தக்காளி

தக்காளியின் கீறல் நோய்

Physiological Disorder

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • சிதைந்த வடுக்கள் பழங்களின் நெடுகிலும், அவற்றைச் சுற்றிலும் காணப்படும்.
  • இந்த குறைபாடானது பழங்கள் உருவாகும்போது நிலவும் குறைவான வெப்பநிலைகள் மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
  • இவற்றை நம்மால் திறம்பட தடுக்கவே கூடும், இவை ஏற்பட்டுவிட்டால் அவற்றுக்குச் சிகிச்சை அளிக்க இயலாது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

கீறல் நோய் என்பது பழங்களின் நெடுகிலும் பழுப்பு நிற வடுக்களை ஏற்படுத்தி, இறுதியாக ஆங்காங்கே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு உடலியல் கோளாறு ஆகும். இந்த வடுக்களானது பழங்களின் நீளம் மற்றும் அகலத்தின் நெடுகிலும் ஓரளவு பரவி, சில நேரங்களில் தண்டுடன் இணையும் பூக்களின் அடிப்பகுதியில் கீறல் போன்ற காயங்களை ஏற்படுத்தும், எனவே இது இப்பெயர் பெற்றது. பழங்களின் சதைகளில் வரித்தடங்கள் மற்றும் அவற்றின் மேற்பரப்பு உருக்குலைந்து போகுதல் போன்றவையும் பொதுவாக காணப்படுகிறது. சேதமடைந்தத் திசுக்கள் அவற்றின் நெகிழ்தன்மையை இழக்கும் மற்றும் பழங்கள் முறையாக வளர்ச்சியடையாது. ஒருமுறை சேதங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டால், பின்பு எதுவும் செய்ய இயலாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த உடலியல் கோளாறுக்கு எதிராக உயிரியல் சிகிச்சைகள் எதுவும் இல்லை. தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இது எதனால் ஏற்படுகிறது

கீறல் நோய் என்பது தாமதமாக பூக்கும்போது மற்றும் சீக்கிரம் காய்க்கும்போது குறைவான வெப்பநிலை மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் உடலியல் குறைபாடு ஆகும். இளம் பழங்களின் வளர்ச்சியின் போது, ஒன்று அல்லது பல மகரந்தப்பைகள் சூற்பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு, பழங்கள் உருவாகும் போது அவற்றின் வெளிப்புறத்தில் வடுக்களை ஏற்படுத்தும். வெப்பநிலையின் உணர்திறன் வகைகளுக்கு இடையே மாறுபடும். சில தக்காளி வகைகள் பிறவற்றை விட அதிகம் பாதிக்கப்படக்கூடும், இதில் மாட்டுத்தக்காளிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படக்கூடியவை.


தடுப்பு முறைகள்

  • குளிர்ச்சியான சூழலை எதிர்க்கக்கூடிய மற்றும் தாக்குபிடிக்கக்கூடிய வகைகளைத் தேர்வு செய்யவும்.
  • பூக்கும் மற்றும் காய்க்கும் காலங்களில் சுற்றுசூழல் நிலைமைகளை மேம்படுத்தவும்.
  • இரவு நேரத்தில் குறைவான வெப்பநிலையையும், ஈரப்பதத்தின் தீவிரங்களையும் தவிர்க்கவும்.
  • தாவரங்களின் ஆற்றல்கள் வீணாவதைத் தவிர்க்க வடுக்கள் தென்படும் பழங்களைச் சீக்கிரமாகவே அகற்றிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க