கரும்பு

கரும்பின் வாடல் நோய்

Gibberella fujikuroi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தாவரத்தின் வெளிறிய நிறமாற்றம்.
  • குன்றிய வளர்ச்சி.
  • கருஞ்சிவப்பு முதல் இளஞ்சிவப்பு நிறம் வரையிலான கணுக்கள்.
  • குடைவான, உலர்ந்த கரும்பு தண்டுகள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

பெரும்பாலும், பயிரின் வளர்ச்சி நிலை முடிந்த பிறகு நோய் தானாகவே வெளிப்படும். இலைகள் மஞ்சள்-பச்சையாக மாறும், அடிப்புறத்தில் இருந்து அவற்றின் உறுதியிழக்கப்படும் மற்றும் உலர்ந்துவிடும். உச்சிப்பகுதிகள் வெள்ளையாக மாறும் அல்லது வெளிர் பச்சை நிற கூர்முனைகளால் மஞ்சள் மையநரம்புகள் சூழப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட கரும்புகளின் வளர்ச்சி குன்றும், எடை குறையும் மற்றும் கணுவிடைகள் வெறுமையானதாக மாறும், ஆனால் கணுக்கள் மற்றும் மொட்டுக்கள் பாதிக்கப்படாது. செங்குத்தாக வெட்டும்போது அடர் சிவப்பு முதல் ஊதா வரையிலான நிறத்தில் உட்புற திசுக்கள் இருக்கும், இது வளர்ச்சி பகுதிக்கு மேற்பகுதி வரை காணப்படும். மிகவும் பாதிப்புக்குள்ளான நேரங்களில் மகசூல் விரைவாக குறைந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஈரமான வெப்பக் காற்றினைக் கொண்டு 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 150 நிமிடங்கள் விதைகளுக்கு சிகிச்சையளிக்கலாம். பின்னர் 0.1% பிளீச் கரைசலில் 10 முதல் 15 நிமிடங்கள் விதைகளை மூழ்கி எடுக்கலாம். தயவுசெய்து சுகாதாரமான பாதுகாப்பு உபகரணங்கள், கை உறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்துகொள்ளவும். பின்னர் அந்த பாத்திரங்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கரும்பின் வாடல் நோய்க்கு எதிராக எவ்வித வேதியியல் சிகிச்சைகளும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

பருவமழைக் காலங்களில் அல்லது அதற்கு அடுத்த காலங்களில் நோய் அறிகுறிகள் காணப்படும். வேர் துளைப்பான்கள், கரையான்கள், செதில்கள், பஞ்சுப் பூச்சி ஆகிய பூச்சிகளால் ஏற்படும் காயங்களின்மூலம் பூஞ்சைகள் நேரடியாக பயிர்களுக்குள் செல்கின்றன. சூழலினால் ஏற்படும் அழுத்தங்களான வறட்சி மற்றும் நீர் தேங்குதல் போன்றவற்றினால் வாடல் நோய் ஏற்படுகிறது. ஈரப்பதத்தினால் ஏற்படும் அழுத்தங்கள், அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் போன்றவற்றுடன் இணைந்து ஒரே சமயத்தில் நிகழும்போது வாடல் நோய்க்கான எதிர்ப்பு திறன் பயிர்களில் குறைகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைகள் அல்லது நாற்றுகளை உபயோகிக்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர்கள் கொண்டு மறுபயிரிடலைச் செய்யலாம்.
  • உரங்களை, முக்கியமாக நைட்ரஜனை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
  • களத்தில் வேலை செய்யும்போது பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • சிறந்த வடிகால் முறையினை ஏற்படுத்தவும் மற்றும் அதிகப்படியான நீர்ப்பாசனத்தினைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் முந்தைய பயிர்களின் எஞ்சிய பகுதிகளை அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க