக காற்றின் ஓட்டம், காற்று மற்றும் மழை வழியாக பரவுகிறது. வறண்ட காலநிலையில், கோடுகளின் உருவாக்கம் விரைவாக இருக்கும். பெரும்பாலான கோடுகள் ஒன்றிணைந்து, நீண்டு, முதிர்ச்சியைத் தடுக்கின்றன மற்றும் திசு நிறத்தை மாற்றுகின்றன. வசந்த மற்றும் இலையுதிர்காலத்தில் கோடுகளின் உருவாக்கம் மிகவும் வெளிப்படையாக தெரியும் மற்றும் குளிர்காலத்தில், வெப்பநிலை பொதுவாக நோய்க்கிருமி உயிர்வாழுவதற்கு மிகவும் குறைவாக இருக்கும். இறுதியாக, இலையின் முழு மேற்பரப்பும் ஒரு விதமான எரிந்த தோற்றத்துடன் காணப்படும்.


தடுப்பு முறைகள்

  • சுகாதார நடவடிக்கைகள் உட்செலுத்தும் பொருளின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
  • எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • சாக்கரம் ஸ்பான்டேனியம், இம்பெரெட்டா சிலிண்ட்ரிகா மற்றும் ரோட்போயெல்லியா கொச்சின்சினென்சிஸ் போன்ற மாற்று புரவலன்களை அகற்றவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றவும்.
  • நோய் ஏற்படுவதைக் குறைக்க மழை மற்றும் ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது நடவு செய்ய வேண்டும்.
  • அறுவடைக்குப் பிறகு, மண்ணிலும், தாவர குப்பைகளிலும் உள்ள கருவில்லா விதைக்குடுவைக்குள் பூஞ்சைப் பூச்சிதல்களைக் கொல்ல கடுமையாக பாதிக்கப்பட்ட வயல்களை எரிக்கலாம்.
  • அதிக கரிம, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க