கொய்யா

விதைப்புள்ளி நோய்

Colletotrichum spp.

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள், காய்கள் அல்லது பழங்களில் நீர் தோய்ந்த காயங்கள் தென்படும்.
  • நீள் வட்ட வடிவிலான காயங்கள் தெளிவான வண்ண ஓரத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • கீழ் தண்டு பகுதி கரும்-பழுப்பு நிறத்தில், சொரசொரப்பாக இருக்கும்.
  • இலை உதிர்தல், தாவரங்கள் சாய்ந்து கீழே விழுதல் அல்லது கிளைகளின் உச்சி கருகி இறந்து போகுதல் உள்ளிட்டவை காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

25 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

கொய்யா

அறிகுறிகள்

பயிர் வகை, பல்வேறு ரகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் அறிகுறிகளின் தீவிரத்தை பாதிக்கும். சாம்பல் முதல் பழுப்பு நிற காயங்கள் இலைகள், தண்டுகள், காய்கள் அல்லது பழங்களில் தோன்றும். இந்த புள்ளிகள் வட்ட, நீள் வட்ட அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் மற்றும் கரும் பழுப்பு, சிவப்பு அல்லது ஊதா நிற ஓரங்களுடன் இருக்கலாம். சாதகமான வானிலை நிலைமைகளின் கீழ், இவை எண்ணிக்கையில் அதிகமாகி, பெரிதாகி, ஒன்றிணைந்து, கரும் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும். அவற்றின் மையப்பகுதி படிப்படியாக சாம்பல் நிறமாக மாறும், மேலும் நோய்த்தொற்றின் பிந்தைய கட்டங்களில், இது சிறிய சிதறிய கருப்பு நிற திட்டுக்களாக காணப்படும். சில பயிர்களில் இலைகளின் நடுப்பகுதியின் சிவப்பு நிறமாற்றம் பொதுவாக காணப்படும். கடுமையான நோய்த்தொற்றுகளில், இலைகள் வாடி, உலர்ந்து உதிர்ந்து, முதிர்ச்சி அடைவதற்கு முன்பே தாவரத்தின் இலைகள் உதிர்ந்து விடக்கூடும். தண்டுகளில், காயங்கள் நீள்வட்டமாகவும், மூழ்கியதாகவும், பழுப்பு நிறமாகவும் இருக்கும், மேலும் அடர் நிற ஓரங்களுடன் காணப்படும். அவை பெரிதாகும்போது, காயங்கள் தண்டுகளின் அடிவாரத்தை சுற்றி ஏற்படக்கூடும், இந்தக் காயங்கள் தாவரங்கள் வாடி, சாய்ந்து விடுவதற்கு வழிவகுக்கும். தண்டுகள் அல்லது கிளைகளின் உச்சி பகுதி கருகி இறந்து போவதும் பொதுவாக காணப்படும் அறிகுறியாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளை விதைப்பதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் முக்கி ஊறவைப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம் (வெப்பநிலையும் நேரமும் பயிரைப் பொறுத்தது). உயிரியல் காரணிகள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும். ட்ரைகோடெர்மா ஹார்சியானம் மற்றும் பாக்டீரியா சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ், பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது பி. மைலோலிக்ஃபேசியன்ஸ் போன்ற பூஞ்சையை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை விதை சிகிச்சையின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தலாம். அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன் கரிம ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட செப்பு கலவைகளை இந்த நோய்க்கு எதிராக பல்வேறு பயிர்களில் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதைப்பதற்கு முன் பூஞ்சைகளைக் கொல்ல விதை சிகிச்சைகளைப் பயன்படுத்தலாம். அசோக்ஸிஸ்ட்ரோபின், போஸ்கலிட், குளோரோதலோனில், மானெப், மான்கோசெப் அல்லது புரோத்தியோகோனசோல் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க தடுப்பு முறையாக தெளிக்கலாம் (தயவுசெய்து உங்கள் பயிருக்கான குறிப்பிட்ட கலவைத்திட்டம் மற்றும் பரிந்துரைகளை சரிபார்க்கவும்). இந்த தயாரிப்புகளில் சிலவற்றுக்கு எதிர்ப்புத்திறன் உள்ளதாக சில வழக்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. சில பயிர்களுக்கு, பயனுள்ள சிகிச்சைகள் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக, அறுவடைக்கு பிந்திய சிகிச்சைகள் உணவு தர மெழுகுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பழங்களில் இந்த நோய் ஏற்படும் சாத்தியங்களைக் குறைக்க பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

