Cochliobolus heterostrophus
பூஞ்சைக்காளான்
நோய்க்கிருமியின் வலிமை, தாவரவகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் பொறுத்து இந்த நோய்க்கான அறிகுறிகள் சற்று மாறுபடும். பழுப்பு நிற விளிம்புகளுடன், வெளிர் நிறத்தில், வைர வடிவம் முதல் நீளமான புண்கள் வரை கீழ்ப் புற இலைகளில் தோன்றும் மற்றும் பின்னர் அவை மெதுவாக இளம் இலைத் தொகுதிகளுக்குப் பரவும். இந்தப் புண்கள் பல்வேறு அளவுகளில் இருக்கும் மற்றும் இவை இலை நரம்புகளுக்கு அப்பால் நீட்டித்திருக்கும். நோய் ஏற்புத் திறன் கொண்ட தாவரங்களில், இவை இணைந்து, இலைகளின் பெரும்பகுதி கருகிப்போவதற்கு வழிவகுக்கும். நோய்த் தொற்றின் பிந்தைய நிலைகளில், சோளக்காதுகள் பழுப்பு நிறத் தோலால் மூடப்பட்டு மற்றும் உருக்குலைந்து போகும். இலைச் சேதங்கள் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு, உடைந்த தண்டுகளுடன் கூடிய வாடிய தாவரங்களுக்கு வழிவகுக்கும். தாவரங்கள் கீழே சாய ஆரம்பிக்கும்.
டிரிகோடெர்மா அட்ரோவிரிடே எஸ்ஜி3403 உடனான உயிரியல் கட்டுப்பாடு நோய்க் கிருமியின் தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வயலில் இந்த சிகிச்சையின் செயல்திறனைக் காண்பிப்பதற்கு வயலில் சோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு, நோயை நன்கு கட்டுப்படுத்துகிறது. சாத்தியமான விளைச்சல் இழப்பு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் தாவரங்களின் வளர்ச்சி நிலை ஆகியவற்றிற்கு எதிராக நோயின் வளர்ச்சியை ஆராய்ந்த பிறகு பூஞ்சைக் கொல்லிகள் பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள். அதிவேகமாக செயல்படும், பரந்த அளவிலான ஏதேனும் தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது, உதாரணமாக 8-10 நாட்கள் இடைவெளியில் மான்கோசெப் (2.5 கிராம் / லி) நீர்.
இந்த நோய் காக்லியோபோலஸ் ஹெட்டிரோஸ்டிராப்பு (பைபோலாரிஸ் மேடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது) என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்தப் பூஞ்சை மண்ணில் உள்ள தாவரக் கழிவுகளில் வாழ்கிறது. நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது, இது வித்துக்களை உற்பத்தி செய்கிறது, இது காற்று மற்றும் மழைத் துளிகள் மூலம் புதிய தாவரங்களுக்குப் பரவுகிறது. இது இலைகளில் வளர்ந்து மற்றும் அதன் ஆயுட் சுழற்சியை 72 மணி நேரத்திற்குள் (நோய்த்தொற்று ஏற்பட்டதிலிருந்து புதிய வித்துக்கள் உற்பத்தி செய்யப்படும் வரை) நிறைவு செய்கிறது. ஈரப்பதமான வானிலை, இலை ஈரப்பதம் மற்றும் 22 முதல் 30 ° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை ஆகியவை பூஞ்சை வளர்ச்சி மற்றும் நோய்த்தொற்று செயல்முறைக்குச் சாதகமானதாக உள்ளது. இலைகளின் சேதங்களானது தாவர உற்பத்தித்திறனைக் குறைக்கிறது மற்றும் பருவ காலத்தின் தொடக்கத்தில் தொற்று ஏற்பட்டால், விளைச்சல் குறையக்கூடும்.

Put your product in front of farmers the moment they diagnose தென்னிந்தியச் சோளம் இலை கருகல் நோய் — right when they need a solution.
Explore
Explore the live agronomic data that powers Plantix disease pages.
Discover