பருத்தி

களைக்கொல்லி பிளீச் (சாயம்)

Herbicides Photosynthesis Inhibitors

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • நரம்புகளுக்கு இடையில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
  • இலை ஓரங்கள் மஞ்சள் நிறமாகி, மேல்நோக்கி வளைந்துகொள்ளும்.
  • அதிகப்படியான அளவுகள் பயன்படுத்தினால், திசுக்கள் 'வெண்மையாகி', இறந்துபோகும்.
  • அறிகுறிகள் முழு சூரிய ஒளியில் மிக விரைவாக உருவாகும்.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

அறிகுறிகளானது பயன்படுத்தப்படும் தயாரிப்பு, பயன்படுத்தப்படும் நேரம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும். பழைய இலைகள் புதிய இலைகளைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இலைகளில் நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகை அல்லது பல்வண்ண புள்ளியமைப்பு, அத்துடன் நரம்புகளுக்கு இடையேயான திசுக்கள் மஞ்சள் நிறமாகுதல் போன்றவை ஏற்படும். இலை ஓரங்கள் மஞ்சள் நிறமாகி, மேல்நோக்கி வளைந்துகொள்ளும். படிப்படியாக, இலைகள் மடிந்து, இரண்டு அல்லது ஐந்து நாட்களுக்குள் உதிர்ந்துவிடும், இது முழுமையான சூரிய ஒளியில் இன்னும் அதிகரிக்கிறது ("காகிதப் பை" போன்ற தோற்றம்). இலைகளுக்கு இவை விரைவாக தீங்கு ஏற்படுத்தும் காரணத்தினால், இவை பெரும்பாலும் "நிறம் நீக்கி" என்ற தகுதியைப் பெறுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தச் சேதத்திற்கு எந்தவித உயிரியல் கட்டுப்பாட்டுத் தீர்வுகளும் இல்லை. தடுப்பு மற்றும் நல்ல வேளாண் நடைமுறைகள் ஆகியவை இந்த தீங்கு ஏற்படுவதிலிருந்து தவிர்ப்பதற்கான முதல் முக்கியமான வழியாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். களைக்கொல்லி தெளிப்பதற்கு திட்டமிடுவதற்கு முன்பு, நீங்கள் கையாளும் களை வகைகளை தெரிந்து வைத்திருக்கவும் (அடிப்படையில் அகண்ட இலைகளையுடைய களைகளையும் புற்களையும்) மற்றும் வேறு எந்த முறையும் இந்தத் தேவைக்குப் பொருத்தமாக இருக்காது என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும். கவனமாக களைக்கொல்லியைத் தேர்ந்தெடுத்து, கவனமாக லேபிளைப் படிக்கவும், மேலும் வழிமுறைகளையும் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளையும் பின்பற்றவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது பிஎஸ்ஐஐ தடுப்பான்கள் குழுவின் களைக்கொல்லிகளினால் ஏற்படுகிறது, பிறவற்றுள் அட்ராசின், ப்ரோமோக்சினைல், டையூரான் மற்றும் ஃப்லுவோமெட்டூரான் ஆகியவையும் அடங்கும். இவை ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, அணுக்களில் உள்ள பச்சைய நிறமிகளை அழித்து, நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. களைகள் முளைப்பதற்கு முன் களைக்கொல்லிகள் மண்ணில் பயன்படுத்தப்பட்டால் (களைகள் காணப்படுவதற்கு முன்), இவை வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்டு, தண்ணீர் செல்லும் பாதை வழியே தளிர்களுக்கு மேல்நோக்கிச் செல்லும். இறுதியில், இவை இலைகளில், குறிப்பாக ஓரங்களில் படியும். களைகள் முளைத்த பிறகு பயன்படுத்தும் களைக்கொல்லி என்றால், இவை தாவரத் திசுக்களுக்கு உட்புறமாக தீங்கு விளைவித்து, தாவரத்தின் பிற பாகங்களுக்கு செல்லாது. பல வகையான களைகளில் (உதாரணமாக புற்கள், கடுகு, பூனைக்காஞ்சொறிச் செடி வகை மற்றும் வெள்ளை முள்ளங்கி) எதிர்ப்புத் திறன் உருவாகுதல் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும்.


தடுப்பு முறைகள்

  • நீங்கள் கையாளும் களை வகைகளை தெரிந்து கொள்ளுங்கள் (அடிப்படையில் அகண்ட இலைகளை உடைய களைகளையும் புற்களையும்).
  • உங்கள் தேவைக்கு மிகவும் சரியாக பொருந்தக்கூடிய களைக்கொல்லியைக் கவனமாகத் தேர்வு செய்யவும்.
  • லேபிளை கவனமாகப் படித்து, வழிமுறைகளையும், குறிப்பிடப்பட்டுள்ள சரியான அளவுகளையும் பின்பற்றவும்.
  • பல்வேறு களைக்கொல்லிகளுடனான மாசுபாட்டைத் தவிர்க்க, தெளிக்கும் கொள்கலனைப் பயன்படுத்திய பிறகு எப்போதும் அதனை சுத்தம் செய்யவும்.
  • பிற வயல்களின் மீது தெளிப்பக்கப்படுவதைத் தவிர்க்க, காற்றடிக்கும்போது களைக்கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்க்கவும்.
  • களைகளை சிறந்த முறையில் இலக்காகக் கொள்வதற்கு, தெளிப்பதனைக் குறைக்கும் வசதி கொண்ட முனைகளை உடைய தெளிப்பானைப் பயன்படுத்தவும்.
  • முடிவுகளைக் கண்காணிக்க மேய்ச்சல் மற்றும் வைக்கோல் வயல்களில் களைக்கொல்லியைச் சோதித்துப் பார்க்கவும்.
  • வானிலை முன்னறிவிப்பைக் கவனமாக சரிபார்த்து, மழையின்போது களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டாம்.
  • பயன்பாட்டுத் தேதிகள், தயாரிப்புகள், வயல் பகுதிகள் மற்றும் வானிலை நிலைகள் ஆகியவற்றின் பதிவுகளை வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க