கோதுமை

தானியங்களின் பனிப் பூசண நோய்

Monographella nivalis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழுப்பு நிறக் காயங்கள் மற்றும் சிதைவுகள் இலைகள் மற்றும் கணுவிடுக்குகளில் காணப்படும்.
  • அழுகிய தண்டுகள் (சிலநேரங்களில் ஆரஞ்சு நிறமாதல்).
  • தானியங்களைத் தாங்கும் பகுதிகள் வெளிறிய தோற்றம் பெறும் அல்லது ஆரஞ்சு முதல் ஊதா கலந்த பழுப்பு நிறத்திலான பூஞ்சைத் திசுக்களை வெளிப்படுத்தும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

கோதுமை

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நாற்றுக்களின் ஆரம்ப இலைகளில் பழுப்பு நிறச் சிதைவுகள் தோன்றும் அல்லது முளைத்தவுடன் பின்னர் இறந்துவிடும். முதிர்ந்த பயிர்களின் அடிப்புற இலைகளில் பழுப்பு நிறச் சிதைவுகள் காணப்படும் (சிலவேளைகளில் அடர் கனி உடல் இலை உறைகளில் தோன்றலாம்) மற்றும் சாம்பல்-பழுப்புக் கொப்புளங்கள் அடிப்புறக் கணுவிடைகளைப் பாதித்து பின்னர் மேற்புறத்திற்குச் செல்லும். அதிகமாகப் பாதிக்கப்பட்ட தண்டுகள் அழுகும் மற்றும் ஆரஞ்சு நிறப் பூஞ்சைகளின் வளர்ச்சி அதில் காணப்படும். நிலத்தில் சற்று சாதகமற்ற சூழ்நிலைகள் நிலவும்போது தண்டுகள் உடைந்துவிடும். சிறிய, பழுப்பு நிற, நீர் தேங்கிய சிதைவுகள் சிறு பூக்களில் காணப்படும், அவை பச்சையாகவே இருந்தாலும், நோயின் வளர்ச்சி நிலைகளில் வெளிறியத் தோற்றத்தினைப் பெறும். சூடான மற்றும் ஈரப்பதமான சூழல்களில், கதிர்களின் அடிப்பகுதியில் ஆரஞ்சுநிறப் பூஞ்சைத் திசுக்கள் உருவாகும் மற்றும் பூக்காம்பிலைகள் ஊதா கலந்த பழுப்பு நிறத்தில் மாறும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குளிர்ச்சியினைத் தாங்கும் பாக்டீரியாக்களை மண்ணில் அதிகளவில் பரப்புவதன் மூலம் நோய்க்குக் காரணமான பூஞ்சைகளின் வாழ்க்கைச் சுழற்சியினை தடுத்து மற்றும் அவற்றின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அஜோல்ஸ் (உதாரணமாக: டிரைஅடிமெனோல், பைடெர்டனோல், ப்ரோதியோகோனஸோல்), அல்லது ஸ்ட்ரோபிலுரின்ஸ் (உதாரணமாக: ஃப்லெஃக்ஸ்ட்ரோபின்) மற்றும் ஃபுபெரிடஸோல் அல்லது இப்ரோடியோன் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை விதைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மோனோக்ராபெல்லா நிவாலிஸ் எனும் மண்வழிப் பரவும் பூஞ்சைகளினால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. கோடைக்காலத்தில் பயிர்களின் எஞ்சிய பாகங்கள் அல்லது மண்ணில் இவை உயிர்வாழும். பனிப்பொழிவு அல்லது குளிர்காலத்தில், ஈரப்பதமான வானிலை ஏற்பட்டவுடன் பூஞ்சைகள் வளர்ந்து மற்றும் வித்துக்களை உருவாக்கும், அவை நாற்றுக்கள் மற்றும் அடிப்புற இலைகளைப் பாதிக்கும். இந்த வித்துக்கள் காற்று மற்றும் மேற்புற நீர் ஆகியவற்றினால் பரவும். இவை நிலத்தில் பிற பயிர்களின் பாகங்கள் மற்றும் பிற பயிர்களைப் பாதித்து, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 18-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இப்பூஞ்சைகளின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும், ஆனால் சில நேரங்களில், அவை குறைந்தது -6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் மற்றும் அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் கூட வளரும். குளிர்ந்த, உலர் சூழல்களில் பயிர்களின் அடிப்புற பாகங்கள் பாதிக்கப்படும், அங்கு நிலவும் ஈரமான, சூடான காலங்களைப் பொறுத்து தானியங்களைத் தாங்கும் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்புவகையிலான பயிர்வகைகள் கிடைத்தால் அவற்றைப் பயிரிடவும்.
  • சுண்ணாம்பு அல்லது நைட்ரஜன் கொண்டு அதிக உரமளிப்பதைத் தவிர்க்கவும்.
  • மேற்பரப்பு ஈரப்பதத்தைக் குறைக்க முயற்சிக்கவும், எடுத்துக்காட்டாக வடிகால் முறைகள் அல்லது மண்ணில் சிறிய துளைகள் இடுவதன் மூலம் குறைக்கலாம்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பாகங்களைக் கவனமாக நீக்கவும்.
  • மீதமிருக்கும் நோய்க்கான வித்துக்களை ஆழமாக உழுது நீக்கவும்.
  • இளவேனிற் காலத்தில் பொட்டாசியம் நிறைந்த கலவைகளை கொண்டு உரமளிப்பது மோனோகிராபெல்லா நிவாலிஸ் பரவுவதை தடுக்கிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க