அரிசி

அரிசியின் தானிய கரிப்பூட்டை நோய்

Tilletia barclayana

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பயிர் முதிர்ச்சியில் பொதுவாக அறிகுறிகள் காணப்படுகின்றன.
  • தானியங்களில் கருப்பு கொப்புளங்கள்.
  • மற்ற தாவர பாகங்களில் கருப்புநிற தூசி பூச்சு.
  • இந்த நோய் தானிய கருஊன்களில் கருப்பு வித்துக்களை உருவாக்குவதன் மூலம் தானியத்தின் தரத்தை குறைக்கிறது.
  • இந்த நோயின் சில விகாரங்கள் நச்சுகளை உருவாக்குகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

அரிசி அதன் முதிர்ச்சி நிலையை அடையும் போதுதான் அறிகுறிகள் மிகவும் தெளிவாகத் தெரியும். நோய்த்தொற்று ஏற்படும்போது உமியடிச்செதில்கள் அடர் நிறமாகி, உமி வழியாக கருப்பு கொப்புளங்கள் வெடிக்கின்றன. அதிகாலையில் பனியாக இருக்கும்போது வித்துக்கள் மிகவும் தெளிவாக தெரியும். பாதிக்கப்பட்ட தானியங்கள் ஓரளவுக்கு அல்லது முழுமையாக கரும்பூசணமாகியிருக்கும். வித்துக்களின் கருப்பு கொப்புளங்கள் உமியடிச்செதில்கள் வழியாகத் தள்ளப்படுகின்றன, அவை ஒரே இரவில் பனியின் ஈரப்பதத்திலேயே வீங்கக்கூடும். பாதிக்கப்பட்ட தானியங்களிலிருந்து உதிரும் வித்துகள் மற்ற தாவர பாகங்களில் குடியேறி, நோயைக் கண்டறிவதற்கு உதவும் வகையில் சிறப்பியல்பு கொண்ட கரும்பூசணத்தை உருவாக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிகள் மற்றும் நோய்களின் நுழைவு, நிறுவல் மற்றும் பரவலைத் தடுக்க சிறந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பேசிலஸ் புமிலஸ் போன்ற உயிரியல் காரணிகள் டில்லெட்டியா பார்க்லயானாவின் பூஞ்சைக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அதிகப்படியான தழைச்சத்து வீதங்கள் இந்த நோய்க்கு உகந்ததாக இருக்கிறது , எனவே பொருத்தமான நேரத்தில் தழைச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்துங்கள். நோய்த்தொற்றின் அளவைக் குறைக்க துவக்க வளர்ச்சி கட்டத்திலேயே பூஞ்சைகளைக் கொண்ட புரோகோனஸோலைப் பயன்படுத்துங்கள். அசோக்ஸிஸ்ட்ரோபின், டிரைஃப்ளோக்சிஸ்ட்ரோபின் போன்ற பூஞ்சைக் கொல்லிகளையும் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் நியோவோசியா ஹொரிடா என்றும் அழைக்கப்படும் டில்லெட்டியா பார்க்லயானா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சையானது நெற்தானியங்களை அகற்றி கருப்பு வித்துக்களாக அதில் உயிர் வாழ்கிறது. இவை காற்று மூலம் பரவக்கூடியது, மேலும் பயிருக்குள்ளும் மற்றும் அதன் அண்டை பயிர்களுக்கும் அரிசி தானியங்களை மீண்டும் பாதிக்கலாம். பூஞ்சையின் வித்துக்களானது பாதிக்கப்பட்ட மற்றும் அசுத்தமான தானியங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் எடுத்துச்செல்லப்படும்போது இந்த நோய் பரவுகிறது. அரிசியின் தானிய கரிப்பூட்டையானது தண்ணீரிலும் மிதக்கக்கூடியது, ஆதலால் இது அந்த வழியிலும் பரவக்கூடும். வித்துக்கள் குறைந்தது 3 வருடங்களுக்கு தானியங்களில் உயிர்வாழக்கூடும், மேலும் இது விலங்குகளின் செரிமான பாதையில் கூட உயிர்வாழும். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இந்த பூஞ்சை வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது. பனி மூட்டமான அதிகாலையில், கரிப்பூட்டை தானியங்கள் வீங்கி வெடித்து அதன் மூலம் அதிக வித்துக்களை வெளியிடும்.


தடுப்பு முறைகள்

  • வயல்களில் குறைந்த பாதிப்புக்குள்ளாகிற சாகுபடியைப் பயன்படுத்துங்கள், எடுத்துக்காட்டாக, குறுகிய மற்றும் நடுத்தர தானிய கரிப்பூட்டை வரலாற்றைக் கொண்ட தானிய வகைகள்.
  • முன்னதாக சான்றளிக்கப்பட்ட அரிசி விதைகளை விதைக்கவும்.
  • தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தவும்.
  • அதிகப்படியான தழைச்சத்து விகிதங்களை, குறிப்பாக வெள்ளநீர் பாய்ச்சுவதற்கு முந்தைய நேரத்தின்போது, தவிர்க்கவும்.
  • நோய் பரவாமல் இருக்க நல்ல சுகாதார நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
  • பாதிக்கப்பட்ட அரிசி தாவரத்தை சுற்றி 50 மீ சதுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி பரிந்துரைக்கப்படலாம்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் எரிப்பதன் மூலம் அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க