Cell injury
மற்றவை
5 mins to read
இலை நரம்புகளுக்கு இடையில் பொசுங்கிய, வெளிர் பழுப்பு நிற திட்டுகள் தோன்றும். கூடுதலாக மலர்ந்த பூக்கள் மற்றும் இளம் பழங்கள் சேதமடையும். இலைகளில் காயங்களும் அல்லது அதன் மேற்பரப்பில் குழிகளும் காணப்படும், அத்துடன் நிறமாற்றம், நீர் தோய்த்த திசு போன்ற அறிகுறிகளும் தென்படும். காயமடைந்த திசுக்கள் தோல் நிறமாகத் தோன்றி, துர்நாற்றத்தைத் தரக்கூடும். இலைகள் முன்கூட்டியே உதிர்ந்து விடக்கூடும்.
இது இயற்கையாக நிகழும் ஒரு விஷயம் என்பதால் வேதியியல் (இரசாயன) கட்டுப்பாடு சாத்தியமில்லை.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இது இயற்கையாக நிகழும் ஒரு விஷயம் என்பதால் வேதியியல் (இரசாயன) கட்டுப்பாடு சாத்தியமில்லை.
தாவர திசுக்களுக்குள் பனி உருவாகி தாவர அணுக்களை சேதப்படுத்தும்போது உறைபனி சேதம் ஏற்படுகிறது, எனவே, குளிர்ச்சியான வெப்பநிலையை விட பனி உருவாவதே தாவரத்தை உண்மையில் காயப்படுத்துகிறது. குளிர்ந்த காற்று வேர்களிலிருந்து ஈரப்பதத்தை நீக்குவதைக் காட்டிலும் பசுமையான இலைத்திரள்களிலிருந்தே ஈரப்பதத்தை அதிகம் நீக்குகிறது. இது குறிப்பாக இலைகளின் நுனிகள் மற்றும் ஓரங்களில் இலைகளை பழுப்பு நிறமாக்குகிறது. முழுமையாக வளர்ச்சி அடைந்த தாவரங்களை விட இளம் தாவரங்கள் உறைபனி பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றன.