பப்பாளி

பப்பாளி சாம்பல் நோய்

Oidium caricae-papayae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலை விளிம்புகளின் கீழ்பகுதியை நீர் தோய்த்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளை துகள்கள் மூடிக்கொள்ளும்.
  • மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் வெளிர் பச்சை முதல் பழுப்பு நிற புள்ளிகள் மேல்பக்கங்களில் அவ்வப்போது காணப்படும்.
  • பழுக்காத பழங்களில் வெண்ணிற பூஞ்சைத் திட்டுக்கள் காணப்படும்.
  • அதிகமாக பாதிப்படைந்த இலைகள் பின்னர் உலர்ந்து, உள்நோக்கி சுருண்டுகொள்ளும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பப்பாளி

அறிகுறிகள்

வெண்ணிற மாவு போன்ற பூஞ்சை பூச்சிகள் நீர் தோய்த்த புள்ளிகளுடன் முதலில் இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். இது பெரும்பாலும் இலை நரம்புகளுக்கு அருகில், இலை காம்புகளில், மற்றும் பூக்களின் அடிப்பகுதியில் காணப்படும். சில நேரங்களில், இலைகளின் மேற்பகுதியில் வெளிர் பச்சை முதல் மஞ்சள் புள்ளிகள் காணப்படும். சில நேரங்களில் இது வெள்ளை பூஞ்சைகளினால் மூடப்பட்டிருக்கும். இந்த புள்ளிகள் சிதைந்து பழுப்பு நிறமாக மாறி, பின்னர் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழ்ந்து கொள்ளும். அதிகமாக பாதிப்படைந்த இலைகள் பின்னர் உலர்ந்து, உள்நோக்கி சுருண்டுகொள்ளும். பழங்களில் வெவ்வேறு அளவிலான வெண்ணிற பூஞ்சை பூச்சிகள் காணப்படும். இந்த நோய்த்தொற்று பழமையான மரங்களில் குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனினும், இளம் தாவரங்களில் இந்த நோய்தொற்று வளரும் திசுக்கள் இறந்து போதல், இலை உதிர்வு, தண்டு மற்றும் பழ சிதைவு மற்றும் முக்கியமாக குறைந்த விளைச்சல் முதலியவற்றை ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஈரப்பதமான கந்தகம், கந்தக தூசு அல்லது கந்தக எலுமிச்சை மற்றும் பொட்டாசியம் பைகார்போநேட் ஆகியவை இந்த நோயை கட்டுப்படுத்த உதவுகின்றன. எனினும், சூடான காலநிலையில் இதனை பயன்படுத்தினால், இந்த சிகிச்சைகள் தாவரங்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், பேக்கிங் பவுடர், வேப்ப எண்ணெய் சாறுகள் மற்றும் சோப்பு தீர்வுகள் பயனுள்ளதாக இருக்கும். எல்லா சூழ்நிலையிலும், நோய் கடுமையானதாக இருந்தால் இந்த சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்காது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அஸோசிஸ்டிரோபின், மற்றும் மான்கோசெப் போன்ற பூஞ்சைக் கொல்லிகள் பப்பாளி சாம்பல் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்தொற்று ஓய்டியம் கேரிகே-பப்பாயே என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. பப்பாளி மரங்களில் மட்டுமே இந்த பூஞ்சை வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும். காற்றுகள் மூலம் விந்துக்கள் வயல்களுக்கிடையே, தாவரங்களுக்கிடையே பரவும். அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் இலைகள் பாதிக்கப்படலாம், ஆனால் முதிர்ந்த இலைகள் இன்னும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த பூஞ்சை மேல் தோலுக்குரிய தாவர திசுக்களில் குடியேறி, அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. குறைந்த ஒளி நிலைகள்,உயர் நிலை ஈரப்பதம், மிதமான வெப்பநிலை (18 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை) மற்றும் ஆண்டுக்கு 1500 முதல் 2500 மிமீ வரை மழைப்பொழிவு ஆகியவை நோயின் வளர்ச்சி மற்றும் நோயின் தீவிரத்தை இன்னும் மேம்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புதிறன் கொண்ட தாவர வகைகளை நட வேண்டும்.
  • ஒவ்வொரு வரிசைக்கும் போதுமான இடைவெளியைக் கொண்ட நன்கு காற்றோட்டமான பகுதிகளில் மரங்களை நட வேண்டும்.
  • அதிக ஈரப்பதம் மற்றும் 24° செல்சியசிற்கு கீழே உள்ள வெப்பநிலையில் தாவரங்கள் நடுவதைத் தவிர்க்கவும்.
  • மேல்நிலை தெளிப்பானைக் கொண்டு நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • தினமும் அதிகாலையில் மரங்களுக்கு நீர் பாய்ச்சவும்.
  • வேர் பகுதிகளில் நீர் பாய்ச்சவும்.
  • சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அளிப்பதை உறுதி செய்து, உயர் நைட்ரஜன் கொண்ட உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை நீக்கவும் மற்றும் ஏதேனும் தாவரக் கழிவுகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க