அரிசி

நெற்பயிரின் வெந்தப்பண்

Alternaria padwickii

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் பழுப்பு நிற ஓரங்களுடன் வட்ட மற்றும் நீள்வட்ட நிற புள்ளிகள்.
  • தானியங்கள் சுருங்கி உடையக்கூடியதாக மாறும்.
  • முழு செடியும் நாற்று கருகல் மற்றும் நாற்றழுகல் நோய் ஆகியவற்றினை வெளிப்படுத்தும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இலைகள் மற்றும் முதிர்ச்சி அடையும் தானியங்களில் அறிகுறிகள் தோன்றும். வேர்கள் அல்லது இளம் இலைகளில் சிறிய கருமையான காயங்கள் ஏற்படும். காயங்களுக்கு மேலே உள்ள நாற்றுகளின் பகுதிகள் கருகி, இறக்கக்கூடும். இலைகளில் அடர் பழுப்பு நிற ஓரங்களுடன் வட்ட வடிவத்திலிருந்து ஓவல் வடிவ புள்ளிகள் (3-10 மிமீ விட்டம்) தோன்றும். இந்தப் பெரிய புள்ளிகள் மையப்பகுதியில் பல வெளிர் பழுப்பு அல்லது வெள்ளை புள்ளிகளைக் கொண்டுள்ளன. தானியங்கள் சுருங்கி உடையக்கூடியதாக மாறும். பாதிக்கப்பட்ட தானியமானது பொதுவாக அடர் நிறத்தில், சுண்ணாம்பு போன்று, உடையக்கூடியதாகவும், சுருங்கியும் காணப்படும், மேலும் அதன் முளைப்புத்திறனும் குறைந்துவிடும். உமியடிச்செதில்களில் செம்பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். தானியங்கள் சுருங்கி உடையக்கூடியதாக மாறும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

2 கிராம்/கிலோ என்ற அளவில் திரம், கேப்டன் அல்லது மான்கோசெப் ஆகியவற்றைக் கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிக்கவும். முளைப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்கையில் சிறந்த பலன்களை பெறுவதற்கு விதைகளை 54° செல்சியஸ் வெப்பநிலையில் 15 நிமிடங்களுக்கு சிகிச்சையளிக்கவும். வயலில் உள்ள பயிர்த்தாள் மற்றும் வைக்கோலை எரித்து விடவும். சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் என்றழைக்கப்படும் நெற்பயிரின் வேர்மண்டலத்தில் வாழும் பாக்டீரியாவின் சூத்திரத்தை ஒரு கிலோவிற்கு 5 மற்றும் 10 என்ற விகிதத்தில் பவுடர் செய்யப்பட்ட தூளாக பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தானிய நிறமாற்றத்தைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில், மான்கோசெப், கார்பாக்ஸின், பாலியாக்ஸின் மற்றும் இப்ரோபென்ஃபோஸ் ஆகியவற்றின் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

நெற்பயிர்களை பாதிக்கின்ற பாலிலி முறையில் இனப்பெருக்கம் செய்யும் பூஞ்சையான டி.பட்விக்கி என்னும் விதை மூலம் பரவும் பூஞ்சையால் இந்த நோய் ஏற்படுகிறது. இது விதை நிறமாற்றம், விதை அழுகல் மற்றும் நாற்று கருகல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்நோய் முதன்மையாக வெப்பமண்டல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு உகந்த சூழலாகும். பூஞ்சையானது தாவரக் குப்பைகள் மற்றும் மண்ணில் பூசண நூல்கற்றையாக உயிர் வாழும்.


தடுப்பு முறைகள்

  • நோய் இல்லாத விதைகளை விதைக்கவும்.
  • வரிசை இடைவெளியைப் பயிற்சி செய்யவும் (15, 20 மற்றும் 25 செமீ அகலம்).
  • இந்த விதை மூலம் பரவும் நோய்க்கிருமியை புதிய பகுதிகளுக்குப் பரவச் செய்வதை அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோயைப் பரவச் செய்யும் பொருட்களை அதிகரிப்பதை தடுக்க சோதனை செய்யப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • அடுத்தப் பருவத்தில் தொற்றுநோயைக் குறைக்கப் பயிர்த்தாள்களை எரித்து விடவும்.
  • தொற்றுநோயின் வளர்ச்சியைப் பின்பு குறைக்க, சேமிப்பதற்கு முன் தானியத்தை முறையாக உலர்த்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க