அரிசி

மஞ்சள் கரிப்பூட்டை நோய்

Villosiclava virens

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சில அரிசி தானியங்களில் சிறிய ஆரஞ்சு, மென்மையான ‘பந்துகள்’ காணப்படும்.
  • இந்த 'பந்துகள்' உலர்ந்து கரும்பச்சை நிறமாக மாறும்.
  • தானிய நிறமாற்றம், எடை இழப்பு மற்றும் குறைவான முளைப்பு விகிதம் போன்றவை ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


அரிசி

அறிகுறிகள்

அறிகுறிகளானது கதிர்கள் உருவாகும்போது தென்படும், குறிப்பாக தானியக்கதிர்கள் முதிர்ச்சி அடையும்போது தென்படும். சுமார் 1 செ.மீ விட்டம் கொண்ட ஆரஞ்சு, வெல்வெட் போன்ற, முட்டை வடிவ பூஞ்சை கொத்துக்களானது கதிர்களின் ஒவ்வொரு தானியங்களிலும் தென்படும். பின்னர் இந்த தானியங்கள் மஞ்சள் கலந்த பச்சை அல்லது பச்சை கலந்த கருப்பு நிறமாக மாறும். ஒரு சில தானியங்கள் மட்டுமே கதிரில் வித்து பந்துகளை உருவாக்குகின்றன. தாவரத்தின் பிற பாகங்கள் பாதிக்கப்படுவதில்லை. தானிய எடை மற்றும் விதை முளைப்பு குறையும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளுக்கு 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 10 நிமிடங்களுக்கு விதைச் சிகிச்சையினை மேற்கொள்வதன் மூலம் நோய் ஏற்படுவதை குறைக்கலாம். கதிர்கள் முளைக்கும்போது, செப்பு அடிப்படையிலான பூசண கொல்லிகளை தெளித்து தடுப்பு நடவடிக்கைகளையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம்) மேற்கொள்ளலாம். கண்டறியப்பட்டதும், நோயைக் கட்டுப்படுத்தவும், விளைச்சலை சற்று அதிகரிக்கவும் செப்பு அடிப்படையிலான பூசண கொல்லிகளை பயிர்கள் மீது தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக்கொல்லிகளுடனான விதை சிகிச்சைகள் நோயை கட்டுப்பாட்டில் வைப்பதில்லை. தானியங்கள் முளைக்கும்போது (50 முதல்100% வரை) பின்வரும் தயாரிப்புகளை பாதுகாப்பு நடவடிக்கையாக தெளிப்பது பயனுள்ளதாக இருக்கும்: அசாக்சிஸ்டிரோபின், புரோபிகோனசோல், குளோரோதலோனில், அசாக்சிஸ்டிரோபின் + புரோபிகோனசோல், ட்ரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் + புரோபிகோனசோல், ட்ரைஃப்ளோக்சிஸ்ட்ரோபின் + டெபுகோனசோல். நோய் கண்டறியப்பட்டவுடன் வளர்ச்சியை திறம்பட தடுக்க பிற தயாரிப்புகள் உதவக்கூடும்: ஆரியோஃபங்கின், கேப்டன் அல்லது மான்கோசெப்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயின் அறிகுறிகளானது வில்லோசிக்லாவா விரென்ஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த நோய்க்கிருமி தாவரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் அறிகுறிகளானது பூ பூத்த சிறிது காலத்திற்கு பின் அல்லது கதிர் நிரப்பும் நிலையில் மட்டுமே தோன்றும். அதிக ஒப்பு ஈரப்பதம் (>90%) , அடிக்கடி மழைப்பொழிவு மற்றும் 25-35 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பூஞ்சைக்கு சாதகமாக இருப்பதால், வானிலை நிலவரம் இந்த நோய்த்தொற்றின் விளைவுகளை தீர்மானிக்கும். அதிக நைட்ரஜன் கொண்ட மணல்களும் நோய்க்கு சாதகமாக அமையும். பொதுவாக சீக்கிரம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் மஞ்சள் கரிப்பூட்டையினால் குறைவாக பாதிக்கப்படும். மோசமான சூழலில், நோய் கடுமையாக இருக்கக்கூடும் மற்றும் இழப்பு 25% வரை ஏற்படக்கூடும். இந்தியாவில், இந்த நோய் தொற்றினால் 75% வரை விளைச்சல் இழப்பு ஏற்பட்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து ஆரோக்கியமான விதைகளை பெற்று அவற்றைப் பயன்படுத்தவும்.
  • கிடைக்கக்கூடிய எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • சாத்தியமானால் நோயின் தாக்கத்தை தவிர்க்க பருவக்காலத்தின் ஆரம்பத்திலேயே நடவு செய்யவும்.
  • தொடர்ந்து தண்ணீரை மட்டும் பாய்ச்சல், வயல்களை ஈரப்பதமாக்குதல் மற்றும் காய வைத்தல் என மாற்றமான சூழல்களை பேணவும் (ஈரப்பதத்தைக் குறைத்தல்).
  • நைட்ரஜனை மிதமான அளவில் பயன்படுத்தவும், மற்றும் அவற்றை பிரித்து பயன்படுத்தவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை கண்காணிக்கவும்.
  • வயலில் அணைக்கட்டுகள் அமைத்து, நீர்ப்பாசன தடங்களை சுத்தமாக வைத்திருக்கவும்.
  • வயல்களில் உள்ள களைகளை அகற்றவும், அறுவடைக்குப் பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகள், கதிர்கள் மற்றும் விதைகளை நீக்கவும்.
  • அறுவடைக்குப் பின் வயலை ஆழமாக உழுவதும், வெயிலில் காய வைத்தலும் (சூரிய ஒளிமயமாக்கலும்), அடுத்த விளைச்சலின் போது நோய் பரவுவதை குறைக்கும்.
  • சாத்தியமான இடங்களில், பாதுகாப்பான உழவு மற்றும் தொடர்ச்சியாக நெற்பயிரை சாகுபடி செய்யவும்.
  • பாதிக்கப்படாத பயிர்களை கொண்டு 2- அல்லது 3 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சியைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க