மற்றவை

மண்டல இலைப்புள்ளி நோய்

Microdochium sorghi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் சிவந்த-பழுப்பு மற்றும் நீர் தோய்த்த சிதைவுகள் காணப்படும், பின்னர் அது செறிவு முறையில் விரிவடைந்து, கருஞ்சிவப்பாகும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகி, வாடிவிடும்.
  • இலை உறைகளும் கதிர்களும் கூட பாதிக்கப்படும்.
  • கதிரில் கருகல் நோயின் அறிகுறிகள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

இந்த நோய்க்கான அறிகுறிகள் இலைகள், இலை உறைகள் மற்றும் கதிர்கள் ஆகியவற்றில் தோன்றும். இலைகளில் சிவந்த-பழுப்பு மற்றும் நீரில் தோய்த்த சிதைவுகள் உருவாகும், சில நேரங்களில் குறுகிய, வெளிர் பச்சை ஒளிவட்டத்துடன் உருவாகும். அவை அளவில் பெரிதாகும்போது, சிவந்த எல்லையால் சூழப்பட்ட வெளிர் பழுப்பு நிற மையத்தைக் கொண்ட சிதைவுகளாக உருவாகின்றன. அவை இலை ஓரத்தில் ஏற்படும் போது அரைவட்ட வடிவிலும், நடுநரம்பில் ஏற்படும் போது வட்ட வடிவிலும் இருக்கும். வெளிறிய மற்றும் கருத்த வரிகள் மாற்று அல்லது ஜோநெட் அமைப்பைக் கொண்டிருக்கும். இறுதியில், நோய் தீவிரமாகும் போது, சிதைவுகள் மொத்த இலையையும் பாதித்துவிடுகிறது. இலை உறைகளின் மீது, வேறுபட்ட நீளம், வடிவம் மற்றும் அளவுகளைக் கொண்ட கருஞ்சிவப்பு அல்லது கருண்ட ஊதா அல்லது பழுப்பு நிற சிதைவுகள் தோன்றும். நோய் பாதிக்கப்பட்ட இலை உறைகள் மஞ்சள் நிறமாகி, வாடி, இறந்துவிடும். பல பூஞ்சைகள் (செலேரோட்டியா) சிதைந்த புண்களில் காணப்படும். பாதிக்கப்பட்ட கதிர்கள் கருகிப்போகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராக எந்த உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கிடைக்கவில்லை. நோய் தாக்கம் அல்லது தீவிரத்தைக் குறைக்க உதவும் வகையில் ஏதேனும் முறைகளை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சை கொல்லியுடனான ரசாயன சிகிச்சை முறை அவற்றின் அதிக செலவினால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கப்படவில்லை. அறுவடைக்குப்பிறகு கழிவுகளை பராமரித்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை, மிகவும் சாத்தியமான நோய் பராமரிப்பு முறைகள் ஆகும்.

இது எதனால் ஏற்படுகிறது

குளோசெர்கோஸ்போரா சோர்கி என்னும் பூஞ்சையால் இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகிறது. இது பல ஆண்டுகளுக்கு விதைகள் அல்லது மண்ணில் உயிர்வாழக்கூடியது. செலேரொட்டியா( புண்கள் மீது காணப்படும் சிறிய கரும் புள்ளிகள்) என்று அழைக்கப்படும் பூஞ்சை உள்ளுறைந்த கட்டமைப்புகள் நோய்தொற்றுக்கு முக்கிய காரணமாக உள்ளது, இது உகந்த காலநிலையின் போது, உதாரணமாக சூடான மற்றும் ஈரமான வானிலையில், நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்துகின்றது. இந்த நோய்தொற்று தண்ணீர் தெளிப்பு அல்லது காற்றின் மூலம் மண்ணிலிருந்து, முதிர்ந்த கீழ்ப்புற இலைகளுக்கு பரவும். சாதகமான நிலையில், நோய் தாவரங்களுக்கு படிப்படியாக பரவி, அனைத்து இலைகளிலும் சிதைவுகள் ஏற்படுகிறது. சோளத்தில் ஜோநெட் இலைப்புள்ளி நோய் ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் சோளம் மற்றும் திணை உட்பட மற்ற புல் இனங்களையும் பாதிக்கலாம். இந்த மாற்று புரவலன்கள் பின்வரும் பருவங்களுக்கு மூல நுண்ணுயிர் தேக்கமாக விளங்குகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மற்றும் ஆரோக்கியமான தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும், இலை ஈரப்பதத்தை குறைக்கவும்.
  • நைட்ரோஜன் உரங்கள் நோய் ஏற்படுவதை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, ஆதலால் அவற்றை பயன்படுத்தவும்.
  • நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • மண்ணின் பிஹெச் மதிப்பை 6 முதல் 7 வரை பராமரிக்கவும்.
  • தாவரக் கழிவுகளை சேகரித்து, அவற்றை வயல்களுக்கு அப்பால் தொலைவில் ஆழமாக புதைத்துவிடவும் அல்லது எரித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க