மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் தண்டு அழுகல் நோய்

Gibberella fujikuroi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பலவீனமான தண்டுகள்.
  • தண்டுகளில் சிறிய, கருப்பு நிற பூஞ்சை கட்டமைப்புகள்.
  • கதிர்களின் நிறமாற்றம்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். பாதிக்கப்பட்ட தாவரங்கள் அவற்றின் அசாதாரண உயரம் மூலம் எளிதில் கண்டறியப்படுகின்றன, அவை நீளமானதாகவோ அல்லது குன்றியதாகவோ மற்றும் வெளிர் தோற்றத்துடனோ காணப்படலாம். விதைகள் காயங்கள், அழுகல் மற்றும் உருக்குலைவு ஆகியவற்றைக் காட்டுகின்றன. தண்டுகளில் பட்டை நிறமாற்றம், பூசண வளர்ச்சி, குன்றிய வளர்ச்சி அல்லது இலைகள் கொத்துக்களாக உருவாகுதல் போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன. இலைகள் அசாதாரண நிறங்களையும் பூஞ்சை வளர்ச்சியையும் காட்டுகின்றன. உச்சிப்பகுதி கருப்பு அல்லது பழுப்பு நிற காயங்கள், பொருக்குகள் மற்றும் கதிர் அழுகல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. முழு தாவரமும் பூசணத்தாக்கத்தால் பாதிப்படைகிறது, முதுமைக் கூர்வுகள் மற்றும் நாற்றுகளின் கருகல் போன்றவையும் காணப்படுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்க்கிருமியை பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, வேப்பஞ்சாறை தெளிக்கவும். நோய்க்கிருமியை அடக்குவதற்கு டிரைக்கோடெர்மா இனங்கள் போன்ற உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை அறிமுகப்படுத்தவும். சூடோமோனாஸ் ஃப்ளூரோசென்ஸ் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் விதை சிகிச்சை மற்றும் மண் பயன்பாடாக உபயோகிக்கலாம். 250 கிலோ எஃப்.ஒய்.எம் கொண்டு பலப்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் விதைகளை நடவு செய்வதற்கு முன் மான்கோஜெப் 50% மற்றும் கார்பென்டாசிம் 25% கரைசல் கொண்டு சிகிச்சையளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண் மூலம் பரவும் பூஞ்சை கிபெரெல்லா புஜிகுரோய் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. நோய்க்கிருமி வித்துகள் காற்று மற்றும் மழை மூலம் பரவி காயங்கள் மூலம் மக்காச்சோள கதிர்களுக்குள் நுழைகின்றன. விதை முளைப்பதில் இருந்து குஞ்சங்கள் முளைக்கும் வரை தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன, ஆனால் அறிகுறிகள் பிந்தைய கட்டங்களில்தான் தெரியவரும். இது விதைகள், பயிர் எச்சங்கள் அல்லது புல் போன்ற மாற்று புரவலன்களில் உயிர்வாழ்கிறது. இது கூலப்பட்டு, வேர்கள் மற்றும் தண்டுகள் மூலம் வித்து தொற்று வழியாக பரவுகிறது. இது முதன்மையாக பூச்சியின் உண்ணும் சேதங்களினால் ஏற்படும் காயங்கள் வழியாக சோள கதிர்காதுகளில் நுழைகிறது. நுழைவு புள்ளிகளிலிருந்து தானிய உட்கருக்களில் இது முளைத்து படிப்படியாக காலனித்துவப்படுத்துகிறது. மாற்றாக, இது வேர்களிலிருந்து தாவரத்தை காலனித்துவப்படுத்த ஆரம்பித்து, முறையான வளர்ச்சியின் மூலம் தாவரத்தின் மேல் பகுதியை காலனித்துப்படுத்தலாம். பரந்த அளவிலான சுற்றுச்சூழல் (அழுத்தம்) நிலைமைகளின் கீழ் தாவரங்கள் பாதிக்கப்படலாம், ஆனால் வானிலை வெப்பமாகவும் (26-28° செல்சியஸ்) ஈரப்பதமாகவும், தாவரங்கள் பூக்கும் கட்டத்தை எட்டும்போதும் அறிகுறிகள் குறிப்பாக கடுமையானதாகின்றன.


தடுப்பு முறைகள்

  • நோய் இல்லாத விதைகள் மற்றும் எஸ்சி 637 போன்ற சகிப்புத்தன்மை கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • மக்காச்சோள தாவரங்களில் ஒட்டுமொத்த மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் வலுவான தண்டு வளர்ச்சியை உறுதி செய்யவும்.
  • தண்டு அழுகல் நோய் ஏற்பட்ட வயல்களில் வரிசைகளுக்கு இடையே 70-90 செ.மீ இடைவெளி மற்றும் தாவரங்களுக்கு இடையில் 30-50 செ.மீ.
  • இடைவெளியுடன் ஏக்கருக்கு 28,000 முதல் 32,000 தாவரங்கள் வரை எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும்.
  • கவனமான நீர்ப்பாசனம், களைக் கட்டுப்பாடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி, போதுமான மண் ஊட்டச்சத்து அளவைக் கடைப்பிடிக்கவும்.
  • தாவரங்களை கவனமாக கண்காணித்து, தானிய மேற்பரப்பில் வெள்ளை கோடுகள், இளம் இலைகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் பூக்கும் கட்டத்தில் வாடும் அறிகுறிகள் மற்றும் மேம்பட்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட தண்டு செம்பழுப்பு நிறமாகுதல் ஆகிய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என கவனிக்கவும்.
  • நோய்க்கிருமியை சிதறடிக்கும் போது தண்டு துளைப்பான்களை குறைந்த மட்டத்தில் வைத்திருக்கவும்.
  • தாவர வளர்ச்சியின் பிற்கால கட்டங்களில் நல்ல முறையில் உரமிடுவதை உறுதி செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி புதைக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர் குப்பைகளை புதைக்க மண்ணை உழவும்.
  • சேமிப்பு வசதிகளை முழுமையாக சுத்தம் செய்யவும்.
  • தானியங்களை சேமிப்பதற்கு முன் அதன் ஈரப்பதம் 15% அல்லது அதற்குக் குறைவாக ஆகும் வரை சூடுப்படுத்தவும்.
  • குறைந்த ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் தானியங்களை சேமிக்கவும்.
  • பருப்பு வகைகள் கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பயிர் சுழற்சியைத் திட்டமிடவும் எ.கா.
  • பீன்ஸ் அல்லது சோயாபீன்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க