சோளம்

சோளத்தின் தேன் ஒழுகல் நோய்

Claviceps africana

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • மிருதுவான, வெள்ளை நிறமுடைய கோள வடிவிலான பூஞ்சைகள் சூலகங்களைச் சூழ்ந்திருக்கும்.
  • வித்துக்களைக் கொண்ட, ஆரஞ்சு-பழுப்பு அல்லது வெள்ளை நிறத் தேன்பனி போன்ற திரவம் பயிரின் அனைத்து பாகங்களில் இருந்தும் கசியும்.
  • இந்தத் தேன்பனி வெள்ளை நிற ஓடு போன்ற மேலோடுகளை உருவாக்கி மற்றும் பூஞ்சை வளர்வதற்கான அடித்தளத்தை அளிக்கிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோளம்

அறிகுறிகள்

சில அல்லது அனைத்து சோள தானியத்தின் பூக்களுக்குப் பதிலாக, மிருதுவான, வெள்ளை நிறமுடைய கோள வடிவிலான பூஞ்சைகள் வாட்டங்களுக்கு இடையே வளரும். ஒட்டும், வித்துக்களைக் கொண்ட திரவத்துளிகள் போன்ற தேன்துளி, மெல்லியது முதல் பாகுத்தன்மை கொண்ட நிலையில், ஆரஞ்சு-பழுப்பு அல்லது மேலோட்டமான வெள்ளை நிறத்தில் வெளியேறும். அதிக ஒப்பு ஈரப்பதம் இருக்கும் சூழ்நிலைகளில் இந்தத் தேன்பனியின் பாகியல் திறன் குறையும் மற்றும் மேற்புறம் வெள்ளை நிறமாகும். தானியம், விதை, இலைகள், தண்டு மற்றும் மண் என அனைத்துப் பகுதிகளும் தேன்பனி ஒட்டியது போன்ற சொட்டான தோற்றத்துடன் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த தேன்பனி உலரும் இடங்கள் அனைத்திலும் வெள்ளை, நுண்துகளாலான மேலோடு வடிவங்கள் உருவாகும். பல வகையான சந்தர்ப்பவாதப் பூஞ்சைகளினால் இந்த தேன் துளி காலனிப்படுத்தப்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைகோடெர்மா இனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தனிப்பட்ட பூஞ்சைகளைப் பயன்படுத்தி கண்ணாடிக்கூட சோதனைகளில் நோய் தாக்கத்தினைக் குறைக்கலாம் அல்லது நோய் வராமல் தடுக்கலாம், குறிப்பாக பூஞ்சைகள் நோய்த்தொற்று ஏற்படுதற்கு பல நாட்களுக்கு முன்பாகத் தடுப்பூசியாக பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கேப்டான் துணைகொண்டு தேன்பனியினால் நோய்த் தொற்று ஏற்பட்ட விதைகளுக்கு சிகிச்சையளிக்கலாம். மழையில்லாத காலங்களில், ப்ரோபிகோனஸோல் அல்லது டெபுகோனஸோல் (டிரைஅஸோல் பூஞ்சைக் கொல்லிகள்) ஆகியவற்றுடன் 3-4 நிலத் தெளிப்பான்களை 5-7 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தி விதைகளின் உற்பத்தி வகைகளில் சிறந்த முடிவுகளைப் பெறலாம். இந்த பூஞ்சைக் கொல்லிகளுடன் அஸோக்ஃஸிட்ரோபினையும் சேர்த்து பாதிக்கப்பட்ட கூல்முடிகளில் நேரடியாகப் பயன்படுத்தி சிறந்த விளைவினைப் பெற இயலும்.

இது எதனால் ஏற்படுகிறது

க்லாவிசிப்ஸ் ஆஃப்ரிகானா எனும் பூஞ்சைகளால் இந்நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட சோளத்தின் பூக்களில் இருந்து தேன் பனி போன்ற திரவம் அதிக செறிவுடன் கூடிய முதன்மை வித்துக்களுடன் வடியும். இத்துடன், காற்றின் வழியே பரவும் வகையில் வித்துக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இவை மிதமானது முதல் அதிகப்படியான தூரம் வரை பரவும். விதை மூலம் பரவும் முதிர்ந்த வித்துக்கள் அல்லது பாதிக்கப்பட்ட தானியமானது அறுவடையின் போது கீழே விழுதல் மற்றும்/அல்லது தேன் பனி எச்சங்கள் திரவ விதைகளில் ஒட்டிக்கொண்டிருப்பது போன்றவற்றின் காரணமாக முதன்மையாக நோய்த்தொற்று ஏற்படுகிறது. உலர்ந்த தேன்பனி திரவம் சுமார் 9-12 மாதங்கள் வரை நோயினைப் பரப்ப வல்லது. 14 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பொதுவாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த வித்துக்கள் முளைக்கும்..


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான பயிர்கள் அல்லது சான்றிதழ் பெறப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • பூஞ்சைகளின் வளர்ச்சியினைக் குறைக்க குறித்த பருவத்திற்கு முன்னதாகவே விதைத்தலை மேற்கொள்ளவும்.
  • பூஞ்சைகளினால் குறைவாக பாதிப்பு ஏற்படும் பயிர்வகைகளைத் தேர்வு செய்யவும், உதாரணமாக குறைந்த, பூத்தலுக்கு முந்தைய வெப்பநிலை தாங்கும் தன்மை, இறுக்கமான உமியடிச்செதில் மற்றும் குறைந்த சிறுபூவின் இடைவெளிக் காலம்.
  • தொடர்ச்சியாக நிலத்தினைக் கண்காணித்து மற்றும் பாதிக்கப்பட்ட கதிர்களை உடனடியாக தொற்று நீக்கிய கருவிகளைக் கொண்டு நீக்கவும்.
  • களத்தில் மீதமுள்ள பயிர்களை நிலத்தை ஆழமாக உழுது புதைத்துவிடவும் மற்றும் 3 ஆண்டுகளுக்கான பயிர் சுழற்சியை மேற்கொண்டு நோய்தொற்றினைக் குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க