பூசணிக்காய்

வெள்ளரி இனங்களின் விதைப்புள்ளி நோய்

Glomerella lagenarium

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் நீர் தோய்த்த, மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும்.
  • பழங்களில் வட்ட வடிவில், கருப்புநிற, நீர்தோய்த்த புள்ளிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
சீமை சுரைக்காய்

பூசணிக்காய்

அறிகுறிகள்

இலைகளில் அறிகுறிகள் நீர் தோய்த்த காயங்களாக தொடங்கி, பின்னர் அவை மஞ்சள் நிற வட்ட வடிவிலான புள்ளிகளாக மாறும். இந்த புள்ளிகளின் பிரதான அம்சம் அவற்றின் ஒழுங்கற்ற வடிவம்தான், பின்னர் அவை பெரிதாகும்போது கரும் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும். தண்டுகளில் ஏற்படும் புண்கள் கூட வெளிப்படையானவை, மேலும் அவை வளருகையில் இரத்தநாளத் திசுக்களை துளையிட்டு, தண்டுகள் மற்றும் குழைகளை வாட செய்கிறது. சில இனங்களில் தண்டுகள் தோன்றும். பழங்கள் மீது, பெரிய, வட்ட வடிவிலான, கருப்பு நிற, நீர் தோய்த்த புள்ளிகள் காணப்படும், பின்னர் அவை புண்களாக மாறும். தர்பூசணியில், இந்த புள்ளிகள் 6 முதல் 13 மிமீ விட்டம் மற்றும் 6 மி.மீ ஆழத்தினை கொண்டிருக்கும். ஈரப்பதமாக இருக்கும் போது, புண்களின் கருப்பு நிற மையப்பகுதியை ஊன்பசைபோன்ற சால்மன் நிற வித்துக்களின் கொத்துக்கள் மூடிக்கொள்ளும். இதே போன்ற புண்கள் விலாம்பழம் மற்றும் வெள்ளரிகளிலும் ஏற்படுகின்றன. இந்த இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புண்கள்/சொறிகள் வெள்ளரி இனங்களில் ஏற்படும் நோய்க்கான மிகவும் சிறப்பியல்பான அறிகுறியாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வெள்ளரி இனங்களில் ஏற்படும் இந்த நோய்களுக்கு எதிராக அனுமதிக்கப்பட்ட கரிம ரீதியான செப்பு கலவைகளை தெளிக்கலாம். இவை கடந்த காலத்தில் நல்ல விளைவுகளை வழங்கியுள்ளது. உயிரியல் கட்டுப்பாட்டு காரணி பேசில்லஸ் சப்டிலிஸ் என்பவற்றை கொண்டிருக்கும் கலவைகளும் கிடைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டால், முறையான இடைவெளியில் பயிர்களில் அங்கீகரிக்கப்பட்ட பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்துங்கள். கிடைக்கக்கூடிய பூஞ்சைக்கொல்லிகள் மத்தியில் குளோரோத்தலோனில், மானெப் மற்றும் மான்கோசேப் ஆகிய கலவைகள் அடங்கும். மான்கோசெப் உடனான குளோரோத்தலோனில் கலவை மிகவும் பயனுள்ள இலை தொகுதி தெளிப்பு சிகிச்சையாக இருக்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

இலைகள் மற்றும் பழங்களில் தென்படும் இந்த நோய்க்கான அறிகுறிகள் குளோமெரெல்லா லகேனரியம் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது முன்பு அறுவடை செய்த பயிர்களின் நோயுற்ற கழிவுகள் அல்லது வெள்ளரி விதைகளில் குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் இருக்கும். வசந்த காலத்தில், வானிலையானது அதிகம் ஈரப்பதமாக இருக்கும் போது, பூஞ்சையானது மண்ணிற்கு அருகே இருக்கும் கொடிகள் மற்றும் இலை தொகுதிகளில் காற்றில் பரவும் வித்துக்களை வெளியிடும். பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சி பெரும்பாலும் சுற்றுச்சூழல் ஈரப்பதங்கள், இலை ஈரப்பதம் மற்றும் மிகவும் அதிகமான வெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து இருக்கும், 24 ° செல்சியஸ் உகந்ததாக கருதப்படுகிறது. 4.4 டிகிரி செல்சியசிற்கு கீழே அல்லது 30 ° செல்சியசிற்கு மேலே அல்லது போதுமான ஈரப்பதம் படலங்களை வழங்காவிட்டால் வித்துக்கள் முளைக்காது. கூடுதலாக, நோய்க்காரணி தனது உடலில் ஒட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் தோலிலிருந்து வித்துக்களை வெளிப்படுத்துவதற்கும் தண்ணீர் வேண்டும். தாவர கவிகைகள் உருவாகிய பிறகு, விதைப்புள்ளி நோய் ஏன் பெரும்பாலும் பருவ காலத்தின் நடுப்பகுதியில் ஏற்படுகிறது என்பதனை இது விளக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற, நோய் இல்லாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் உங்கள் பகுதியில் கிடைத்தால் அவற்றைத் தேர்வு செய்யவும் (சந்தையில் பல கிடைக்கின்றன).
  • மூன்று வருட சுழற்சியில் தொடர்பு இல்லாத பயிர்களை வைத்து பயிர் சுழற்சி செய்யவும்.
  • ஒவ்வொரு வருவமும் முடியும்போது பழங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களை உழுவதன் மூலம் வயல்களில் நல்ல சுத்திகரிப்பு பயிற்சியை மேற்கொள்ளவும்.
  • ஈரப்பதமாக இருக்கும் போது வயல்களில் இயந்திரம் அல்லது தொழிலாளர்கள் இயக்கத்தை தவிர்க்கவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனம் தேவைப்பட்டால், அதிகாலையில் அதை திட்டமிடவும், மேலும் இரவு நேரத்திற்கு முன் இலைத் திரள்கள் உலர்வதை உறுதி செய்துகொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க