முட்டைக்கோசு

மிளகுப் பயிரின் கோனேபோரா கருகல் நோய்

Choanephora cucurbitarum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பூஞ்சையானது பொதுவாக தாவரங்களின் மேல்பாகத்தை முதலில் பாதித்து, பிறகு கீழ்நோக்கிப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.
  • இலைகள் மற்றும் மொட்டுகள் ஈரமாகி, வெள்ளி நிறத்தில், அழுகத் தொடங்கும்.
  • பழங்களின் சில பகுதி, பெரும்பாலும் பூவின் அடிப்பகுதி, பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறமாக மாறும்.
  • பாதிக்கப்பட்டத் திசுக்களில் பூஞ்சை வளர்ச்சியின் அடுக்குகள் தெளிவாகக் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

21 பயிர்கள்
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
பூக்கோசு.
மேலும்

முட்டைக்கோசு

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகளானது மலர்கள், பூ மொட்டுகள் அல்லது வளரும் புள்ளிகள் (மலர் கருகல்) ஆகியவை கருநிறமாகி, வாடுவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. நோயானது பின்னர் கீழ்நோக்கிப் பரவி, இலைகளின்மீது நீர் தோய்த்த காயங்களை ஏற்படுத்தி, அவற்றுக்கு வெள்ளி நிறச் சாயங்களை ஏற்படுத்துகிறது. முதிர்ந்த காயங்கள் சிதைந்து, உலர்ந்து, கருகிய இலை நுனிகளையும், ஓரங்களையும் ஏற்படுத்துகிறது. தண்டுகள் மீது, அழுகியதற்கான அறிகுறிகள் பழுப்பு முதல் கருப்பு நிறத் திட்டுக்களாகத் தோன்றி, இலைகளின் நுனி அல்லது வேர்களில் இருந்து இறக்கத் துவங்குகிறது. இறுதியாக, முழுத் தாவரங்களும் வாடிவிடக்கூடும். இளம் பழங்களில், பொதுவாக மலர்களின் அடிப்பகுதியில் கருநிறத்தில் மென் அழுகல் நோயும் உருவாகுகிறது. கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், பாதிக்கப்பட்டத் திசுக்கள் அனைத்திலும் வெள்ளி நிறத்தில், முடி போன்ற வளர்ச்சி காணப்படும். நாற்றுகளில், இந்த நோயின் அறிகுறிகள் பைட்டோஃப்தோரா கருகல் நோயின் அறிகுறிகளோடு ஒத்திருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு உண்மையில் உயிரியல் சிகிச்சை எதுவும் இல்லை. பெனின், கோனேபோரா குகர்பிடரதிற்கு எதிரான எதிர்விளைவுகளுக்காக சில பயிர்களில் பாக்டீரியம் பேசில்லஸ் சப்டிலீஸ் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. எனினும், மிளகுப் பயிர்கள் மீது எந்த சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோய்க்காக பெயரிடப்பட்ட பூஞ்சைக் கொல்லிகள் ஏதும் இல்லையென்பதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். பூஞ்சைக்கொல்லிகளின் பயன்பாடு அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஆனால் பெரும்பாலும் இது சாத்தியமல்ல, ஏனெனில் தாவரங்கள் தொடர்ச்சியாக பூத்துக் கொண்டிருக்கும், இதனால் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது கோனேபோரா குகர்பிடரம் என்னும் சந்தர்ப்பவாத பூஞ்சையினால் ஏற்படுகிறது, இது வயலில் பணிசெய்யும்போது பூச்சிகள் அல்லது இயந்திரங்களினால் சேதம் அடைந்த திசுக்களை முக்கியமாகத் தாக்குகிறது. இதன் வித்துக்கள் பொதுவாக காற்று, நீர்த்துளி மற்றும் ஆடை, கருவிகள் மற்றும் சாகுபடி உபகரணங்கள் வழியாகப் பரவுகிறது. நீண்ட கால மழைக்காலங்களில், அதிக ஈரப்பதம் மற்றும் உயர் வெப்பநிலைகளில் நோயின் தாக்குதல் பொதுவாக ஏற்படுகிறது. வியப்பேதும் இல்லாமல், இது வெப்பமண்டல காலநிலைகளில் மழைக்காலத்தில் பயிர் செய்யப்படும் மிளகுப் பயிரில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலைமைகளை மோசமாகத் தாக்குப்பிடிக்கும் பயிர்கள் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும். பைதோஃப்டோரா கருகல் நோயுடனான வேறுப்பாட்டைச் சொல்ல வேண்டுமென்றால், சாம்பல் நிற முடிகள் தெரிகிறதா என திசுக்களைக் கண்காணிக்கவும் (மாறாக காலை வேளையில்)


தடுப்பு முறைகள்

  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைக் கண்காணிக்கவும்.
  • வயல்களில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகள் மற்றும் மாற்றுப் புரவலன்களை அகற்றவும்.
  • மண் கெட்டியாவதைக் குறைக்கவும் மற்றும் சாத்தியமானால் வடிகாலினை மேம்படுத்தவும்.
  • நடவு செய்யும் போது தாவரங்களின் அடிப்பகுதியில் அழுத்தங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • தாவரங்களுக்கு இடையேயான இடைவெளியைப் பராமரிக்கவும் மற்றும் உயரமான விதைப்படுகைகள் மற்றும் வரப்புகளைப் பராமரிக்கவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும் மற்றும் சாத்தியமானால் இலைகளை உலர்வாக வைத்துக்கொள்ளவும்.
  • அடர்த்தியான விதானத்தை உருவாக்கும் ஊட்டச்சத்துக்களை அதிகப்படியாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியை செயல்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க