கோலெட்டோட்ரிக்கம் இனங்களின் பல வகையான பூஞ்சைகளால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை மண்ணில் வாழக்கூடியது, விதைகளுடன் தொடர்புடையது, அல்லது தாவர குப்பைகள் மற்றும் மாற்று புரவலன்களில் நான்கு ஆண்டுகள் வரை வாழக்கூடியது. புதிய தாவரங்களுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மண்- அல்லது விதை மூலம் பரவும் வித்துகள் நாற்றுகள் முளைக்கும்போது தாக்குகையில், முதன்மை நோய்த்தொற்றுகள் நிகழ்கின்றன, இது திசுக்களில் அமைப்பு ரீதியாக வளர்கிறது. மற்ற சந்தர்ப்பங்களில், வித்துக்கள் மழைத் துளிகளால் கீழ் இலைகளில் தெறிக்கப்பட்டு, மேல்நோக்கி பரவும் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. இலை அல்லது பழ காயங்களுக்குள் உருவாகும் வித்துக்கள் மழை சாரல், பனி, உறிஞ்சும் பூச்சிகள் அல்லது வயலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மூலம் மேல் தாவர பாகங்களுக்கு அல்லது பிற தாவரங்களுக்கு சிதறும்போது இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. குளிர்ச்சியானது முதல் வெதுவெதுப்பான வெப்பநிலை (உகந்தது 20 முதல் 30 ° செல்சியஸ் வரை), அதிக ஹைட்ரோஜென் அயனிச்செறிவு உள்ள மண், நீடித்த இலை ஈரப்பதம், அடிக்கடி மழைப்பொழிவு மற்றும் அடர்த்தியான விதானங்கள் இந்த நோய்க்கு சாதகமாக இருக்கும். சீரான உரமிடும் முறைகளானது, பயிர்கள் விதைப்புள்ளி நோயால் பாதிக்கப்படும் சாத்தியங்களை குறைக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நன்கு உலர்ந்த மண்ணில் பயிர் செய்யவும்.
  • தாவரங்கள் நோய்களை எதிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் வகையில் எருக்களை பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தவும்.
  • சாத்தியமானால், குறைந்த மழைப்பொழிவு உள்ள தளங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வயல்களில் நல்ல வடிகால் அமைக்கவும்.
  • ஆரோக்கியமான தாவரங்களிலிருந்து அல்லது சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் கிடைத்தால், மிகவும் எதிர்ப்புத்திறன் கொண்ட வகையைத் தேர்வுசெய்யவும்.
  • எதிர்ப்புத்திறன் கொண்ட தாவரங்கள் அல்லது ஆரோக்கியமாக இருக்கும் நாற்றுகளை நடவு செய்யவும்.
  • விதைக்கும்போது தாவரங்களுக்கு இடையில் அகலமான இடைவெளியை பராமரிக்கவும்.
  • நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்கள் அல்லது பழத்தோட்டங்களை கண்காணிக்கவும்.
  • வயலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தானே வளரும் தாவரங்கள் மற்றும் களைகளை அகற்றவும்.
  • இலைகள் மற்றும் தண்டுகளைச் சுற்றியுள்ள காற்று சுழற்சியை மேம்படுத்த தக்காளி போன்ற உயரமான தாவரங்களை நிமிர்ந்த பாணியில் கட்டுங்கள்.
  • வயல்களைச் சுற்றி பொறி பயிர்கள் அல்லது மரங்களை நடவு செய்யவும்.
  • உதாரணமாக தாவர குப்பைகளை அகற்றுவதன் மூலம் வயல் அல்லது பழத்தோட்டத்தில் நல்ல சுகாதாரத்தை நடைமுறைப்படுத்தவும்.
  • இலைத்திரள்கள் ஈரமாக இருக்கும்போது வயல்களில் இயந்திரங்கள் இயக்கப்படுவதை அல்லது தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்களை கவனமாக சுத்தம் செய்யவும்.
  • நோய் பரவாமல் இருக்க, தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது தோட்டங்களுக்கு செல்லாமல் இருக்கவும், மேலும் பயன்பாட்டிற்குப் பிறகு அனைத்து தோட்டக் கருவிகளையும் கிருமி நீக்கம் செய்வதை உறுதி செய்யவும்.
  • (4 பாகம் தண்ணீரில் ஒரு பாகம் ப்ளீச்). நீர்ப்பாசனம் அவசியம் என்றால், அதிகாலையில் நீர் பாய்ச்சுவதற்கு திட்டமிடவும், மேலும் இரவு நேரத்திற்கு முன் இலைத்திரள்கள் உலர்ந்து விடுவதை உறுதி செய்யவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனத்திற்கு பதிலாக தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது அவற்றைத் தொடாமல் இருக்கவும்.
  • மோசமான அறிகுறிகளைத் தவிர்க்க சீக்கிரம் அறுவடை செய்யவும்.
  • பழங்களை நன்கு காற்றோட்டமான சூழலில் சேமிக்கவும்.
  • பூஞ்சை விரைவாக சிதைவடைவதால் தாவர குப்பைகளை தரையில் விட்டுவிடவும்.
  • மாற்றாக, தாவர எச்சங்களை மண்ணில் மிக ஆழமாக புதைப்பது சிதைவதற்கு சாதகமாக இருக்கும்.
  • புரவலன் அல்லாத பயிர்கள் (3-4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை) கொண்டு நீண்ட கால பயிர் சுழற்சியைத் திட்டமிடுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க