தக்காளி

தக்காளியின் செம்பழுப்பு நோய்

Fruit Deformation

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • பழங்களில் செறிவுடைய பிளவுகள் காணப்படும் மற்றும் அவற்றின் புறத்தோல் சாம்பல் நிறத் தோற்றத்தைப் பெற ஆரம்பிக்கும்.
  • இந்தக் கோளாறு முக்கியமாகத் தண்ணீர் அல்லது ஈரப்பதம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படுகிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

பல, சிறிய அளவிலான, முடி போன்ற பிளவுகளின் செறிவான தோற்றம் தொடர்ந்து தக்காளிப்பழத் தோலில் தோன்ற ஆரம்பிக்கும். பழத்தின் புறத்தோல் சாம்பல் நிறத் தோற்றத்தைப் பெற ஆரம்பிக்கும். மேலும் விரிசல்கள் சில மில்லி மீட்டர் நீளமும், மேலும் இவை பொதுவாக முதிர்ச்சியின் தொடக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கும். அதிகப்படியான பூச்சிக் கொல்லிகளுக்கு நேரடியாக வெளிப்படுத்தப்படும் பழங்கள் இந்த வகையான காயங்களை ஏற்படுத்துகிறது. பூச்சிக் கொல்லிகள் உட்புறத் தோலின் நெகிழ்வுத் தன்மையை அழித்து, விரிசல் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கான உயிரியல் சிகிச்சைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும், ஏனெனில் சேதங்கள் ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், அவற்றைச் சரிசெய்ய முடியாது. இருப்பினும் இந்த குறைபாட்டின் அறிகுறிகளைத் தவிர்க்க, பூச்சிக்கொல்லிகளை அதிகப்படியாகப் பயன்படுத்துவதையும், அவற்றை ஒன்றாக கலப்பதையும் தவிர்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

செம்பழுப்பு நோயால் ஏற்படும் தழும்புகள் சிறியதாகவும், குட்டையாகவும், மேலோட்டமாகவும் இருந்தாலும் இந்த நோயின் உடலியல் ரீதியான கோளாறுகள் விரிசல் நோயுடன் குழப்பிக் கொள்ளப்படும். இது பெரும்பாலும் மிகவும் ஈரப்பதமான கண்ணாடிக் கூடிகளின் சூழல்கள் மற்றும் மண்ணின் ஈரப்பதம் மற்றும் பகல் / இரவு வெப்பநிலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. பொருத்தமற்ற நீரின் அளவு (வறட்சி, நீர்ப்பாசனம் / மழையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், வெள்ளம்), அதிகப்படியான/குறைவான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒளியின் தீவிரம் போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும். இறுதியாக பூச்சிக் கொல்லிகளின் தவறான அல்லது அதிகப்படியான பயன்பாடு இந்த நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும். பழங்கள் வளரும் நுனிகளில் இருப்பதாலும் மற்றும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக புதிய தண்டுப்பகுதிகளுடன் போட்டியிட வேண்டியிருப்பதால், பழங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்படைகின்றன.


தடுப்பு முறைகள்

  • பூச்சிக்கொல்லியின் சிகிச்சைகள் குறித்து கவனமாக இருக்கவும் மற்றும் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பல்வேறு பூச்சிக் கொல்லிகளைக் கலப்பதைத் தவிர்க்கவும்.
  • பழங்களைப் பாதுகாக்க உங்கள் தாவரங்கள் போதுமான அளவு இலைத்திரள்களைப் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • வெயில் காலத்தில் மண்ணைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் மற்றும் நீராவிப்போக்குகளைக் குறைக்கவும் போதுமான அளவு தழைக்கூளங்களைப் பயன்படுத்தவும்.
  • மண்ணில் சிறந்த வடிகாலை அமைக்க உயரமான படுகைகள் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
  • காலை நேரத்தின் நடுப்பகுதியில் தண்ணீர் பாய்ச்சவும் மற்றும் வெப்பமான பகல் நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவும்.
  • முழுத் தாவரத்தையும் குளிர்ச்சியாக வைத்திருக்க நிழல் பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • பழங்களில் நிறம் தென்பட்டவுடனேயே அவற்றைச் சீக்கிரமாக பறித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க