கோதுமை

அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் நோய்

Gaeumannomyces graminis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தண்டுகள் மற்றும் வேர்கள் கருத்துப்போகும், அடிப்புற இலைகள் வெளிறியத் தோற்றம் பெறும்.
  • ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பயிர்களில் வெள்ளை நிற திட்டுக்கள் தோன்றும்.
  • தானியங்கள் சோர்வான தோற்றம் பெறும், பயிர்கள் எளிதில் மண்ணில் இருந்து வெளிவரும்படி மாறிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

கோதுமை

அறிகுறிகள்

ஜியெமன்னோமைசெஸ் க்ராமினிஸ் எனும் பூஞ்சைகளால் இந்த நோய் ஏற்படுகிறது. தண்டுகள் மற்றும் வேர்கள் கருத்துப்போதல், அடிப்புற இலைகள் வெளிறியத் தோற்றம் பெறுதல் ஆகியவற்றின் மூலம் இதனை அறியலாம். அடர் பூஞ்சைகளின் வளர்ச்சி வேர் திசுக்களைச் சுற்றி காணப்படும். அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகள் மற்றும் அதிக நீர்ப்பாசன பகுதிகளில் இந்த நோயினால்எண்ணற்ற வெள்ளை தலைகளை கொண்ட கோதுமை தாவரங்களை பெரிய திட்டுக்களாக ஏற்படுகிறது. மோசமான அளவில் வேர்கள் அழுகியிருப்பதன் காரணமாக எளிதில் மண்ணில் இருந்து அவற்றினை புடுங்கிவிட முடியும். இந்த நிலையில் வேர்கள் முழுவதும் கருப்பாக மாறியிருக்கும். பாதிக்கப்பட்ட பயிர்கள் சோர்வான தோற்றம் கொண்ட தானியங்களை உருவாக்கும், இவை அறுவடையின் போது தேவையான பலனைத் தருவதில்லை.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ப்சூடோமோனாஸ் குடும்பத்தினைச் சேர்ந்த பல்வகை பாக்டீரியாக்களைக் கொண்டு நோய்க்காரணிகளை அழிக்கலாம். இவை நோய் எதிர்ப்புப் பொருட்களை உருவாக்குகின்றன, மேலும் இவை இரும்புசத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களுக்காக போட்டியிடுபவை. பெனாஸின் அல்லது 2,4 டையசெடைல்ப்லோரோக்ளுசினோல் ஆகியவற்றினை உருவாக்கும் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி இந்நோய்க்கு எதிராக சிறந்த மாற்றத்தினை உருவாக்கலாம். எதிர்க்கும் பூஞ்சை திரிபுகளையும் பயன்படுத்தலாம் எடுத்துக்காட்டாக: ஜியெமன்னோமைசெஸ் க்ராமினிஸ் நோய்க்காரணி அல்லாத மாறுபாடு உடைய கிராமினிஸை பயன்படுத்தலாம். இவை கோதுமை விதைகளை சூழ்ந்துகொண்டு, நோய்க்காரணிக்கு எதிராக எதிர்ப்பினை உருவாக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். சில்தியோஃபாம் மற்றும் ஃப்ளுகுயின்கோனஸோல் போன்றவை கலந்த பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி இப்பூஞ்சைகளை அழிக்கலாம். ஸ்டெரோல் பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் ஸ்ட்ரோபிலுரின் போன்றவற்றை பயன்படுத்தியும் இந்நோய் அறிகுறிகளை நன்றாகக் குறைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

ஜியெமன்னோமைசெஸ் க்ராமினிஸ் எனும் பூஞ்சைகளால் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது. பருவங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இவை பயிர்களின் எஞ்சிய பகுதிகளில் அல்லது மண்ணில் வாழ்கின்றன. வளரும் பயிர்களின் வேர்களில் இவை ஊட்டம் பெறுகின்றன மற்றும் வேர்கள் இறந்தவுடன் இவை அடுத்து திசுக்களில் குடியேறி அங்கு ஊட்டம் பெறுகின்றன. அறுவடை மற்றும் புதிய தாவரங்களின் விதைப்பு ஆகியவற்றிற்கு இடையே ஒப்பீட்டளவில் குறுகிய காலம் (வாரங்கள் அல்லது சில மாதங்கள்) இருக்கும்போது இது வளர்கிறது. இவற்றின் வித்துக்கள் காற்று, நீர், விலங்குகள் மற்றும் பண்ணைக் கருவிகள் அல்லது இயந்திரங்கள் மூலம் பரவுகின்றன. இந்த நோய்க்காரணிகள் இதேபோன்ற மற்ற காரணிகளுடன் ஒப்பிடும்போது அதிகம் பாதிக்கக்கூடியவை , அதனால் இவை பிறப்பு மண் நுண்ணியிரிகளோடு ஒன்றாக வாழ்வதில்லை. வெப்பத்தினாலும் இவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • தடுப்புவகைப் பயிர்கள் கிடைத்தால் அவற்றை பயிரிடவும்.
  • சூடான, ஈரப்பதமான காலநிலைகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கோதுமையினை பயிரிடவும், குளிர்ந்த காலங்களில் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் பயிரிடவும்.
  • கோதுமைக்குப் பதிலாக நெற்பயிரினை ஒவ்வொரு இரண்டாம் ஆண்டிலும் பயிரிட்டு, அதிகப்படியான நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் நோய்க்காரணிகளை அழிக்க இயலும்.
  • முந்தைய பயிர்களை அறுவடை செய்த இரண்டு வாரங்கள் கழித்து அடுத்த விதைத்தலை தள்ளிவைப்பதன் மூலம் நோய் பரவுவதை குறைக்கலாம்.
  • நுண்ணுயிர்களின் அழுத்தம் மண்ணில் அதிகரிக்க மண்ணினை நன்றாக உழுதல் வேண்டும்.
  • பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றினைக் கொண்டு போதுமான அளவிற்கு உரமளித்தல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க