புகையிலை

ஆல்டர்னேரியா செம்புள்ளி நோய்

Alternaria alternata

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் இரு புறத்திலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் பழுப்பு அல்லது கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர், ஒழுங்கற்ற அல்லது வட்ட வடிவிலான சிதைந்த பகுதிகள், சில நேரங்களில் உடையக்கூடிய காகிதம்-போன்ற அமைப்பு காணப்படும்.
  • இளம் கனிகளில் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் அடர் புள்ளிகள் காணப்படும், பின்னர் இவை தக்கைப்போன்ற திசுக்களால் மூடப்பட்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


புகையிலை

அறிகுறிகள்

ஆரம்பத்தில், இளம் இலைகளில் சிறிய பழுப்பு முதல் கருப்பு நிற புள்ளிகளாக காயங்கள் ஏற்படும், இவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களை ஓரங்களுக்கு அருகே ஏற்படுத்தும். இந்தக் காயங்கள் ஒழுங்கற்ற அல்லது வட்ட வடிவில் சிதைந்த பகுதிகளாக விரிவடையும், இது இலைகளின் பெரும்பகுதிகளை மூடிக்கொள்ளும். திசு அழுகல் மற்றும் பச்சைய சோகையானது நரம்புகள் நெடுகிலும் பரவும். இந்த காயங்கள் தட்டையாக மற்றும் இலைகளின் இருபுறமும் காணப்படும். முதிர்ந்த காயங்கள் அதன் நடுப்பகுதியில் உடையக்கூடிய காகிதம் போன்ற அமைப்பை ஏற்படுத்தும். முதிர்ச்சியற்ற பழங்களில் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் சற்று நீர்தோய்த்த கரும் புள்ளிகள் காணப்படும். அதிகம் முதிர்ச்சியடைந்த பழங்களில், இந்த காயங்களானது சிறிய புள்ளிகள் முதல் பெரிய வடுக்கள் வரை மாறுபடும். பழத்தோல் தக்கை போன்ற தடுப்பை உருவாக்குகிறது, இது மேற்பரப்பில் இருந்து வெடிப்பு போன்று தோன்றும். தக்கை போன்ற திசு கீழே விழுந்தால், பள்ளங்கள் அல்லது வடுக்கள் தென்படும். பழுப்பதற்கு முன்னரே பழங்கள் கீழே விழுதல் மிகவும் பொதுவாகக் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

காப்பர் ஆக்சிகுளோரைடு அடிப்படையிலான கரிம பூஞ்சைக்கொல்லிகள் ஆல்டர்னேரியா செம்புள்ளி நோய்க்கு எதிராக சிறந்த பலனை அளிக்கிறது. இந்த நோயை எதிர்த்து போராடும் வகையில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களிடமிருந்து தகவல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இப்ரோடியோன், குளோரோதலோனில், மற்றும் அசாக்சிஸ்டிரோபின் அடிப்படையிலான பூஞ்சைக்கொல்லிகள் ஆல்டர்னேரியா செம்புள்ளி நோய்க்கு சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது. பிராப்பிகோனாஜொல் மற்றும் தியோபனேட் மெத்தில் அடிப்படையிலான தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்புத் திறன் வளர்ச்சியைக் குறைக்க குறிப்பிடத்தக்க செறிவுகளுடன் பின்பற்றி பல்வேறு முறை நடவடிக்கைகளுடன் பூஞ்சைக்கொல்லிகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது காற்று அல்லது நீர் துளிகளினால் காற்றில் பரவும் வித்துக்கள் மூலம் பரவுகிறது. மழைப் பொழிவு அல்லது ஈரப்பதத்தின் திடீர் மாற்றங்களானது கிளைகள், இலை அல்லது பழத்தின் புள்ளிகளில் உள்ள பூஞ்சைக் கட்டமைப்புகளில் இருந்து வித்துக்கள் உற்பத்தியாவதற்கும், வெளியேறுவதற்கும் ஆதரவாக உள்ளது. ஆல்டர்னேரியா செம்புள்ளி நோய் மனிதர்களால் கொண்டு செல்லப்படும் நாற்றங்காலினால் தோப்புகளுக்கிடையே பெரும்பாலும் பரவுகிறது. இளம் இலைகளில், அறிகுறிகளானது நோய் தொற்று ஏற்பட்ட 36 முதல் 48 மணி நேரங்களுக்குள் ஏற்படுகின்றன. இதழ்கள் விழுந்த 4 மாதங்கள் வரை பழங்களில் நோய்த் தொற்றுப் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து ஆரோக்கியமான தாவரப் பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • தாவரங்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உங்கள் பயிர்களுக்கு முறையாக உரமளிக்கவும், ஆனால் அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை பயன்படுத்தவேண்டாம்.
  • நீர் அழுத்தம் அல்லது அதிகப்படியான நீர்ப்பாசனம் பழ வெடிப்பை ஏற்படுத்துவதால், வயல்களுக்கு நல்ல வடிகால் முறையை வழங்கவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • தாவரங்களின் இடைவெளியை அதிகரித்து நல்ல காற்றோட்டத்தை ஆதரிக்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தாவரங்கள் அல்லது வயல்களைக் கண்காணிக்கவும்.
  • வித்துக்களின் மூலத்தை அகற்றி, பழத் தொற்றுகளைக் குறைக்க பாதிக்கப்பட்ட கிளைகளைச் சரிசெய்யவும்.
  • வயலில் இருந்து முதிர்ந்த பழங்கள் மற்றும் இறந்த கிளைகளை சேகரிக்கவும்.
  • அறுவடை காலத்தில் சிட்ரஸ் பழங்களை வரிசைப்படுத்துதல், தரப்படுத்துவதன் மூலம் சேமிப்பு மற்றும் போக்குவரத்து காலத்தில் நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க