திராட்சை

கோண இலை வாடல் நோய்

Pseudopezicula tetraspora

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் மங்கிய மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர் அவை சிவந்த பழுப்பு நிறமாக மாறும்.
  • சிதைந்த திட்டுக்களை சுற்றி மஞ்சள் ஓரங்கள் உருவாகும்.
  • நோய் தொற்றின் பிந்தைய பருவத்தில் சுருங்கிய புள்ளிகள் மற்றும் இலை உதிர்வு ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

ஆரம்பத்தில், காயங்கள் இலைகளில் மங்கிய மஞ்சள் நிற புள்ளிகள் போல் தோன்றும். மேலும் இலைகளை சூரியனில் காட்டும் போது, இதனை நன்கு காணலாம். இந்தப் புள்ளிகளில் இருக்கும் இரண்டாம் நிலை நரம்புகள், பழுப்பு நிறமாக மாறும். இந்த புள்ளிகள் பெரிதாகும் போது, அவை மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறி, மேலும் அவை முக்கிய நரம்புகளால் பிரிக்கப்படும்போது கோணவடிவமாக ஆகிறது (எனவே இந்த நோய் இப்பெயர் பெற்றது). இலைகளின் திசுக்கள் சிதைவடையும் போது, இந்த காயங்கள் பொதுவாக ஆரோக்கியமான மற்றும் நோயுற்ற திசுக்களுக்கு இடையே ஒரு மஞ்சள் நிறத்தை உருவாக்குகின்றன. சிவப்பு திராட்சை வகைகளில், இந்த ஓரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பருவத்தின் பிந்தைய காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்று, இலைகளில் சுருங்கிய புள்ளிகளின் வளர்ச்சி மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இது முதிர்ச்சியடைவதற்கு முன்னரே இலை உதிர்வு மற்றும் பாதிக்கப்பட்ட பூ கொத்துக்கள் உலர்ந்து போகுதல் முதலியவற்றை ஏற்படுத்தும். போட்ரிடிஸ் கருகல் நோய் போலன்றி, இந்த நோய் பெர்ரிகளின் நடுக்காம்புகளை பாதிக்காமல், தண்டுகளை மட்டும் பாதிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராக உயிரியல் சிகிச்சைகள் எதுவும் இல்லை. கடுமையான இழப்புகளைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழி, கடுமையாக பாதிக்கப்பட்ட கிளைகள் அல்லது முழு தாவரங்களை அகற்றுவதோடு, அவற்றை ஆழமாக புதைத்து எரித்து விடவும் அல்லது திராட்சை தோட்டங்களுக்கு அப்பால் எடுத்து சென்று அழித்து விடவும். நல்ல களையெடுக்கும் முறை மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களும் பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மழைக்காலத்திற்கு முன் மான்கொஸெப் கொண்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். தண்டுகள் வளரும் ஆரம்ப காலத்திலேயே இதனை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் மற்றும் பழங்கள் உருவாகும் போது பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், மேலும் மழைக்காலத்தின் போது இன்னும் அதிகமாக பராமரிக்கப்பட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் தொற்று பி.டெட்ராஸ் போரா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது குளிர்காலத்தில் திராட்சை தோட்டங்களின் தரையில் இருக்கும் பாதிக்கப்பட்ட இலைகளில் உயிர் வாழ்கிறது. எனவே, இலைத்தொகுதி அல்லாத செயலற்ற வெட்டுகள் பூஞ்சை பரவுவதற்கு ஒரு வழிப்பாதையாக இருப்பதில்லை. வசந்த கால ஈரமான காலநிலையில், கீழே விழுந்த இலைகளில் இருந்து பூஞ்சை வித்துக்கள் வெளியிடப்பட்டு, காற்று மற்றும் நீர் துளிகளால் புதிய இலைகள் மற்றும் மலர் தண்டுகளுக்கு பரவுகின்றன. வசந்த காலத்தில், சிதைந்துபோகும் இலைகள் மீது செயலற்ற நிலையில் இருக்கும் பூஞ்சையினால், நோய் தொற்றின் ஒரே ஒரு சுழற்சி மட்டுமே உள்ளது. எப்போதாவது, பல நாட்கள் தொடர்ச்சியான மழை பொழிவிற்கு பிறகு, திராட்சைக் கொடியில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட இலைகளின் இறந்த திசுக்களின் மீது சிதல்கள் உருவாகலாம். ஈரமான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால், வளரும் பருவத்தில் இந்த வித்துக்கள் எந்த நேரத்திலும் இரண்டாம் நிலை நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடும். இது ஏன் இந்த நோய் பல ஆண்டுகள் காணாமல் போகிறது, ஆனால் நீண்ட காலம் மழை பொழியும் போது இந்த நோய்த்தொற்று கடுமையானதாக இருக்கிறது என்பதை விவரிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தாவர பொருட்களை மட்டும் பெறவும்.
  • திராட்சைக் கொடிகளுக்கு இடையே போதுமான இடைவெளி விடவும்.
  • தாவரங்களுக்கு இடையே காற்று சுழற்சியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், உதாரணமாக சீர்திருத்துவதன் மூலம்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என திராட்சை தோட்டத்தை கண்காணிக்கவும்.
  • உயர் தரமான சுகாதாரத்தை பராமரிக்கவும், உதாரணமாக திராட்சை தோட்டத்தில் இருந்து களைகள் மற்றும் தாவரக் குப்பைகளை அகற்றுதல்.
  • உலர்ந்த அல்லது பாதிக்கப்பட்ட திராட்சைக் குழைகளை எரித்து அழித்து விடவும் அல்லது திராட்சை தோட்டங்களுக்கு அப்பால் எடுத்து சென்று ஆழமாக புதைத்து விடவும்.
  • திராட்சை தோட்டங்களுக்கு இடையில் அறுவடை செய்யப்பட்ட பழம் அல்லது இயந்திரங்கள் முதலியவற்றை எடுத்து செல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க